Latest Updates
-
இந்த 5 சின்னங்களில் ஒன்று கையில் இருந்தாலும் அவர்கள் அரசாள பிறந்தவர்களாக இருப்பார்களாம் - உங்க கையில் இருக்கா? -
புதன் மிதுன ராசியில் வக்ரமடைவதால் இந்த 3 ராசிகளை தோல்விகளும், நஷ்டமும் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
இதுல உங்கள் விரல் எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்க சுவாரஸ்யமான குணத்தை சொல்றோம்.. -
1/4 கப் கறிவேப்பிலை இருந்தா இந்த வித்தியாசமான மசாலா சாதம் செய்யுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்த 5 நபர்களை அவமதிப்பது மிகப்பெரிய பாவமாம் - இவர்களுக்கு நரகம் உறுதியாம் - சாணக்கிய ரகசியம் -
Chronic Disease Awareness Day 2026: நாள்பட்ட நோய்களும்.. அவற்றின் அறிகுறிகளும்.. - விளக்கும் டாக்டர்! -
ஜூலை 16-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது... -
1 சௌ சௌ காயும், 5 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்
ஆந்திரா ஸ்டைல் கடலைப் பருப்பு உசிலி ரெசிபி
ஆந்திரா ரெசிபிக்கள் அனைத்தும் காரமாகவும், தனிச் சுவையுடனும் இருக்கும். அதில் ஒன்று கடலைப்பருப்பு உசிலி அல்லது படோலி என்னும் சைடு டிஷ். இது கடலைப் பருப்பைக் கொண்டு செய்யப்படும் ஒரு சுவையான ரெசிபி.
ஆந்திரா ரெசிபிக்கள் அனைத்தும் காரமாகவும், தனிச் சுவையுடனும் இருக்கும். அதில் ஒன்று கடலைப்பருப்பு உசிலி அல்லது படோலி என்னும் சைடு டிஷ். இது கடலைப் பருப்பைக் கொண்டு செய்யப்படும் ஒரு சுவையான ரெசிபி. இது ரொட்டி, புல்கா மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். கடலைப் பருப்பில் புரோட்டீன் அதிகம் உள்ளதால், இது ஆரோக்கியமான ரெசிபியும் கூட.

இந்த ஆந்திரா கடலைப் பருப்பு உசிலி ரெசிபியை உங்கள் வீட்டில் செய்ய நினைக்கிறீர்களா? கீழே ஆந்திரா ஸ்டைல் கடலைப்பருப்பு உசிலி எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலை பருப்பு - 1 கப்
* பச்சை மிளகாய் - 1
தாளிப்பதற்கு...
* கடுகு - 1 டீபூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீபூன்
* சீரகம் - 1 டீபூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு விழுது - 1 டீபூன்
* மிளகாய் தூள் - 1 டேபிள் பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீபூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டேபிள் பூன்
செய்முறை:
* முதலில் கடலைப் பருப்பை சுடுநீரில் போட்டு 30 நிமிடம் ஊற வைக்கவும்.
* பின் கடலைப் பருப்பைக் கழுவி, அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் பச்சை மிளகாய் மற்றும் சிறிது நீர் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
* பிறகு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வாக்கவும்.
* பின் அரைத்த கடலைப் பருப்பை சேர்த்து கிளறவும். அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்கினால், ஆந்திரா ஸ்டைல் கடலைப் பருப்பு உசிலி ரெசிபி தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications