Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
மார்பக புற்றுநோய்க்கு பிறகு உடலுறவு எப்படி சாத்தியம்?
மார்பக புற்றுநோய்க்கு பிறகு உடலுறவு
உடலுறவில் பெண்களின் மார்பங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பெண்களுக்கு முப்பது வயதிற்கு மேல் மார்பக புற்றுநோய் வரும் அபாயம் அதிகமாக காணப்படுகிறது. மார்பக புற்றுநோயால் மார்பங்களை இழந்த பின்னர் உடலுறவில் ஈடுபடுவது பற்றிய சந்தேகங்களுக்கு விடை காண இந்த பகுதியை தொடர்ந்து படியுங்கள்.

உடலில் ஏற்படும் மாற்றங்கள்
மார்ப்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தங்களது மார்பகங்களை அறுவை சிகிச்சை மூலம் இழந்த பெண்கள், அறுவை சிகிச்சைக்கு பிறகு சங்கடமாக உணர்வதாகவும், வழக்கம் போல செயல்பட முடியவில்லை எனவும் கூறுகின்றனர். யோனி பகுதியில் ஈரப்பதம் இல்லாமல் போகிறதாம். புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் சில மருந்துகளாலும் இந்த நிலை உருவாகிறது.

இளம் பெண்கள்
இளம் பெண்கள் மார்பக அறுவை சிகிச்சை செய்த பெண்களுக்கு மெனோபாஸ் முன் கூட்டியே ஏற்படலாம். யோனி வறட்சி மற்றும் லிபிடோ இழப்பு ஆகியவை ஏற்படலாம்.

யோனி வறட்சிக்கு தீர்வு
யோனி பகுதி வறட்சியாக இருந்தால் உடலுறவில் ஈடுபடுவது சிரமமாக இருக்கும். எனவே யோனி பகுதியில் உண்டாகும் வறட்சியை போக்க தேங்காய் எண்ணெய் சிறந்த தீர்வாக அமையும். ஆனால் தேங்காய் எண்ணெய்யை ஒவ்வாமை கொண்டவர்கள் பயன்படுத்த முடியாது. இதற்காக தேங்காய் எண்ணெய்யுடன் கலந்தோ அல்லது தனியாகவோ பயன்படுத்தக்கூடிய மாஸ்சுரைசர்களை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

மன சோர்வு
ஒரு பகுதி பெண்கள் மார்பக அறுவை சிகிச்சைக்கு பிறகு மன அழுத்தம் மற்றும் சோர்வுக்கு ஆளாகின்றனர். மேலும் மார்பகத்தை அறுவை சிகிச்சையின் மூலம் நீக்கிய பிறகு அவர்களுக்கு உடலுறவில் நாட்டம் குறைந்துவிடுகிறது. இது போன்ற மனநலம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு அவர்கள் மனநல மருத்துவர்களின் மூலம் தீர்வு காணலாம்.

குறைவாக உணருதல்
பெரும்பான்மையான பெண்கள் தங்களது மார்பகங்களின் இழப்பை நினைத்து அதிகம் கவலை கொள்கிறார்கள். தன்னிடம் கவர்ச்சியில்லை. தனது கணவன் தன்னை விரும்பமாட்டான் என்று தாங்களே கற்பனை செய்து கொள்கிறார்கள். இவர்களால் உடலுறவில் ஈடுபட முடிந்தாலும் கூட இவர்கள் தங்கள் மீது கொண்டுள்ள குறைந்த அபிப்பராயம் இவர்களை உடலுறவில் ஈடுபடவிடாமல் தடுக்கிறது. இதிலிருந்து விடுபட இவர்களது துணை உதவி செய்தால் போதும்.துணையின் மாறாத காதலும், அரவணைப்பும் இவர்களது மனதில் உண்டான காயத்தை ஆற்றும்.



Click it and Unblock the Notifications











