Just In
- 15 min ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- 40 min ago Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- 1 hr ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- 2 hrs ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
Don't Miss
- Automobiles சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- News தாலி சர்ச்சை.. மோடிக்கு காங்கிரஸ் பதிலடி.. தங்கத்தை நாட்டுக்கு தந்த இந்திராவின் போட்டோ ட்ரெண்ட்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Movies மாட்டிக்கினாரு ஒருத்தரு.. சமந்தாவின் மாஜி கணவர் அந்த நடிகையுடன் டேட்டிங்கா?.. தீயாய் பரவும் பிக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
5 வருஷமா மண்டைக்குள் இந்த மரக்குச்சிய வெச்சிக்கிட்டு இருந்த மனுஷன்... யாருனு நீங்களே பாருங்க...
ஐந்து வருடங்களாக தலைக்குள் மரக்குச்சிகளை வைத்துக் கொண்டு அவதிப்பட்டுக் கொண்டிருந்த மனிதரைப் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம்.
பல நேரங்களில் நாம் சின்னக் காயங்களை கண்டுக்காமல் அலட்சியப்படுத்தி விடுவோம். ஆனால் அதுவே பிறகு உயிருக்கு உலை வைக்கும் போராபத்தாகி விடுகிறது. அப்படித்தான் சீனாவில் ஒரு மனிதருக்கு நடந்துள்ளது.
சீனாவின் யுன்னான் மகாணத்தில் உள்ள ஒருவர் தலைவலி மற்றும் கண்கள் வீக்கத்திற்காக மருத்துவமனைக்கு சென்று உள்ளார். அப்பொழுது தன் தலைக்குள் மரக் குச்சிகள் குத்தியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தீராத வலி
41 வயதான அவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு தலையில் ஒரு அசெளகரியத்தை உணர்ந்ததாக கூறியுள்ளார். முன்பு வலது கண்ணில் ஏற்பட்டுள்ள தொற்றிக் காரணமாக இருக்கும் என்று அலட்சியமாக விட்டு விட்டேன். ஆனால் இப்பொழுது கண் வங்கத் தொடங்கி விட்டது. மேலும் தீராத தலைவலியும் ஏற்படுகிறது என்று கூறியுள்ளார்.
MOST
READ:
இந்தமாதிரி
இருந்தா
சும்மா
விட்றாதீங்க...
இது
அந்த
நோயா
கூட
இருக்கலாம்...
ஸ்கேன்
கடைசியில் வலியை என்னால் தாங்க முடியவில்லை. உடனே மருத்துவர்கள் அவரது தலைப்பகுதியை ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். மூளைக்குள் நிறைய மரக்குச்சிகள் குத்தியிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த குச்சிகளின் நீளம் 11 செமீ இருக்குமாம். இது எப்படி உங்கள் மூளைக்குள் வந்தது, 5 வருடங்கள் முன்னாடி இது நிகழ்ந்துள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
மரத்தில் மோதிய ஞாபகம்
அவர் மோஜியாங் கவுண்டியில் உள்ள காடுகளில் பணிபுரிந்தபோது, தடினமான மரக்கிளைக்களுக்கிடையே விழுந்ததை நினைவுக் கூர்ந்து உள்ளார். அப்பொழுது மரக்குச்சிகள் அவருடைய வலது கண்ணை நுழைத்து உள்ளது. பிறகு அவர் அந்த குச்சியை நீக்கி உள்ளார். கடுமையான இரத்த போக்கு ஏற்பட்டது.
அதன்பின் காயங்கள் தானாகவே ஆறி விட்டது. என் பார்வையில் எந்த பிரச்சனையும் இதுவரை ஏற்படாததால் நான் மருத்துவ மனைக்கும் செல்லவில்லை. ஆனால் அதிலிருந்து தான் எனக்கு தீவிர தலைவலி தொடங்கியது. அதை நான் அலட்சியமாக விட்டதால் தான் இப்பொழுது பெரிய ஆபத்தில் சிக்கித் தவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
அதிர்ஷ்டசாலி
மூளையில் இவ்வளவு மரக்குச்சிகளுடன் நீங்கள் இவ்வளவு காலம் உயிர் வாழ்ந்ததே அதிசயம் என்றுள்ளனர் மருத்துவர்கள். இந்த மரக்குச்சிகள் முக்கியமான இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளை பாதித்து இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த குச்சிகள் அனைத்தும் அவரது சிறுமூளையையே தாக்கி இருந்தது. இதை அவர் இன்னும் அப்படியே விட்டு இருந்தால் தொற்றுக்கள் பெருகி உயிருக்கே ஆபத்தாகி இருக்கும் என்று எச்சரிக்கை செய்துள்ளார்கள் மருத்துவர்கள்.
MOST
READ:
வெறும்
பொம்மைகள்
மட்டும்
வாழும்
அமானுஷ்ய
கிராமத்தை
பாருங்க...
பார்க்கவே
பீதியா
இருக்கு...
அறுவை சிகிச்சை
உடனடியாக இந்த மரக்குச்சிகளை மூளையில் இருந்து நீக்கியாக வேண்டும். அறுவை சிகிச்சைக்கு தாமதமானால் உங்களுக்கு கண் பார்வை இழப்பு நேரிடலாம் என்று கூறியுள்ளனர். அந்த மனிதர் மற்றும் அவரது மனைவியின் ஒப்புதல் பேரில் அறுவை சிகிச்சை உடனடியாக செய்யப்பட்டு தற்போது அந்த மனிதர் உயிர் பிழைத்து உள்ளார். இன்னும் சில நாட்களில் குணமடைந்து விடுவார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் இந்த மாதிரி சின்ன சின்ன காயங்களை, விபத்துகளை அலட்சியமாக விடாதீர்கள். அறிகுறிகள் தொடர்ந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டு உள்ளனர்.