Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
அடிக்கடி தக்காளி சட்னி செய்வீங்களா? ஒருடைம் இந்த ஸ்டைலில் ட்ரை பண்ணுங்க.. வேற லெவல்-ல இருக்கும்..
Thakkali Kara Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் தோசைக்கு அடிக்கடி தக்காளி சட்னியை செய்வீர்களா? எப்போதும் ஒரே ஸ்டைலில் தான் தக்காளி சட்னி செய்வீர்களா? இப்படி ஒரே மாதிரி செய்து உங்களுக்கு போரடித்துவிட்டதா?
அப்படியானால் ஒருமுறை தக்காளி சட்னியை பூண்டு தட்டிப் போட்டு செய்யுங்கள். இந்த தக்காளி கார சட்னி தோசை, இட்லியுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இந்த சட்னியை செய்தால், 1 வாரம் வரை வைத்து சாப்பிடலாம். முக்கியமாக இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு தக்காளி கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தக்காளி - 5 (நறுக்கியது)
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
* பூண்டு - 15 பல்
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - சிறிது
* கறிவேப்பிலை - 2 கொத்து
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் தக்காளியை நறுக்கி சேர்த்து, அத்துடன்
சிறிது புளியை சேர்க்க வேண்டும்.
* பின்னர் அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு பூண்டு பற்களை ஒன்றிரண்டாக தட்டிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பிறகு அதில் தட்டி வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து நன்கு
பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து கிளறி, 5-7
நிமிடம் மூடி வைத்து கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான தக்காளி கார
சட்னி தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications











