Latest Updates
-
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்..
உணவென்று நினைத்து தன் குழந்தைக்கு சிகரெட்டை ஊட்டிவிடும் தாய்ப்பறவை... நெஞ்சை உலுக்கும் படம்...
இன்றைய நிலவரத்தில் சுற்றுப்புறம் என்பது சேதங்களிலிருந்து மீட்டெடுக்க முடியாத நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது என்பது அச்சமூட்டும் ஒரு உண்மை.
நமது சுற்றுப்புறம் நாளுக்குள் நாள் மோசமடைந்து கொண்டிருக்கிறது. சுற்றுப்புறத்தை பாதுகாக்க பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தாலும், அது ஒரு சிறு சதவிகித பாதிப்பை மட்டுமே போக்கக் கூடிய அளவிற்கு உள்ளது. இன்றைய நிலவரத்தில் சுற்றுப்புறம் என்பது சேதங்களிலிருந்து மீட்டெடுக்க முடியாத நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது என்பது அச்சமூட்டும் ஒரு உண்மை.

கடற்பறவை, திமிங்கலம், மீன்கள் மற்றும் இதர அப்பாவி உயிரினங்கள் ஆகியவை உண்மையான உணவிற்கும் கழிவிற்கும் வேறுபாடு தெரியாமல் பிளாஸ்டிக் கழிவு, நாணயம், பாட்டில் மூடி, போன்றவற்றை உட்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

நெஞ்சை உலுக்குது...
ஒரு பறவை தன்னுடைய குழந்தை பறவைக்கு உணவென்று நினைத்து ஒரு சிகரெட் துண்டை வாயில் ஊட்டும் ஒரு புகைப்படம் பார்க்கவே நெஞ்சை உலுக்கும் ஒரு படமாக அமைந்துள்ளது. கரேன் மேசன் என்னும் ஒரு புகைப்படக் கலைஞர் இந்த புகைப்படத்தை எடுத்திருக்கிறார். இது ஒரு அசாதாரண புகைப்படம் ஆகும். மேலும் இதனைப் பார்க்கும்போது நெஞ்சே கனத்துப் போகிறது.
இந்த புகைப்படத்தில் ஒரு தாய்ப்பறவை தன்னுடைய குழந்தைக்கு உணவாக ஒரு சிகரெட் துண்டை ஊட்டி விடுகிறது. செயின்ட்.பீட்ஸ் பீச்சில் கரேன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும்போது இந்த அசாதாரண சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த நிகழ்வு நடைபெறும்போது கரேன் இந்த படத்தை தன்னுடைய கேமராவில் பதிவு செய்திருக்கிறார்.

தாய்ப்பறவையும் குஞ்சும்
ஒரு கருப்பு பறவை தன்னுடைய குழந்தை பறவைக்கு ஒரு அசாதரணமான பொருளை ஊட்டி விடுவதை அவர் கண்டிருக்கிறார். அது மீன் இல்லை என்பது மட்டும் அவருக்கு புரிந்திருக்கிறது. இந்த நிகழ்வை அவர் தன்னுடைய கேமராவில் பதிவு செய்தார். அவர் எடுத்த புகைப்படம் பற்றி மேலும் அவர் பெரிதாக எதுவும் யோசிக்கவில்லை. புகைப்படங்களை எடுத்தபின் அவர் வீட்டிற்கு சென்று விட்டார்.

புகைப்படங்கள்
வீட்டிற்கு வந்து தான் எடுத்த புகைப்படங்களை ஜூம் செய்து பார்க்கும்போது அவருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது என்று அவர் குறிப்பிடுகிறார். அதாவது, அவர் எடுத்த புகைப்படத்தில் அந்தத் தாய்ப்பறவை தைபரவை தன்னுடைய குழந்தைக்கு ஒரு சிகரெட் துண்டை ஊட்டுவது கண்டு அவர் பெரும் அதிர்ச்சி அடைந்தார். இந்த புகைப்படத்தை அவர் வன விலங்கு பாதுகாப்பு சார்ந்த குழுவிற்கு பகிர முடிவெடுத்தார். மேலும் அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்திலும் இந்த புகைப்படத்தை அவர் வெளியிட்டார்.

பெரும் ஆபத்து
படங்கள் வைரலாகியதும், சான் டியாகோ மாநில பல்கலைக்கழக பொது சுகாதாரப் பட்டதாரி பள்ளியின் பிரச்சாரம் தொடங்கப்பட்டது, அவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் ஒவ்வொரு ஆண்டும் 5.5 டிரில்லியன் பில்டர் சிகரெட்டுகளில் பெரும் சதவீதம் சுற்றுச்சூழலில் வீசப்படுகிறது என்பது தெரிய வந்தது.
கடலில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளை விட அதிக அபாயத்தைத் தரக்கூடிய ஒரு தன்மை சிகரெட் துண்டுகளுக்கு உண்டு என்ற தகவலும் ஆய்வறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு விலங்குகளுக்கு மட்டும் அல்ல, கடற்கரைக்கு செல்லும் சிறு குழந்தைகள் கூட சிகரெட் துண்டுகளை கையில் எடுத்து விளையாடுவதை நாம் கண்டிருக்கலாம்.



Click it and Unblock the Notifications