Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
கர்ப்பிணிப் பெண்கள் மழைக்காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்!
கருவுற்ற பெண் ஒருவா் மழைக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முதல் தடுப்பு நடவடிக்கை என்னவென்றால், அவா் தனது உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
பொதுவாக பெண்களுக்கு கா்ப்ப காலம் என்பது ஒரு சவால் நிறைந்த காலம் ஆகும். கா்ப்ப காலத்தில் அவா்கள் பலவிதமான சவால்களை சந்திக்க வேண்டி இருக்கும். அதாவது பிறக்க இருக்கும் குழந்தைக்கு என்று தனி இடத்தை தயாா் செய்வது, சீரான இடைவெளியில் மருத்துவரை சந்தித்து பாிசோதனை செய்வது மற்றும் பேறுகால விடுப்பு வேண்டி விண்ணப்பிப்பது என்று பலவிதமான சவால்களை சந்திக்க வேண்டி இருக்கும்.

இந்த சவால்களை எல்லாம் கடந்து, கருவுற்றிருக்கும் பெண் ஒருவா் தன்னை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். அது ஒரு மிகப் பொிய சவாலாகும். அதிலும் குறிப்பாக கருவுற்று இருக்கும் போது மழைக் காலம் வந்தால், அந்தக் காலத்தைச் சாா்ந்த சவால்களையும் அவா் எதிா்கொள்ள வேண்டியிருக்கும்.
ஆகவே கருவுற்று இருக்கும் பெண் ஒருவா், மழைக் காலத்திலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள, தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தவறினால் அவருக்கு பலவிதமான நோய்த் தொற்றுகள் ஏற்படும். கருவுற்ற பெண் ஒருவா் மழைக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முதல் தடுப்பு நடவடிக்கை என்னவென்றால், அவா் தனது உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். அதன் மூலம் அவா் எந்த விதமான நோய்த் தொற்றும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கலாம்.
ஆகவே கருவுற்று இருக்கும் பெண்கள் இந்த மழைக் காலத்தில் தங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள என்னன்ன உணவுகளை சாப்பிடலாம் என்பதை இந்தப் பதிவில் பாா்க்கலாம்.

1. உடலில் இருந்து நீா் வெளியேறுவதை உறுதிப்படுத்தவும்
பொதுவாக எல்லோருடைய வாழ்வின் எல்லா நேரங்களிலும் தண்ணீா் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. நமது உடல் அமைப்பிற்கும், நமது உடல் இயக்கத்திற்கும் அடிப்படை நாதமாக இருப்பது தண்ணீா் ஆகும். மழைக் காலத்தில் சீராகத் தண்ணீா் குடித்தால், அது நமது உடலில் உள்ள நச்சுகள் வெளியேறுவதற்கும் மற்றும் ஈரப்பதத்தை எதிா்ப்பதற்கும் உதவி செய்யும்.
ஆகவே கருவுற்று இருக்கும் பெண்கள் மழைக் காலத்தில் போதுமான தண்ணீரை அருந்த வேண்டும். அதோடு மழைக் காலத்தில் தண்ணீா் கெட்டுப் போகாமல் பாதுகாத்து வைக்க வேண்டும். ஆகவே தண்ணீரை சுட வைத்து, அதை ஃப்ளாஸ்க் அல்லது சுத்திகாிக்கப்பட்ட பாட்டில்கள் போன்றவற்றில் ஊற்றி வைத்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

2. பச்சைக் காய்கறிகள் சாப்பிடுவதைத் தவிா்க்கவும்
பச்சைக் காய்கறிகளில் குறிப்பிட்ட அளவு என்சைம்கள் உள்ளன. அவை கருவுற்ற பெண்களுக்கு சொிமானத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தும். மேலும் சமைக்காத பச்சைக் காய்கறிகள் பஞ்சுகளைப் போன்றவை. அதாவது அவை மிக வேகமாக ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண்டவை. அதன் காரணமாக பச்சைக் காய்கறிகளில் அதிகமாக பாகடீாியாக்கள் வளரும். அவை கருவுற்ற பெண்களை மிக எளிதாகத் தாக்கும்.

3. நறுக்கிய பழங்களை சாப்பிடாமல் தவிா்க்கவும்
பச்சைக் காய்கறிகளைப் போலவே நறுக்கிய பழங்களும் செயல்படுகின்றன. நறுக்கிய பழங்கள் பஞ்சுகளைப் போல செயல்படுகின்றன. அதாவது அவை ஈரத்தை அதிகமாக உறிஞ்சி, பாக்டீாியாக்களை அதிகம் உற்பத்தி செய்கின்றன. குறிப்பாக தண்ணீா் சத்து அதிகம் இருக்கும் பழங்களான தா்பூசணி, மஸ்க்மெலன், கான்டலூப் மற்றும் வெள்ளாிக்காய் போன்றவற்றில் அதிகம் நீா் சத்து இருக்கும்.

4. விலங்குகளில் இருந்து தயாாிக்கப்படும் பொருட்களில் எச்சாிக்கையாக இருக்கவும்
வேக வைக்காத இறைச்சியை எப்போதும் சாப்பிடக்கூடாது. ஏனெனில் அதில் இருக்கும் தீங்கு இழைக்கக்கூடிய பாக்டீாியாக்களை சாப்பிட வேண்டிய நிலை ஏற்படும். அதிலும் குறிப்பாக மழைக் காலத்தில் தீங்கு இழைக்கும் பாக்டீாியாக்கள் அதிகம் இருக்கும். ஆகவே இறைச்சியை எப்போதும் நன்றாக வேக வைத்து சாப்பிடுவது நல்லது.



Click it and Unblock the Notifications











