Just In
- 1 hr ago 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- 2 hrs ago இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- 3 hrs ago உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- 3 hrs ago எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
Don't Miss
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதிங்க!
- News எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க துடித்த காங்கிரஸ் - பிரதமர் மோடி கடும் ‛அட்டாக்’
- Movies லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நாவூற வைக்கும்... நெய்மீன் கருவாடு தொக்கு
கருவாட்டை தொக்கு செய்தால், அது சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் போன்றவற்றிற்கு அற்புதமான சைடு டிஷ்ஷாக இருக்கும். கருவாட்டில் பல வகைகள் உள்ளன. அதில் நெய்மீன் கருவாடு சூப்பராக இருக்கும்.
கருவாடு பலரும் விரும்பி சாப்பிடும் ஒன்று. இதன் மணம் வேண்டுமானால் நன்றாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் சமைத்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். அதிலும் கருவாட்டை தொக்கு செய்தால், அது சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் போன்றவற்றிற்கு அற்புதமான சைடு டிஷ்ஷாக இருக்கும். கருவாட்டில் பல வகைகள் உள்ளன. அதில் நெய்மீன் கருவாடு சூப்பராக இருக்கும்.
இப்போது அந்த நெய்மீன் கருவாடு கொண்டு எப்படி தொக்கு செய்வதென்பதைக் காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
MOST READ: சுவையான... மட்டன் கைமா கிரேவி
தேவையான பொருட்கள்:
* நெய்மீன் கருவாடு - 2 துண்டு
* சின்ன வெங்காயம் - 1/2 கப் (நறுக்கியது)
* பூண்டு - 1/8 கப் (நறுக்கியது)
* தக்காளி - 3 (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 3/4 கப்
செய்முறை:
* முதலில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டின் தோலை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
* பின்பு அதில் சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அடுத்து தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு மென்மையாக வதக்கவும்.
* பிறகு கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். அதே சமயம் மறுபுறம் கருவாட்டை கழுவி, வெதுவெதுப்பான நீரில் கருவாடை போட்டு, பத்து நிமிடம் ஊற வைத்து, பின் நீரை வடிகட்டிவிடவும்.
* பின் வாணலியில் கழுவிய கருவாடை போட்டு, அதில் மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, அதில் கருவாடு மூழ்கும் வரை நீரை ஊற்ற வேண்டும்.
* பின்பு நன்கு கிளறவிட்டு மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். அடுத்து மூடியைத் திறந்து, கருவாடு வெந்துள்ளதா என்பதை கரண்டியால் அழுத்தி பார்க்க வேண்டும். கருவாடு மென்மையாக இருந்தால் வெந்துவிட்டது என்று அர்த்தம்.
* இப்போது கருவாட்டில் உள்ள நடுமுள்ளை நீக்கிவிட்டு, மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். நீரானது நன்கு வற்றிவிட்டால், சுவையான நெய்மீன் கருவாடு தொக்கு தயார்.