Latest Updates
-
100 ஆண்டுக்கு பின் மே மாதத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களை பணக்காரராக்கப் போகுதாம் -
கர்நாடகா ஸ்டைல் தயிர் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணுங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
25 லட்சம் பண மாலை... கல்வீச்சு, மோதல்! ஹரியானா திருமணத்தில் நடந்த அந்த 'ஷோ-ஷாதி' கலாச்சாரத்தின் கோர முகம்! -
இந்த 4 ராசி பெண்கள் அசாத்திய புத்திசாலிகளாம் - இவங்ககிட்ட பொய் சொல்லி தப்பிக்கவே முடியாதாம் - உங்க ராசி என்ன? -
தித்திக்கும் கர்நாடகா ஸ்டைல் மாம்பழ கேசரி ரெசிபி - செஞ்சு பாருங்க, டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
டெல்லி மழையால் மாறிய சூழல்! வீட்டை மாற்றும் அந்த 4 லக்கி செடிகள் இதோ! -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… கோடை வெயிலும் தூசியும் உங்களை நெருங்கவே முடியாது! -
Mother's Day 2026: 35 வயதிற்கு பிறகு பெண்களின் எலும்புகளில் என்னென்ன மாற்றம் ஏற்படும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பருப்பே இல்லாத அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
கிழக்கிந்திய கம்பெனி எப்படி 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட ஆட்சியாளராக மாறியது தெரியுமா?
பாட்டாளி படத்துல மாதிரி மழை வர குலுக்கு சீட்டுமூலம் நிலாப்பெண் தேர்ந்தெடுக்கும் திண்டுக்கல் கிராமம்
மழை வரவழைப்பதற்காக திண்டுக்கல் கிராமத்தில் ஒரு விநோத திருவிழா நடத்தப்படுகிறது. அதற்குப் பெயர் மழைப்பெண் திருவிழா. அந்த விநோதத் திருவிழா பற்றித் தான் இங்கு பார்க்கப் போகிறோம்.
நம்முடைய வடிவேலு பெண் வேடத்தில் வடிவு கேரக்டரில் கலக்கு கலக்கென்று கலக்கிய பாட்டாளி படத்தை பார்த்து ரசிக்காதவர்கள், வயிறு குலுங்க சிரிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த படத்துக்கும் இந்த கட்டுரைக்கும் நேரடியாக எந்த சம்ந்மும் இல்லை தான். இருந்தாலும் கூட அந்த படத்தில் ஒரு காட்சி வரும்.
ஊரில் மழை பெய்யாமல் இருக்கிறது. மழைத் தாயை வேண்டி மழையை வரவழைக்க வேண்டும். அதற்காக வழக்கமாக ஊரில் ஒரு சடங்கு செய்வதுண்டு. ஊரில் உள்ள கன்னிப் பெண்களின் பெயர்களை ஒரு சீட்டில் எழுதிப் போட்டு குலுக்கி அதிலிருந்து ஒரு பெயரை எடுத்து, அதில் வரும் பெயரில் உள்ள நபர் இரவு முழுக்க ஆடையின்றி ஊரை சுற்றி வந்தால் மழை பெய்யும் என்பது போல் ஒரு காட்சி வரும். அதில் வடிவேலுவின் பெயரான வடிவு வரும். அதற்குப் பிறகு நடப்பதைப் பார்த்து தான் நாம் ரசித்திருக்கிறோமே.

இந்த கதை இப்போது எதற்கு என்று தான கேட்கறீங்க. இதோ விஷயத்துக்கு வர்றேன். நம்ம ஊர்லயும் சமீபத்துல அப்படி ஒரு திருவிழா கொண்டாடியிருக்காங்க மழை வர்றதுக்காக. ஆனா இது கொஞ்சம் வேற மாதிரி. எப்படினு சொல்றேன் கேளுங்க.

திண்டுக்கல் மாவட்டம்
நம்ம திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூருக்குப் பக்கத்துல தேவிநாயக்கன்பட்டினு ஒரு ஊருங்க. அங்க தான் இந்த திருவிழா கொண்டாடியிருக்காங்க. இப்படி மட்டுமில்லங்க. வருஷா வருஷம் கொண்டாடுறாங்களாம்.

மழை வரவழைக்க
தேவிநாயக்கன்பட்டி கிராமத்தில் காலங்காலமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தின் இறுதியில் இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறதாம். எதற்காக கொண்டாடப்படுகிறது என்று கேட்டால் வேற எதுக்கு. மழை கொட்டோ கொட்டுனு கொட்டணும். வயலெல்லாம் விளைஞ்சி நிக்கணும். விவசாயம் செழிக்கணுமு். விவசாயி வாழ்க்கையில நன்மை நடக்கணும்னு தான் கொண்டாடுறோம் என்கிறார்கள்.

எப்போது நடக்கும்?
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் வருகிற பௌர்ணமியின் போது தான் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. அதாவது தை மாத அறுவடைக்குப் பின் அடுத்த போகம் செய்வதற்கான தொடக்கமாக இந்த விழாவை நடத்தி மழையை வரவேற்கிறார்கள்.

நிலாப்பெண் திருவிழா
இந்த திருவிழாவோட பேரு என்னனனு நீங்க கேட்கலையே. நிலாப்பெண் திருவிழாதான் இதோட பேரு. ஏன்னா, நிலாவோட பேரு சந்திரனா இருந்தா கூட, பெண்ணை வருணிக்கும் போது நிலா போன்ற முகம்னு தான சொல்றாங்க. சரி விடுங்க. டென்ஷன் ஆகாம இத எப்படி கொண்டாடுறாங்கனு பார்க்கலாம். இது பெண்களை மையமாக வைத்தும் அந்த ஊரில் உள்ள அம்மனை வழிபடுவதாகவும் இருப்பதால் இந்த திருவிழாவுக்கு நிலாப்பெண் திருவிழான்னு பேரு வந்துச்சு.

எப்படி கொண்டாடுவாங்க...
இப்பதான் விஷயத்துக்கே வர்றனு நீங்க சொல்றது கேட்குது. திருவிழா வர்றதுக்கு (பௌர்ணமி) ஒரு வாரத்துக்கு முன்னாடியே ஊர் பெரியவங்க, ஊர் மக்கள் எல்லாம் பொது இடத்துல கூடுவாங்க. அந்த ஊரில் உள்ள சின்ன சின்ன (12 வயது) பெண் குழந்தைகளோ பெயர்களை துண்டுச் சீட்டுக்களில் எழுதிப் போட்டு, அதை ஒரு பானையில் போட்டு குலுக்கி ஒரு பெயரை எடுப்பார்கள்.
எடுக்கும் சீட்டில் வரும பெண்ணை தெய்வமாக ஊர் மக்கள் கருதுவார்கள். தேர்ந்தெடுக்கும் நாளில் இருந்து பௌர்ணமி வரை இந்த குழந்தை கோவிலில் தங்க வைக்கப்படுவாள்.

சிறப்பு கவனிப்பு
அப்படி தேர்ந்தெடுக்கப்படும் பெண்ணை அந்த ஊர்மக்கள் முழுக்க பயங்கரமாக உபசரிப்பார்கள். எல்லா வீடுகளிலும் இருந்து அந்த பெண்ணுக்கு தினமும் ஒரு வாரத்துக்குப் பால், பழங்கள், பரிசுப் பொருள்கள் என வந்து குவியும்.

சடங்குகள்
முழு நிலாவன்று (பௌர்ணமி) மாலைகள், பூக்கள் நிறைய அணிவித்து புத்தாடை அணிவித்து அலங்காரம் செய்து வைப்பார்கள். அதன்பின் எல்லா வீடுகளிலும் மஞ்சள் நிறத்தில் மருத்துவ குணங்கள் ஏராளமாக உடைய ஆவாரம்பூவை கூடைகளில் எடுத்துக் கொண்டு, ஊரில் உள்ள மாரியம்மன் கோவிலுக்குச் சென்று பூஜைகள் செய்வார்கள். ஊர் மக்கள் எல்லோரும் கோவிலுககுச் சென்றதும் நிலாப்பெண் மழையை வேண்டி ஒரு பாட்டுப் பாட எல்லா பெண்களும் நிலாவைப் பார்த்து வழிபடுவார்கள். அதன்பின் எல்லோருக்கும் பிரசாதம் வழங்கப்படும். அந்த கோவிலின் குளத்தங்கரை முழுக்க விளக்குகளால் ஜொலிக்கும்.

இந்த வருட நிலாப்பெண் யார்?
அப்படி கடந்த (ஜனவரி, செவ்வாய்க்கிழமை) 22 ஆம் தேதி பெணர்ணமியன்று நிலாப்பெண் திருவிழா அந்த கிராமத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதில் இந்த வருடத்தின் நிலாப்பெண்ணாக தேர்வு செய்யப்பட்டவர், அந்த தேவநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், தவமணி தம்பதியரின் ஏழு வயது மகளான கனிஷ்கா தான் இந்த வருட நிலாப்பெண்.



Click it and Unblock the Notifications