சுதந்திர தினமான இன்னைக்கு இட்லி, தோசைக்கு இந்த மூவர்ண தேங்காய் சட்னியை ட்ரை பண்ணி பாருங்க..

Posted By:

Independence Day 2024 Special Recipe: சுதந்திர தினத்தை முன்னிட்டு உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஸ்பெஷலாக சமைத்துக் கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் காலையில் எப்போதும் போன்று தோசை அல்லது இட்லி தான் செய்யப் போகிறீர்களா?

அப்படியானால் அதற்கு சைடு டிஷ்ஷாக மூவர்ண தேங்காய் சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சுதந்திர தின கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் வகையிலும் இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

Independence Day 2024 Special Tricolor Coconut Chutney Recipe

உங்களுக்கு மூவர்ண தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மூவர்ண தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வெள்ளை தேங்காய் சட்னிக்கு...

* தேங்காய் - 1/4 கப்
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 6
* இஞ்சி - 1 இன்ச்
* பச்சை மிளகாய் - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது

பச்சை தேங்காய் சட்னிக்கு...

* தேங்காய் - 1/4 கப்
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* இஞ்சி - 1 இன்ச்
* கறிவேப்பிலை - 3 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு

ஆரஞ்சு தேங்காய் சட்னிக்கு...

* வரமிளகாய் - 3
* பூண்டு - 4 பல்
* புளி - சிறிய துண்டு
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* தேங்காய் - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - சிறிது

செய்முறை:

* முதலில் வெள்ளை தேங்காய் சட்னிக்கு மிக்சர் ஜாரில் தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், முந்திரி, இஞ்சி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு பச்சை தேங்காய் சட்னிக்கு அதே ஜாரில் தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, அதை மற்றொரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு வரமிளகாய் சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஆரஞ்சு தேங்காய் சட்னிக்கு அதே ஜாரை எடுத்து, அதில் ஊற வைத்துள்ள வரமிளகாய், பூண்டு, புளி, பொட்டுக்கடலை, தேங்காய் மற்றும் சுவைக்கேற்க உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, அதையும் ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னிகளின் மேல் சிறிது சிறிதாக ஊற்றினால், சுவையான மூவர்ண தேங்காய் சட்னி தயார்.

Image Courtesy: Creative World

[ of 5 - Users]
Desktop Bottom Promotion