Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
கருட புராணத்தின் படி, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தினமும் இந்த விஷயங்களைச் செய்யணுமாம்...
ஒருவர் நல்ல மகிழ்ச்சிகரமான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ வேண்டுமானால் அன்றாட வாழ்வில் தவறாமல் செய்ய வேண்டிய சில விஷயங்களைப் பற்றி கருட புராணம் விவரிக்கிறது.
கருட புராணமானது ஒருவர் தனது கர்மாவின் படி எந்த மாதிரியான முடிவுகளை பெறுவார் என்பதை கூறுகிறது. அந்த வகையில் ஒருவர் தன் வாழ்வில் நல்ல செயல்களை செய்தால், அவரது வாழ்க்கை சந்தோஷமும் வளமும் பெற்றிருப்பார். அதுவே கெட்ட செயல்களை செய்தால், பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

ஒருவர் நல்ல மகிழ்ச்சிகரமான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ வேண்டுமானால் அன்றாட வாழ்வில் தவறாமல் செய்ய வேண்டிய சில விஷயங்களைப் பற்றி கருட புராணம் விவரிக்கிறது. அந்த விஷயங்களை செய்வதனால் வாழ்வில் சந்திக்கும் பல துன்பங்களில் இருந்து விடுபடலாம். இப்போது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தினமும் என்னென்ன விஷயங்களை செய்ய வேண்டும் என்பதைக் காண்போம்.
குல தெய்வ வழிபாடு
ஒவ்வொருவருக்கும் குலதெய்வம் இருக்கும். இந்த குலதெய்வத்தை ஒருவர் தினமும் மறக்காமல் வணங்க வேண்டும். கருட புராணத்தின் படி, குலதெய்வத்தை வழிபடுவது வாழ்வில் சந்திக்கும் அனைத்து வகையான துன்பங்களில் இருந்து விடுவிப்பதோடு, பிரச்சனைகளைப் போக்குகிறது. குலதெய்வம் தான் எந்த ஒரு சூழலிலும் தனது பக்தர்களை கைவிடாது காக்கும்.
பிரசாதம் செய்து படையுங்கள்
தினமும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்பதற்கு முன், அதை சிறிது எடுத்து தெய்வங்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும் என்று கருட புராணம் கூறுகிறது. ஏனெனில் இவ்வாறு செய்வதன் மூலம், அன்னப்பூரணி தேவியின் அருள் எப்போதும் கிடைப்பதோடு, வாழ்நாள் முழுவதும் உணவுப் பற்றாக்குறை இருக்காது மற்றும் வாழ்வில் உள்ள பணப் பிரச்சனைகளும் நீங்கும்.
அன்னதானம்
தானத்திலேயே சிறந்த தானம் அன்னதானம். இந்த அன்னதானத்தை ஒருவர் எப்போதும் செய்ய வேண்டும் என்று கருடபுராணம் கூறுகிறது. தினமும் அன்னதானம் செய்ய முடியாவிட்டாலும், தங்களால் முடிந்த நேரங்களில் தவறாமல் அன்னதானம் செய்ய வேண்டும். அதோடு வருமானத்தில் ஒரு சிறிய பகுதியை தர்மமாக வழங்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், புண்ணியம் சேர்வதோடு, குடும்பத்தின் பொருளாதாரமும் வலுவடையும்.
வேதங்களைப் படிக்கவும்
ஒருவர் தினமும் வேதங்களையும் புராணங்களையும் படித்து, அதில் மறைந்திருக்கும் அறிவைப் பெற வேண்டும் என்று கருடபுராணம் கூறுகிறது. இப்படி செய்வதனால் ஒருவருக்கு வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்த்துப் போராடும் திறன் கிடைப்பதோடு, வெற்றிக்கான புதிய வழிகளும் கிடைக்கும்.
துளசி வழிபாடு
கருட புராணத்தில் துளசி மற்றும் அதன் மருத்துவ குணங்கள் குறித்து கூறப்பட்டுள்ளது. அதன்படி, துளசி இலையைக் கொண்டு விஷ்ணு பகவானுக்கு அர்ச்சனை செய்து, அந்த துளசி இலைகளை தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் மற்றும் மன நோய்கள் நீங்கும்.



Click it and Unblock the Notifications