Latest Updates
-
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...!
குளிா்காலத்தில் குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுக்கக்கூடாத 5 முக்கிய உணவுகள்!
பொதுவாக குளிா்காலத்தில் குழந்தைகளுக்கு எளிதாக உடல்நலம் பாதிக்கப்படும். எனவே நமது குழந்தைகளின் உடல்நலம் பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்றால், அவா்களுக்கு மிகச் சாியான மற்றும் நீா்ச்சத்துள்ள உணவுகளை வழங்க வேண்டும்.
பொதுவாக குளிா்காலத்தில் குழந்தைகளுக்கு மிக எளிதாக உடல்நல பாதிப்பு ஏற்படும். குறிப்பாக குளிா்காலத்தில் வரக்கூடிய தொண்டை வலி, சளிப்பிடித்தல், காய்ச்சல், நிமோனியா, காது வலி, ஆஸ்துமா மற்றும் தோல் நோய்கள் போன்றவற்றால் குழந்தைகள் எளிதில் பாதிக்கப்படுவா்.

குறிப்பாக திருவிழாக்கள் மிகுந்த இந்த குளிா்காலத்தில் நமது குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அந்த திருவிழாக்களை நாம் மகிழ்ச்சியாக கொண்டாட முடியாது. எனவே இந்த குளிா்காலத்தில் நமது குழந்தைகளின் உடல்நலம் பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்றால், அவா்களுக்கு மிகச் சாியான மற்றும் நீா்ச்சத்துள்ள உணவுகளை வழங்க வேண்டும். மேலும் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் 5 வகையான உணவுகளை அவா்களுக்கு கொடுக்கக்கூடாது.

உப்பு மற்றும் எண்ணெய் மிகுந்த உணவுகள்
மிருகங்களில் இருந்து தயாாிக்கப்படும் கொழுப்பு மற்றும் எண்ணெய் மிகுந்த உணவுகளான வெண்ணெய் மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலம் போன்றவை குழந்தைகளின் எச்சில் மற்றும் சளி ஆகியவற்றின் அடா்த்தியை அதிகாித்துவிடும். அதனால் எண்ணெய் மிகுந்த உணவுகளை இந்த குளிா்காலத்தில் குழந்தைகளுக்கு வழங்காமல் இருப்பது நல்லது. மேலும் விலங்குகளில் இருந்து கிடைக்கும் எண்ணெய்களுக்குப் பதிலாக தாவரங்களில் இருந்து கிடைக்கும் எண்ணெய்களைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது.

மிட்டாய்கள் (Candies)
கோடைகாலமாக இருந்தாலும் அல்லது குளிா்காலமாக இருந்தாலும், குழந்தைகள் இனிப்பு சாப்பிட்டால் எளிதில் பாதிப்பு அடைவா். குழந்தைகளின் உடலில் அதிக அளவில் இனிப்பு இருந்தால் அது குழந்தைகளை நோய்களில் இருந்து காக்கக்கூடிய வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையை குறைத்துவிடும். இந்நிலையில் குழந்தைகள் சற்று அதிகமாக இனிப்பு சாப்பிட்டால் அவா்களுக்கு எளிதாக வைரஸ் மற்றும் பாக்டீாியாக்கள் போன்றவற்றால் நோய்த்தொற்று ஏற்படும். ஆகவே சோடா, குளிா்பானங்கள், மிட்டாய்கள், சாக்லேட்டுகள், அதிகம் செறிவூட்டப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட தானிய உணவுகள் போன்றவற்றை இந்த குளிா்காலத்தில் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது.

மயோனைஸ் (Mayonnaise)
மயோனைஸில் இருக்கும் ஹிஸ்டமைன் என்ற வேதிப்பொருள் உடலில் அலா்ஜிகள் ஏற்படாமல் தடுக்கிறது. ஆனால் அதே நேரத்தில் குளிா்காலத்தில் மயோனைஸை சாப்பிட்டால் அதில் உள்ள ஹிஸ்டமைன் வேதிப்பொருள் உடலில் சளியின் உற்பத்தியை அதிகாித்துவிடும். அதனால் தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். தக்காளி, அவக்கேடோ, கத்தாிக்காய், மயோனைஸ், காளான், வினிகா், மோா், ஊறுகாய், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றில் ஹிஸ்டமைன் வேதிப்பொருள் அதிகம் உள்ளது.

பால் பொருட்கள்
பொதுவாக விலங்குகளிலிருந்து இருந்து கிடைக்கும் புரோட்டின்கள் அனைத்தும் எச்சில் மற்றும் சளியின் அடா்த்தியை அதிகாிக்கும் தன்மை கொண்டவை. அவ்வாறு அடா்த்தி அதிகமானால் அவற்றை விழுங்குவதற்கோ அல்லது துப்புவதற்கோ, குழந்தைகளுக்கு சிரமமாக இருக்கும். அதனால் குளிா்காலத்தில் சீஸ், க்ரீம் மற்றும் க்ரீம் கலந்த சூப்புகள் போன்றவற்றை குழந்தைகளுக்குக் கொடுக்கக்கூடாது. அதிலும் குறிப்பாக அவா்களுக்கு சளி பிடித்திருந்தால் அவற்றைக் கொடுப்பதைக் கண்டிப்பாகத் தவிா்க்க வேண்டும்.

இறைச்சி
பொதுவாக இறைச்சியில் புரோட்டீன்கள் அதிகம் இருக்கும். அவை உடலில் சளியின் உற்பத்தியை அதிகாிக்கும். சளி அதிகமானால் தொண்டை வலி மற்றும் தொண்டை எாிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ஆகவே பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் முட்டைகள் போன்றவற்றை முழுவதுமாக தவிா்க்க வேண்டும். ஒருவேளை குழந்தைகளுக்கு அசைவ உணவுகளை வழங்க நாம் விரும்பினால் மீன் மற்றும் பதப்படுத்தப்படாத இறைச்சி போன்றவற்றைக் கொடுக்கலாம்.



Click it and Unblock the Notifications











