Latest Updates
-
கல்யாண மேடையில் ரத்தக் களரி! வரதட்சணை கேட்டு மணமகன் வீட்டார் செய்த அராஜகம் - அதிர்ச்சியில் உறைந்த விருந்தினர்கள்! -
கிராமத்து ஸ்டைல் சிக்கன் பிரட்டல் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க, செம சைடிஷா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் உலகை ஆட்டிப்படைக்கும் சக்திவாய்ந்தவர்களாக இருப்பார்களாம் -
கிலோ 12000 ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான அரிசி இதுதான் - இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
வீட்டின் வாஸ்துவை மாற்றும் ரகசியம்! மழைக்காலத்தில் இந்த செடிகள் இருந்தால் அதிர்ஷ்டம் தேடி வரும் -
ஐயங்கார் ஸ்டைல் மிளகு குழம்பு ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமா இருக்கும் -
மே 17-க்கு முன் புதுமனை புகுவிழா நடத்தப்போறீங்களா? செல்வம் பெருக இந்த வாஸ்து ரகசியத்தை மிஸ் பண்ணாதீங்க! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
மல்லி தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 12 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்கணும்
ஆந்திரா ஸ்டைல் கடலைப் பருப்பு உசிலி ரெசிபி
ஆந்திரா ரெசிபிக்கள் அனைத்தும் காரமாகவும், தனிச் சுவையுடனும் இருக்கும். அதில் ஒன்று கடலைப்பருப்பு உசிலி அல்லது படோலி என்னும் சைடு டிஷ். இது கடலைப் பருப்பைக் கொண்டு செய்யப்படும் ஒரு சுவையான ரெசிபி.
ஆந்திரா ரெசிபிக்கள் அனைத்தும் காரமாகவும், தனிச் சுவையுடனும் இருக்கும். அதில் ஒன்று கடலைப்பருப்பு உசிலி அல்லது படோலி என்னும் சைடு டிஷ். இது கடலைப் பருப்பைக் கொண்டு செய்யப்படும் ஒரு சுவையான ரெசிபி. இது ரொட்டி, புல்கா மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். கடலைப் பருப்பில் புரோட்டீன் அதிகம் உள்ளதால், இது ஆரோக்கியமான ரெசிபியும் கூட.

இந்த ஆந்திரா கடலைப் பருப்பு உசிலி ரெசிபியை உங்கள் வீட்டில் செய்ய நினைக்கிறீர்களா? கீழே ஆந்திரா ஸ்டைல் கடலைப்பருப்பு உசிலி எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலை பருப்பு - 1 கப்
* பச்சை மிளகாய் - 1
தாளிப்பதற்கு...
* கடுகு - 1 டீபூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீபூன்
* சீரகம் - 1 டீபூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு விழுது - 1 டீபூன்
* மிளகாய் தூள் - 1 டேபிள் பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீபூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டேபிள் பூன்
செய்முறை:
* முதலில் கடலைப் பருப்பை சுடுநீரில் போட்டு 30 நிமிடம் ஊற வைக்கவும்.
* பின் கடலைப் பருப்பைக் கழுவி, அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் பச்சை மிளகாய் மற்றும் சிறிது நீர் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
* பிறகு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வாக்கவும்.
* பின் அரைத்த கடலைப் பருப்பை சேர்த்து கிளறவும். அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்கினால், ஆந்திரா ஸ்டைல் கடலைப் பருப்பு உசிலி ரெசிபி தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications











