வீட்டுல உருளைக்கிழங்கும், பட்டாணியும் இருக்கா? இப்படி குருமா செய்யுங்க.. செமயா இருக்கும்..

Posted By:

Potato Peas Kurma Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் பூரி அல்லது சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கும், பச்சை பட்டாணியும் இருக்கா?

அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு அட்டகாசமான சுவையில் குருமாவை செய்யுங்கள். இந்த உருளைக்கிழங்கு பட்டாணி குருமா பூரி, சப்பாத்திக்கு மட்டுமின்றி, அப்பம், இடியாப்பம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

Potato Peas Kurma Recipe

முக்கியமாக இந்த குருமா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். உங்களுக்கு உருளைக்கிழங்கு பட்டாணி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

கீழே உருளைக்கிழங்கு பட்டாணி குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* ஏலக்காய் - 3
* கிராம்பு - 3
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 4 (நீளமாக கீறியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* உருளைக்கிழங்கு - 2 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
* பச்சை பட்டாணி - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப

அரைப்பதற்கு...

* துருவிய தேங்காய் - 3/4 கப்
* முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், முந்திரி, சோம்பு சேர்த்து சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, பட்டை, ஏலக்காய் மற்றும் கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து மஞ்சள் தூளை சேர்த்து, துண்டுகளாக்கப்பட்ட உருளைக்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் உருளைக்கிழங்கு மூழ்கும் வரை நீரை ஊற்றி கொதிக்க வைத்து, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து, 5 நிமிடம் குறைவான தீயில் வைத்து கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான உருளைக்கிழங்கு பட்டாணி குருமா தயார்.

Image Courtesy: yummytummyaarthi

[ of 5 - Users]
Story first published: Saturday, December 9, 2023, 16:30 [IST]
Desktop Bottom Promotion