Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
மதியம் டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப சாதத்துக்கு இந்த தக்காளி கடலைப்பருப்பு கூட்டு செய்யுங்க.. அள்ளும்..
Tomato Dal Kootu Recipe In Tamil: மதிய வேளையில் டக்கென்று சமையலை முடிக்க வேண்டுமா? எப்போதும் சாம்பார், புளிக்குழம்பு செய்து போரடித்துவிட்டதா? சிம்பிளாக சமையலை முடிக்க வேண்டுமா? உங்கள் வீட்டில் கடலைப் பருப்பும், தக்காளியும் இருந்தால், அருமையான சுவையில் கூட்டு செய்யலாம்.
இந்த தக்காளி கடலைப்பருப்பு கூட்டு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும். பேச்சுலர்கள் கூட வேகமாக சமையலை முடிக்க இந்த சமையலை செய்யலாம். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

உங்களுக்கு தக்காளி கடலைப்பருப்பு கூட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி கடலைப்பருப்பு கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலைப்பருப்பு - 100 கிராம்
* தேங்காய் - 2 சில்லு (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* சீரகம் - 1 டீஸ்பூன்
கூட்டு செய்வதற்கு...
* எண்ணெய் -2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 2 கொத்து
* தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் கடலைப்பருப்பை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் குக்கரில் ஊறு வைத்த கடலைப்பருப்பை கழுவி சேர்த்து, அதில்
சிறிது நீரை ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 4 விசில் விட்டு
இறக்க வேண்டும். விசில் போனதும் குக்கரை திறந்து கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து,
சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், வரமிளகாய், கறிவேப்பிலை
சேர்த்து, வெங்காயத்தை கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள்
தூள சேர்த்து, நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் குழம்பு மிளகாய் துளை சேர்த்து குறைவான தீயில் வைத்து
1 நிமிடம் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் வேக வைத்துள்ள கடலைப்பருப்பை நீருடன் அப்படியே சேர்த்து
கிளறி, 5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கிளறி,
உப்பு சுவை பார்த்து, 5 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க வைத்து
இறக்கி, பாதி கடலைப்பருப்பை மசித்து விட்டு, கொத்தமல்லியைத் தூவினால்,
சுவையான தக்காளி கடலைப்பருப்பு கூட்டு தயார்.
Image Courtesy: Apoorvaa's Virundu



Click it and Unblock the Notifications











