Just In
- 6 hrs ago
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- 12 hrs ago
15 நிமிடத்தில் ருசியான சிக்கன் கிரேவி செய்வது எப்படி?
- 14 hrs ago
பெண்கள் வயாகரா எடுத்துக்கொள்ளலாமா? எடுத்துக் கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
- 18 hrs ago
Today Rasi Palan 26 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது...
Don't Miss
- Sports
திறமை இருந்தும் வாய்ப்பில்லை.. நியூசி, உடனான முதல் டி20.. ரிஸ்க் எடுக்கிறாரா ஹர்திக் பாண்ட்யா??
- News
மக்களவை தேர்தல் இன்று நடந்தால் வெல்லப்போவது யார்? பாஜக, காங்கிரஸ்.. யாருக்கு நல்ல செய்தி! பரபர சர்வே
- Finance
கச்சா எண்ணெய் இறக்குமதி இன்னும் ரஷ்யாவில் இருந்து அதிகரிக்கலாம்.. காரணத்தை கேட்டா கடுப்பாகிருவீங்க!
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Movies
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நடிகர் மனோபாலா.. நலம் விசாரித்தார் பூச்சி முருகன்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
நவம்பர் 13-ல் பெயர்ச்சியாகும் புதன் மற்றும் செவ்வாய்: இந்த 4 ராசிக்காரர்களைத் தேடி பணம் வரப் போகுது...
நவம்பர் மாதத்தில் அடுத்தடுத்து கிரகங்கள் ராசியை மாற்றுகின்றன. அதுவும் நவம்பர் 11 ஆம் தேதி சுக்கிரன் விருச்சிக ராசிக்கு சென்றதை அடுத்து, நவம்பர் 13 ஆம் தேதி செவ்வாய் மற்றும் புதன் ஒரே நாளில் ராசியை மாற்றுகின்றன. அதுவும் செவ்வாய் ஏற்கனவே மிதுன ராசியில் வக்ர நிலையில் இருந்தார். இந்த வக்ர நிலையிலேயே நவம்பர் 13 ஆம் தேதி ரிஷப ராசியை அடைகிறார். அதேப் போல் புத்திகாரகனான புதன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு நவம்பர் 13 ஆம் தேதி செல்கிறார்.
இந்த இரண்டு கிரகங்களும் ஒரே நாளில் ராசியை மாற்றுவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு இவ்விரு கிரகங்களின் பெயர்ச்சியால் கையில் பணம் அதிகம் புரளப் போகிறது. இப்போது செவ்வாய் மற்றும் புதன் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் அதிக நற்பலனைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

கடகம்
கடக ராசிக்காரர்களின் ஆசை இக்காலத்தில் நிறைவேறும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெற முடியும். மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். பணியிடத்தில் கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். காதலிப்பவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். திருமணமானவர்களின் உறவுகள வலுபெறும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாயும், புதன் 4 ஆவது வீட்டிற்கும் செல்கின்றனர். இதனால் இவ்விரு பெயர்ச்சிகளால் சிம்ம ராசிக்காரர்கள் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்களைப் பெறுவார்கள். வியாபாரம் செய்பவர்கள் ரியல் எஸ்டேட் மூலம் நல்ல ஆதாயத்தைப் பெறுவார்கள். மொத்தத்தில் இந்த பெயர்ச்சிகளானது சிம்ம ராசிக்காரர்களுக்கு வாழ்வில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தும்.

துலாம்
துலாம் ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார் மற்றும் 8 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் மற்றும் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.

மகரம்
மகர ராசியின் 5 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார் மற்றும் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். எனவே இந்த கிரகங்களின் பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு பல விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல காலமாக இருக்கும். புதனின் மாற்றத்தால் மாணவர்களுக்கு நன்றாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபகரமான காலமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)