Latest Updates
-
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
நாகர்கோவில் ஸ்டைல் இட்லி பொடி செய்வது எப்படி?
நீங்கள் இட்லி பொடி பிரியராக இருந்தால், இந்த நாகர்கோவில் ஸ்டைல் இட்லி பொடியை கட்டாயம் முயற்சித்துப் பாருங்கள், நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.
இட்லி பொடி அனைவருக்குமே பிடிக்கும். இந்த இட்லி பொடியானது ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு சுவையில் இருக்கும். இதற்கு அதில் சேர்க்கப்படும் பொருட்கள் தான் காரணம். அந்த வகையில் நாகர்கோவில் ஸ்டைல் இட்லி பொடி மிகவும் சுவையாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். இந்த இட்லி பொடியானது இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். நீங்கள் இட்லி பொடி பிரியராக இருந்தால், இந்த நாகர்கோவில் ஸ்டைல் இட்லி பொடியை கட்டாயம் முயற்சித்துப் பாருங்கள், நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.

உங்களுக்கு நாகர்கோவில் ஸ்டைல் இட்லி பொடி ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நாகர்கோவில் ஸ்டைல் இட்லி பொடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலை பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 4 டேபிள் ஸ்பூன்
* மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 8 பல்
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 8
* கறிவேப்பிலை - சிறிது
* புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* தேங்காய் - 1 கப் (துருவியது)
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து அதை, தட்டில் உள்ள கடலைப்பருப்புடன் சேர்த்து குளிர வைக்க வேண்டும்.
* பின் அதே வாணலியில் மல்லியை சேர்த்து அதை ஒரு 2 நிமிடம் வறுத்து, அதையும் கடலைப்பருப்புடன் சேர்க்க வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு பற்களை பொடியாக நறுக்கிப் போட்டு பொன்னிறமாக வதக்கி, அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் கட்டி பெருங்காயத்தைப் பயன்படுத்துவதாக இருந்தால், அதைத் துண்டுகளாக்கி வாணலியில் போட்டு நசுக்கி விட்டு வதக்கி, அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து வரமிளகாயை சேர்த்து அதையும் வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் கறிவேப்பிலையை சேர்த்து வறுத்து, அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் புளியை சேர்த்து 1 நிமிடம் நசுக்கிவிட்டு வதக்கி, அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, அதை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக, ஈரமில்லாத மிக்சர் ஜாரில் வறுத்து வைத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பையும் சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்தால், சுவையான நாகர்கோவில் ஸ்டைல் இட்லி பொடி தயார்.



Click it and Unblock the Notifications











