ஆந்திரா இஞ்சி சட்னி... தோசைக்கு இதைவிட விட சூப்பரான சைடிஷ் எதுவுமில்ல... ட்ரை பண்ணி பாருங்க...!

Posted By:

Andhra Ginger Chutney Recipe in Tamil: இல்லத்தரசிகளுக்கு தினமும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையே என்ன சமைக்கலாம் என்பதுதான். பெரும்பாலான வீடுகளில் காலை மற்றும் இரவு உணவாக இருப்பது இட்லி மற்றும் தோசைதான். இட்லி, தோசை பொதுவான உணவாக இருந்தாலும் அதற்கு என்ன சைடிஷ் செய்வது என்பதுதான் மிகப்பெரிய சவாலே. தமிழ்நாட்டு சட்னிகள் சாப்பிட்டு சாப்பிட்டு போரடித்தவர்கள் மற்ற மாநில சட்னிகளை முயற்சிப்பது நல்லது.

அந்த வகையில் ஆந்திரா சட்னியை முயற்சித்து பார்ப்பது புது அனுபவத்தைக் கொடுக்கும். ஆந்திர உணவுகள் என்றாலே காரமாகத்தான் இருக்கும். இட்லி, தோசைக்கு சூப்பராக இருக்கும் இஞ்சி சட்னி அல்லது அல்லம் சட்னியை செய்துக் கொடுக்கும்போது வீட்டில் அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பதிவில் ஆந்திரா ஸ்பெஷல் இஞ்சி சட்னியை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

Andhra Ginger Chutney How To Prepare Andhra Ginger Chutney

தேவையானப் பொருட்கள்:

- நறுக்கிய இஞ்சி - அரை கப்
- தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
- நறுக்கிய பூண்டு - 2 ஸ்பூன்
- காஷ்மீர் மிளகாய் - 5
- சீரகம் - 1 ஸ்பூன்
- மல்லி விதை - 2 ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- புளி - சிறிதளவு
- வெல்லம் - சிறிதளவு
- உப்பு - தேவைக்கு ஏற்ப

தாளிக்க:

- கடுகு - அரை ஸ்பூன்
- கடலைப் பருப்பு - அரை ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - அரை ஸ்பூன்
- காஷ்மீர் மிளகாய் - 1
- பொடியாக நறுக்கிய பூண்டு - 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

- ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து மிதமான தீயில் 2 முதல் 3 நிமிடங்கள் வதக்கி ஓரமாக வைக்கவும்.

- அதன்பின் சிவப்பு மிளகாய், சீரகம், மல்லி விதைகள், கறிவேப்பிலை மற்றும் புளி சேர்த்து, நன்கு கலந்து, 2 முதல் 3 நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கி, தொடர்ந்து கிளறி விடவும். இதனை ஓரமாக வைத்து குளிர வைக்கவும்.

- பின்னர் வெல்லம், உப்பு சேர்க்கவும். ½ கப் தண்ணீர் மற்றும் மிக்சியில் ஒரு மென்மையான பேஸ்ட் போல அரைக்கவும். இந்த பேஸ்ட்டை ஒரு பாத்திரத்தில் மாற்றி தனியாக வைக்கவும்.

- சட்னியை தாளிப்பதற்கு, மீதமுள்ள ½ டீஸ்பூன் எண்ணெயை சிறிய நான்-ஸ்டிக் பாத்திரத்தில் சூடாக்கி, கடுகு சேர்த்து பொரிய விடவும்.

- கடுகு வெடித்ததும் கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு மற்றும் சிவப்பு மிளகாய் சேர்த்து மிதமான தீயில் சில நொடிகள் வதக்கவும்.

- பின்னர் நறுக்கிய பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து மிதமான தீயில் சில நொடிகள் வதக்கவும்.

- இந்த கலவையை சட்னி மீது ஊற்றவும். இந்த இஞ்சி சட்னியை காற்று புகாத கொள்கலனில் சேமித்து குளிர்சாதன பெட்டியில் வைத்தால் ஒரு வாரம் வரை கெட்டுப்போகாமல் இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, January 7, 2025, 22:19 [IST]
Desktop Bottom Promotion