Latest Updates
-
ஜூன் 17-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சுக்கிரன் சிம்ம ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
இனிமே டீ குடிக்கும் போது இந்த 5 உணவுகளை தெரியாம கூட சாப்பிடாதீங்க - இல்லனா உங்களுக்குத்தான் ஆபத்து -
இதுல உங்க கை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்க உண்மையான குணத்தை சொல்றோம்.. -
அடுத்தமுறை தேங்காய் சட்னியை இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
1 கப் மீல் மேக்கர் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்களை காதலிக்க எல்லோரும் ஆசைப்படுவார்களாம் - நீங்க பிறந்த மாதம் இதுல இருக்கா? -
எச்சரிக்கை! இந்த 5 பழங்களை அதிகமா சாப்பிடாதீங்க.. இல்லன்னா முகப்பரு அதிகமா வந்துடும்.. -
இந்தியாவில் மது விற்பனையில் முன்னணியில் உள்ள டாப் 5 மாநிலங்கள் - தமிழ்நாடு முதல் இடத்தில் இல்லையாம் தெரியுமா? -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் இரட்டை ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
கர்நாடகா ஸ்பெஷல் முறுக்கு
தென்னிந்தியாவின் கர்நாடகாவில் கொடுபலே என்னும் அரிசி முறுக்கு மிகவும் பிரபலமானது. இது காரமாகவும், ருசியாகவும் இருக்கும். மாலையில் டீ, காபி குடிக்கும் போது, இது சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். நீங்களும் மாலையில் ஏதேனும் வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து சுவைக்க நினைத்தால், இந்த முறுக்கை செய்து சுவையுங்கள்.
இங்கு அந்த கொடுபலே என்னும் கர்நாடகா ஸ்பெஷல் முறுக்கின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 3 கப்
கடலை மாவு - 1/2 கப்
துருவிய தேங்காய் - 1 கப்
மிளகாய் தூள் - 1/4 கப்
மிளகு - 4-5
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கடலை மாவு, அரிசி மாவு ஆகியவற்றை ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் துருவிய தேங்காய், சீரகம், மிளகு, பெருங்காயத் தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை போட்டு, தண்ணீர் சிறிது ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அரைத்ததை பாத்திரத்தில் உள்ள மாவுடன் சேர்த்து, சிறிது உப்பு தூவி, 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் மற்றும் தண்ணீர் ஊற்றி மென்மையாக பிசைந்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அந்த மாவை கொஞ்சமாக எடுத்து, திரி போல் திரித்து, பின் முறுக்கு போன்று சுற்றிக் கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், கர்நாடகா ஸ்பெஷல் முறுக்கு ரெடி!!!



Click it and Unblock the Notifications