Just In
- 51 min ago
Budget 2023: இந்த ஆண்டு சிவப்பு நிற கைத்தறி புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- 4 hrs ago
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- 7 hrs ago
Today Rasi Palan 01 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் முக்கிய வேலை பாதியில் தடைபடலாம்...
- 15 hrs ago
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
Don't Miss
- Finance
இயற்கை விவசாயத்தினை மேம்படுத்த பல திட்டங்கள்.. விவசாய ஸ்டார்ட்அப்-களுக்கு சலுகை அளிக்க திட்டம்!
- Movies
முழு பைத்தியமாவே மாறிட்டாங்க போல.. மேலயும் ஜீன்ஸ் பேன்ட்டை மாட்டிட்டு உலா வந்த பிக் பாஸ் நடிகை!
- News
ரயில்வேக்கு மொத்தமாக அள்ளிக் கொடுத்த நிர்மலா.. 2013-14 பட்ஜெட்டை விட 9 மடங்கு அதிக ஒதுக்கீடு
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Sports
மொத்த ப்ளானையும் மாத்துங்க.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. தினேஷ் கார்த்திக் முக்கிய அறிவுரை!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கருட புராணத்தின் படி, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தினமும் இந்த விஷயங்களைச் செய்யணுமாம்...
கருட புராணமானது ஒருவர் தனது கர்மாவின் படி எந்த மாதிரியான முடிவுகளை பெறுவார் என்பதை கூறுகிறது. அந்த வகையில் ஒருவர் தன் வாழ்வில் நல்ல செயல்களை செய்தால், அவரது வாழ்க்கை சந்தோஷமும் வளமும் பெற்றிருப்பார். அதுவே கெட்ட செயல்களை செய்தால், பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
ஒருவர் நல்ல மகிழ்ச்சிகரமான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ வேண்டுமானால் அன்றாட வாழ்வில் தவறாமல் செய்ய வேண்டிய சில விஷயங்களைப் பற்றி கருட புராணம் விவரிக்கிறது. அந்த விஷயங்களை செய்வதனால் வாழ்வில் சந்திக்கும் பல துன்பங்களில் இருந்து விடுபடலாம். இப்போது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தினமும் என்னென்ன விஷயங்களை செய்ய வேண்டும் என்பதைக் காண்போம்.
குல தெய்வ வழிபாடு
ஒவ்வொருவருக்கும் குலதெய்வம் இருக்கும். இந்த குலதெய்வத்தை ஒருவர் தினமும் மறக்காமல் வணங்க வேண்டும். கருட புராணத்தின் படி, குலதெய்வத்தை வழிபடுவது வாழ்வில் சந்திக்கும் அனைத்து வகையான துன்பங்களில் இருந்து விடுவிப்பதோடு, பிரச்சனைகளைப் போக்குகிறது. குலதெய்வம் தான் எந்த ஒரு சூழலிலும் தனது பக்தர்களை கைவிடாது காக்கும்.
பிரசாதம் செய்து படையுங்கள்
தினமும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்பதற்கு முன், அதை சிறிது எடுத்து தெய்வங்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும் என்று கருட புராணம் கூறுகிறது. ஏனெனில் இவ்வாறு செய்வதன் மூலம், அன்னப்பூரணி தேவியின் அருள் எப்போதும் கிடைப்பதோடு, வாழ்நாள் முழுவதும் உணவுப் பற்றாக்குறை இருக்காது மற்றும் வாழ்வில் உள்ள பணப் பிரச்சனைகளும் நீங்கும்.
அன்னதானம்
தானத்திலேயே சிறந்த தானம் அன்னதானம். இந்த அன்னதானத்தை ஒருவர் எப்போதும் செய்ய வேண்டும் என்று கருடபுராணம் கூறுகிறது. தினமும் அன்னதானம் செய்ய முடியாவிட்டாலும், தங்களால் முடிந்த நேரங்களில் தவறாமல் அன்னதானம் செய்ய வேண்டும். அதோடு வருமானத்தில் ஒரு சிறிய பகுதியை தர்மமாக வழங்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், புண்ணியம் சேர்வதோடு, குடும்பத்தின் பொருளாதாரமும் வலுவடையும்.
வேதங்களைப் படிக்கவும்
ஒருவர் தினமும் வேதங்களையும் புராணங்களையும் படித்து, அதில் மறைந்திருக்கும் அறிவைப் பெற வேண்டும் என்று கருடபுராணம் கூறுகிறது. இப்படி செய்வதனால் ஒருவருக்கு வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்த்துப் போராடும் திறன் கிடைப்பதோடு, வெற்றிக்கான புதிய வழிகளும் கிடைக்கும்.
துளசி வழிபாடு
கருட புராணத்தில் துளசி மற்றும் அதன் மருத்துவ குணங்கள் குறித்து கூறப்பட்டுள்ளது. அதன்படி, துளசி இலையைக் கொண்டு விஷ்ணு பகவானுக்கு அர்ச்சனை செய்து, அந்த துளசி இலைகளை தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் மற்றும் மன நோய்கள் நீங்கும்.