Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
சௌ சௌ தோலை தூக்கி போடுவீங்களா? இனிமேல் அப்படி செய்யாம இந்த மாதிரி சட்னி செய்யுங்க..
Chow Chow Peel Chutney Recipe: இட்லி, தோசை என்று எடுத்துக் கொண்டால், அதற்கு சரியான காம்பினேஷன் சட்னி தான். இதுவரை எத்தனையோ சட்னியை நீங்கள் செய்திருப்பீர்கள். அதில் பெரும்பாலும் செய்யக்கூடிய சட்னி என்று எடுத்துக் கொண்டால், அது தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னி, பூண்டு சட்னி என்றாகவே இருக்கும்.
இப்படி தினமும் ஒரு மாதிரியான சட்னியை செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான, அதே சமயம் வீட்டில் இதுவரை முயற்சி செய்திராத சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சௌ சௌ காய் உள்ளதா?

அப்படியானால் அதன் தோலை சீவி விட்டு, அதை தூக்கி எறியாமல், அவற்றைக் கொண்டு சட்னி செய்யுங்கள். இந்த சட்னி மிகவும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது நீங்கள் எதிர்பார்த்த வகையில் வித்தியாசமாகவும் இருக்கும். இந்த சட்னியானது இட்லி தோசையுடன் சாப்பிட அற்புதமாக இருக்கும்.
உங்களுக்கு சௌ சௌ தோல் கொண்டு எப்படி சட்னி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சௌ சௌ தோல் கொண்டு செய்யக்கூடிய சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சௌ சௌ தோல் - 1 கப்
* வரமிளகாய் - 4
* பூண்டு - 4- பல்
* புளி - ஒரு சிறிய துண்டு
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பூண்டு, வரமிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்க
வேண்டும்.
* பின் அதில் சௌசௌ காயின் தோலை சேர்த்து 10-12 நிமிடம் வதக்கி இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* பிறகு வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதில் புளி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, சட்னியுடன்
சேர்த்து கலந்தால், சுவையான சௌ சௌ சட்னி தயார்.
Image Courtesy: swapnaskitchen



Click it and Unblock the Notifications











