Latest Updates
-
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்!
எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
Fire Roasted Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்ய போகிறீர்களா? அதற்கு எப்போதும் ஒரே மாதிரியாக தான் சட்னியை செய்வீர்களா? அப்படியானால் இன்று சற்று வித்தியாசமான ருசியைக் கொண்ட சட்னியை செய்யுங்கள். அதாவது சட்னிக்கு உரிய வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை நெருப்பில் சுட்டு, அதன் பின் சட்னி செய்யுங்கள். இப்படி சுட்டு சட்னியை செய்யும் போது, அதன் சுவை இன்னும் அற்புதமாக இருக்கும்.
உங்களுக்கு தீயில் சுட்ட சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தீயில் சுட்ட சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* பெரிய தக்காளி - 1
* வெங்காயம் - 2
* முழு பூண்டு - 1
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 5
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு....
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் அடுப்பில் சப்பாத்தி சுடும் க்ரில் ஸ்டேண்ட்டை வைக்க
வேண்டும்.
* பின் அதன் மேல் வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை வைத்து,
திருப்பி திருப்பி வைத்து நன்கு சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அவற்றை நன்கு குளிர வைத்து, அவற்றின் தோலை நீக்கிவிட்டு,
நீரில் ஒருமுறை அலசிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அந்த காய்கறிகளை ஒன்றிரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து
பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் சுட்ட வெங்காயம்,
தக்காளி, பூண்டை சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* அடுத்து வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, அரைத்த சட்னியை ஊற்றி, சிறிது நீர் சேர்த்து நன்கு கலந்து,
2 நிமிடம் கிளறி இறக்கினால், சுவையான தீயில் சுட்ட சட்னி தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications











