Latest Updates
-
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...!
உணவென்று நினைத்து தன் குழந்தைக்கு சிகரெட்டை ஊட்டிவிடும் தாய்ப்பறவை... நெஞ்சை உலுக்கும் படம்...
இன்றைய நிலவரத்தில் சுற்றுப்புறம் என்பது சேதங்களிலிருந்து மீட்டெடுக்க முடியாத நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது என்பது அச்சமூட்டும் ஒரு உண்மை.
நமது சுற்றுப்புறம் நாளுக்குள் நாள் மோசமடைந்து கொண்டிருக்கிறது. சுற்றுப்புறத்தை பாதுகாக்க பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தாலும், அது ஒரு சிறு சதவிகித பாதிப்பை மட்டுமே போக்கக் கூடிய அளவிற்கு உள்ளது. இன்றைய நிலவரத்தில் சுற்றுப்புறம் என்பது சேதங்களிலிருந்து மீட்டெடுக்க முடியாத நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது என்பது அச்சமூட்டும் ஒரு உண்மை.

கடற்பறவை, திமிங்கலம், மீன்கள் மற்றும் இதர அப்பாவி உயிரினங்கள் ஆகியவை உண்மையான உணவிற்கும் கழிவிற்கும் வேறுபாடு தெரியாமல் பிளாஸ்டிக் கழிவு, நாணயம், பாட்டில் மூடி, போன்றவற்றை உட்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

நெஞ்சை உலுக்குது...
ஒரு பறவை தன்னுடைய குழந்தை பறவைக்கு உணவென்று நினைத்து ஒரு சிகரெட் துண்டை வாயில் ஊட்டும் ஒரு புகைப்படம் பார்க்கவே நெஞ்சை உலுக்கும் ஒரு படமாக அமைந்துள்ளது. கரேன் மேசன் என்னும் ஒரு புகைப்படக் கலைஞர் இந்த புகைப்படத்தை எடுத்திருக்கிறார். இது ஒரு அசாதாரண புகைப்படம் ஆகும். மேலும் இதனைப் பார்க்கும்போது நெஞ்சே கனத்துப் போகிறது.
இந்த புகைப்படத்தில் ஒரு தாய்ப்பறவை தன்னுடைய குழந்தைக்கு உணவாக ஒரு சிகரெட் துண்டை ஊட்டி விடுகிறது. செயின்ட்.பீட்ஸ் பீச்சில் கரேன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும்போது இந்த அசாதாரண சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த நிகழ்வு நடைபெறும்போது கரேன் இந்த படத்தை தன்னுடைய கேமராவில் பதிவு செய்திருக்கிறார்.

தாய்ப்பறவையும் குஞ்சும்
ஒரு கருப்பு பறவை தன்னுடைய குழந்தை பறவைக்கு ஒரு அசாதரணமான பொருளை ஊட்டி விடுவதை அவர் கண்டிருக்கிறார். அது மீன் இல்லை என்பது மட்டும் அவருக்கு புரிந்திருக்கிறது. இந்த நிகழ்வை அவர் தன்னுடைய கேமராவில் பதிவு செய்தார். அவர் எடுத்த புகைப்படம் பற்றி மேலும் அவர் பெரிதாக எதுவும் யோசிக்கவில்லை. புகைப்படங்களை எடுத்தபின் அவர் வீட்டிற்கு சென்று விட்டார்.

புகைப்படங்கள்
வீட்டிற்கு வந்து தான் எடுத்த புகைப்படங்களை ஜூம் செய்து பார்க்கும்போது அவருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது என்று அவர் குறிப்பிடுகிறார். அதாவது, அவர் எடுத்த புகைப்படத்தில் அந்தத் தாய்ப்பறவை தைபரவை தன்னுடைய குழந்தைக்கு ஒரு சிகரெட் துண்டை ஊட்டுவது கண்டு அவர் பெரும் அதிர்ச்சி அடைந்தார். இந்த புகைப்படத்தை அவர் வன விலங்கு பாதுகாப்பு சார்ந்த குழுவிற்கு பகிர முடிவெடுத்தார். மேலும் அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்திலும் இந்த புகைப்படத்தை அவர் வெளியிட்டார்.

பெரும் ஆபத்து
படங்கள் வைரலாகியதும், சான் டியாகோ மாநில பல்கலைக்கழக பொது சுகாதாரப் பட்டதாரி பள்ளியின் பிரச்சாரம் தொடங்கப்பட்டது, அவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் ஒவ்வொரு ஆண்டும் 5.5 டிரில்லியன் பில்டர் சிகரெட்டுகளில் பெரும் சதவீதம் சுற்றுச்சூழலில் வீசப்படுகிறது என்பது தெரிய வந்தது.
கடலில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளை விட அதிக அபாயத்தைத் தரக்கூடிய ஒரு தன்மை சிகரெட் துண்டுகளுக்கு உண்டு என்ற தகவலும் ஆய்வறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு விலங்குகளுக்கு மட்டும் அல்ல, கடற்கரைக்கு செல்லும் சிறு குழந்தைகள் கூட சிகரெட் துண்டுகளை கையில் எடுத்து விளையாடுவதை நாம் கண்டிருக்கலாம்.



Click it and Unblock the Notifications











