Just In
- 35 min ago மனித எலும்பிலிருந்து கிடைக்கும் போதைப்பொருளுக்காக சுடுகாட்டை தோண்டும் மக்கள்..விழிபிதுங்கி நிற்கும் அரசாங்கம்!
- 53 min ago உங்கள் வீட்டில் பல்லிகளின் தொல்லை அதிகமாக உள்ளதா? இனி கவலையே வேண்டாம்... இதோ விரட்ட எளிய வழிகள்..!
- 2 hrs ago இந்த 5 ராசி பெண்கள் சுதந்திரப் பறவையாக பறக்க பிறந்தவர்களாம்... இவங்களுக்கு அவங்க சுதந்திரம்தான் முக்கியமாம்...
- 3 hrs ago சாணக்கிய நீதி படி உங்ககிட்ட இந்த 5 விஷயங்கள் இருந்தா நீங்க போன ஜென்மத்தில் நிறைய புண்ணியம் பண்ணிருக்கீங்களாம்!
Don't Miss
- Technology Jio-வின் குளுகுளு ஆஃபர்.. மாதம் ரூ.198 விலை.. ஆண்ட்ராய்டு மொபைல்.. இதுலாம் அம்பானியால மட்டும் தான் முடியும்..
- News "ராகுல்லா ரசகுல்லா வாங்குறது..கேள்விக்குறி" அப்படியே இருக்காரே! ட்ரேட்மார்க் பதில் சொன்ன பார்த்திபன்
- Sports மாஸ் காட்டும் விக்கெட் கீப்பர்கள்.. சஞ்சு சாம்சனுக்கு எமனாக நிற்கும் பண்ட்.. தவிக்கும் அஜித் அகர்கர்
- Automobiles சென்னை விமான நிலையத்தில் நடக்கும் அதிசயம்! ஒரே டைம்ல 2 விமானங்கள் பறக்கபோகுது!
- Finance டிசிஎஸ் நிறுவனத்தில் COO சீட்டு காலி.. கே.கிருதிவாசன் எடுத்த அடேங்கப்பா முடிவு..!!
- Movies Raashi khanna: பட்டனை போடுங்க மேடம்.. ராஷி கன்னாவின் எக்குத்தப்பான போஸ்!
- Travel அடிக்கிற வெயிலுக்கு கம்மி பட்ஜெட்டில இந்த குளிர்ச்சியான மலைவாசஸ்தலங்களுக்கு ஒரு ட்ரிப் பிளான் பண்ணலாமா?
- Education இசிஐஎல் நிறுவனத்தில் அற்புதமான வேலை தயார்..!!
தனிஷ்டா பஞ்சமி: மரணத்திற்குப் பின் உயிர்கள் கஷ்டப்படாம எமலோகம் போக முடியுமா?
பஞ்சமி திதி தெரியும். வளர்பிறை பஞ்சமி திதி தேய்பிறை பஞ்சமி திதி கேள்வி பட்டிருப்பீர்கள். தனிஷ்டா பஞ்சமி பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா. இது ஒருவர் மரணமடையும் நட்சத்திரத்தை குறிக்கிறது. பிறக்கும் போது
உயிர் உடலை விட்டு பிரிவது மரணம். அந்த மரணம் சிலருக்கு இயற்கையாக அமையும். வயது மூப்பு ஏற்பட்டு மரணமடைவார்கள். சிலருக்கு நோயினால் மரணம் வரும். சிலரோ விபத்துக்கள் மூலம் மரணமடைவார்கள். இயற்கையாக மரணமடைந்தவர்களில் சிலர் முக்தியடைந்து இறைவனின் பாதத்தை அடைவார்கள். சிலரது பாவ புண்ணியத்திற்கு ஏற்ப தண்டனைகள் கிடைக்கும்.
இறந்த திதி, நட்சத்திரங்களின்படி அந்த உயிர்கள் எமலோகத்தை அடைகின்றன. ஒருவர் பிறக்கும் போது நட்சத்திரத்தையும், இறக்கும் போது திதியையும் நாம் நினைவில் வைத்துக்கொள்வோம். நம் ராசி பார்த்து கோவில்களில் அர்ச்சனை செய்வோம். ஆனால் இறக்கும் போது திதி மட்டுமே பார்த்தால் மட்டுமே போதாது நட்சத்திரமும் பார்க்க வேண்டியது அவசியம் என்று சித்தர்கள் சொல்லி வைத்துள்ளனர். தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்களில் மரணமடைந்தவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
27 நட்சத்திரங்களில் தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களான 13 நட்சத்திரங்கள் போக மீதமுள்ள 14 நட்சத்திரங்களில் இறப்பவர்கள் விரைவில் தடையேதுமின்றி எமலோகம் அடைகிறார்கள். அவிட்டம், சதயம்,பூரட்டாதி, உத்திரட்டாதி,ரேவதி ரோகிணி,கார்த்திகை, உத்திரம்,மிருகசீருஷம், சித்திரை, புணர்பூசம்,விசாகம், உத்திராடம் ஆகிய தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களில் இறந்தவர்கள் எமலோகம் சென்றடைய அந்த அடைப்பு என்று சொல்லப்பட்டுள்ள கால அவகாசம் தேவைப்படுகிறது. இதையே கருடபுராணமும் உறுதிபடுத்துகின்றது.
தனிஷ்டா பஞ்சமி என்பது ஒரு துர்தேவதையாகச் சொல்லப்பட்டுள்ளது. தீய அல்லது அடைப்பு உள்ள நட்சத்திரங்களில் இறந்தவர்கள் வீட்டில் முறையான பரிகாரங்களை செய்யாவிட்டால் இந்த துர்தேவதை புகுந்து அந்த வீட்டில் உள்ளவர்களை ஆவிரூபமாகவோ, கனவு மூலமாகவோ, பிரம்ம ராக்சத ரூபமாகவோ தோன்றி பயமுறுத்தி ஆறு மாதத்திற்குள் மரணப்படுக்கையில் தள்ளிவிடும் என்பார்கள். எனவேதான் கடந்த காலங்களில் இந்த அடைப்பு காலங்கள் முடியும் வரை வீட்டை பூட்டியே வைத்திருப்பார்கள். சில இடங்களில் இறந்தவருடைய சடலத்தை வாசல் வழியாக கொண்டு செல்லாமல் சுவரை இடித்து அதன்வழியாக எடுத்துக் கொண்டுபோவது, போன்ற கடுமையான விதிமுறைகளை எல்லாம் தனிஷ்டா பஞ்சமிக்காக கடைபிடித்திருக்கிறார்கள். நல்ல முறையில் மரணமடைந்தவர்கள் பற்றியும் தனிஷ்டா பஞ்சமியில் மரணமடைந்தவர்கள் படும் கஷ்டங்களையும் பார்க்கலாம்.