Just In
- 1 min ago நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- 16 min ago குழந்தையின்மைக்கு இந்த பிரச்சனைகள் எல்லாம் காரணமாக இருக்கலாம்.. கவனியுங்கள்..!
- 1 hr ago புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- 2 hrs ago உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
Don't Miss
- News நிர்மலா சீதாராமன் ஒரே போடு.. "மீண்டும் தேர்தல் பத்திர திட்டம் கொண்டு வருவோம்".. ஓடோடி வந்த காங்கிரஸ்
- Sports தோனி பேட்டிங் ஆட வருவதை தாமதப்படுத்திய வீரருக்கு விருது கொடுத்த ஜான்டி ரோட்ஸ்.. என்ன நடந்தது?
- Movies Trisha: 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே கொண்டாட்டம்.. வீடியோ வெளியிட்ட திரிஷா!
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Automobiles ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
தன் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டீச்சரம்மா... நாட்டுல என்னதான் நடக்குது?
மாணவர்களுக்கு ஆசிரியை பாலியல் தொல்லை கொடுத்த விஷயத்தைப் பற்றி இந்த பகுதியில் விளக்கப்பட்டுள்ளது. அது பற்றிய விளக்கமான தொகுப்பு தான் இது.
சமீப காலமாகத் தமிழ்நாட்டில் பாலியல் வன்முநைகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் மீதான பாலியல் வன்முறை அதிகமாகிவிட்டது. எல்லா காலத்திலும் இந்த பாலியல் சீண்டல்கள் இருந்தாலும் சமீபத்திய அளவை விட மிகக் குறைவானது தான். ஏனென்றால் வெளியுலகத் தொடர்பு மிகக் குறைவாக இருந்தது.
அதோடு அந்த காலத்தில் அக்கம் பக்கத்தினர், சுற்றத்தார் ஆகியோர் மூலமாகத் தான் பாலியல் சீண்டல்கள் அதிகம் நடப்பதாக ஆய்வுகள் குறிப்பிட்டன.
சமூக வலைத்தளங்கள்
சமீப காலக்கட்டங்களில் சமூக வலைத்தளங்கள், வெளியிடத் தொடர்புகள் விரிவாக விரிவாக இதுபோன்ற பாலியல் தொல்லைகளும் அதிகரிக்கத் தொடங்கி விட்டன. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தினந்தோறும் ஏதாவது ஒரு மூலையில் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. அப்படி நடந்த சிறுவர்கள் மீதான பாலியல் வன்கொடுமையைப் பற்றித் தான் இங்கே பார்க்கப் போகிறோம்.
சிறுவர்கள் மீதான பாலியல் கொடுமை
பொதுவாக வீட்டில் நம்மோடு குழந்தைகள் செலவிடுகின்ற நேரத்தைவிட பள்ளியில் நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் தான் அதிக நேரம் செலவிடுகின்றனர். குறைந்தபட்சம் எட்டு மணி நேரமாவது இருப்பார்கள். அதிலும் இப்போதைய பெற்றோர்கள் இருக்கிறார்களே பிள்ளைகள் செய்யும் சேட்டைகளில் இருந்து தப்பிக்கிறேன் என்ற பெயரில் ஒரு பத்து கிளாஸ்க்கு அனுப்புவார்கள். அதனால் பொதுவாக சிறுவர்கள் 10 முதல் 12 மணி நேரம் வரையிலும் நண்பர்களுடனும் ஆசிரியர்களுடனும் தான் இருக்கிறார்கள்.
ஆசிரியர்கள் சீண்டல்
அவ்வப்போது பள்ளியில் படிக்கும் பெண் பிள்ளைகளிடம் ஆண் ஆசிரியர்கள் பாலியல் சீண்டல்கள் செய்வதாக நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் முதல் முறையாக ஒரு பெண் ஆசிரியை தன்னுடைய மாணவர்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் பாலியல் சீண்டல்கள் செய்ததாவும் பாலியல் வழக்கில் கைதாகியிருப்பது இப்போது தான். குழந்தைகளை பள்ளிக்கே நம்பி அனுப்ப முடியாத நிலையில் தான் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.
யார் அந்த ஆசிரியை?
திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்துப் பள்ளியில் ஆசிரியராக இருக்கும் ரேவதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இந்த ஆசிரியை. இவர் அருகில் உள்ள ஒரு நகர்ப்புறப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.
MOST READ: பெண்ணுறுப்பில் இருந்து ஏன் கற்றாழை கவுச்சி வீசுகிறது? ஒரே இரவில் அதை எப்படி சரிசெய்யலாம்?
திருமண வாழ்க்கை
சில வருடங்களுக்கு முன்பாக ரமேஷ் என்பவருடன் ரேவதிக்குத் திருமணம் நடந்தது. ரமேசும் பள்ளி ஆசிரியர் தான். இவர்கள் இருவருக்கும் இடையே அவ்வப்போது வந்த சின்ன சின்ன கருத்து வேறுபாடுகுள் அதிகமாகி அடுத்து அது விரிவடையத் தொடங்கிவிட்டது. இருவரும் எதிரும் புதிருமாகவே இருந்ததால் சேர்ந்து வாழ விரும்பவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிந்து வாழத் தொடங்கியிருக்கிறார்கள்.
கணவர் பாலியல் புகார்
கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்ற இந்த சூழலில் ரேவதியின் கணவர் ரமேஷ் தன்னுடைய மனைவி தன்னிடம் படிக்கும் மாணவர்களுக்கு பாலியல் சீண்டல்கள் கொடுப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் ஒன்றினைக் கொடுத்தார். இதன் மீது நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
உண்மை நிரூபணம்
கணவர் புகார் கொடுத்ததை அடுத்து அரசின் குழந்தைகள் நல வாரியம் இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டது. மாணவர்களில் நிறைய பேர் அந்த ஆசிரியை தனக்கு எவ்வாறு பாலியல் சீண்டல் கொடுத்தார்கள் என்பது குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்கள். கணவர் கொடுத்த புகார் உண்மையாகவே பாலியல் அத்துமீறல் குறித்த வழக்கில் ரேவதி கைது செய்யப்பட்டார்.
நாடு எங்க தான் போகுது?
பெற்றோர்கள் தங்களை விடவும் அதிகமாக ஆசிரியர்களையே நம்பி அவர்களிடம் அதிக நேரம் குழந்தைகளை ஒப்படைக்கிறார்கள். பெற்றோர்களைப் போல மட்டுமல்லாது, சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டிய ஆசிரியர்களே இப்படி நடந்து கொண்டால் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது.