Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவை தட்டப்போகுதாம் -
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
5 வருஷமா மண்டைக்குள் இந்த மரக்குச்சிய வெச்சிக்கிட்டு இருந்த மனுஷன்... யாருனு நீங்களே பாருங்க...
ஐந்து வருடங்களாக தலைக்குள் மரக்குச்சிகளை வைத்துக் கொண்டு அவதிப்பட்டுக் கொண்டிருந்த மனிதரைப் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம்.
பல நேரங்களில் நாம் சின்னக் காயங்களை கண்டுக்காமல் அலட்சியப்படுத்தி விடுவோம். ஆனால் அதுவே பிறகு உயிருக்கு உலை வைக்கும் போராபத்தாகி விடுகிறது. அப்படித்தான் சீனாவில் ஒரு மனிதருக்கு நடந்துள்ளது.

சீனாவின் யுன்னான் மகாணத்தில் உள்ள ஒருவர் தலைவலி மற்றும் கண்கள் வீக்கத்திற்காக மருத்துவமனைக்கு சென்று உள்ளார். அப்பொழுது தன் தலைக்குள் மரக் குச்சிகள் குத்தியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தீராத வலி
41 வயதான அவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு தலையில் ஒரு அசெளகரியத்தை உணர்ந்ததாக கூறியுள்ளார். முன்பு வலது கண்ணில் ஏற்பட்டுள்ள தொற்றிக் காரணமாக இருக்கும் என்று அலட்சியமாக விட்டு விட்டேன். ஆனால் இப்பொழுது கண் வங்கத் தொடங்கி விட்டது. மேலும் தீராத தலைவலியும் ஏற்படுகிறது என்று கூறியுள்ளார்.

ஸ்கேன்
கடைசியில் வலியை என்னால் தாங்க முடியவில்லை. உடனே மருத்துவர்கள் அவரது தலைப்பகுதியை ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். மூளைக்குள் நிறைய மரக்குச்சிகள் குத்தியிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த குச்சிகளின் நீளம் 11 செமீ இருக்குமாம். இது எப்படி உங்கள் மூளைக்குள் வந்தது, 5 வருடங்கள் முன்னாடி இது நிகழ்ந்துள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

மரத்தில் மோதிய ஞாபகம்
அவர் மோஜியாங் கவுண்டியில் உள்ள காடுகளில் பணிபுரிந்தபோது, தடினமான மரக்கிளைக்களுக்கிடையே விழுந்ததை நினைவுக் கூர்ந்து உள்ளார். அப்பொழுது மரக்குச்சிகள் அவருடைய வலது கண்ணை நுழைத்து உள்ளது. பிறகு அவர் அந்த குச்சியை நீக்கி உள்ளார். கடுமையான இரத்த போக்கு ஏற்பட்டது.
அதன்பின் காயங்கள் தானாகவே ஆறி விட்டது. என் பார்வையில் எந்த பிரச்சனையும் இதுவரை ஏற்படாததால் நான் மருத்துவ மனைக்கும் செல்லவில்லை. ஆனால் அதிலிருந்து தான் எனக்கு தீவிர தலைவலி தொடங்கியது. அதை நான் அலட்சியமாக விட்டதால் தான் இப்பொழுது பெரிய ஆபத்தில் சிக்கித் தவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

அதிர்ஷ்டசாலி
மூளையில் இவ்வளவு மரக்குச்சிகளுடன் நீங்கள் இவ்வளவு காலம் உயிர் வாழ்ந்ததே அதிசயம் என்றுள்ளனர் மருத்துவர்கள். இந்த மரக்குச்சிகள் முக்கியமான இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளை பாதித்து இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த குச்சிகள் அனைத்தும் அவரது சிறுமூளையையே தாக்கி இருந்தது. இதை அவர் இன்னும் அப்படியே விட்டு இருந்தால் தொற்றுக்கள் பெருகி உயிருக்கே ஆபத்தாகி இருக்கும் என்று எச்சரிக்கை செய்துள்ளார்கள் மருத்துவர்கள்.

அறுவை சிகிச்சை
உடனடியாக இந்த மரக்குச்சிகளை மூளையில் இருந்து நீக்கியாக வேண்டும். அறுவை சிகிச்சைக்கு தாமதமானால் உங்களுக்கு கண் பார்வை இழப்பு நேரிடலாம் என்று கூறியுள்ளனர். அந்த மனிதர் மற்றும் அவரது மனைவியின் ஒப்புதல் பேரில் அறுவை சிகிச்சை உடனடியாக செய்யப்பட்டு தற்போது அந்த மனிதர் உயிர் பிழைத்து உள்ளார். இன்னும் சில நாட்களில் குணமடைந்து விடுவார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் இந்த மாதிரி சின்ன சின்ன காயங்களை, விபத்துகளை அலட்சியமாக விடாதீர்கள். அறிகுறிகள் தொடர்ந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டு உள்ளனர்.



Click it and Unblock the Notifications