Just In
- 17 min ago இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- 2 hrs ago நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- 3 hrs ago சித்ரா பெளர்ணமி.. திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்.. கிரிவலம் செல்ல நல்ல நேரம் எது?
- 3 hrs ago அனுமன் ஜெயந்தியன்று உருவாகும் அரிய யோகங்கள்: இன்று இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப் போகுது..
Don't Miss
- News சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.. ஏற்புடையது இல்லை.. மோடியை நேரடியாக அட்டாக் செய்த எடப்பாடி
- Movies சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. காட்டில் செம மழைதான் போங்க
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
துரோகம் செய்த நடிகர்களை மன்னித்து ஏற்றுக் கொண்ட மனைவிகள்!
துரோகம் செய்த நடிகர்களை மன்னித்து ஏற்றுக் கொண்ட மனைவிகள்!
Recommended Video
என்ன தான் உலகின் சிறந்த பொருள் நம் கையில் இருந்தாலும், பக்கத்தில் வேறு கவர்ச்சியான பொருள் இருந்தால்... நம் கையில் இருக்கும் பொருளின் மதிப்பை மறந்து வேறு பொருள்கள் மீது நாட்டம் செலுத்துவது மனிதர்களின் இயல்பு. இது சாதாரண உடை, உணவுகளில் இருந்து வாழ்க்கை துணை வர அனைத்திற்கும் பொருந்தும்.
மனைவியை ஏமாற்றிய கணவன் என்ற செய்தி வெளிவாராத நாளே இல்லை. இது போன்ற சூழல்களை நட்சத்திர தம்பதிகளும் தாண்டி வந்துள்ளனர். இதனால் விவாகரத்து பெற்ற ஸ்டார் தம்பதிகளும் இருக்கிறார்கள். சில சமயங்களில் கல்லானாலும் கணவன் என கற்பிக்கப்பட்டு வளர்ந்த பெண்கள் சிலர், அவர்களுக்கு மறு வாய்ப்பு அளித்து மன்னித்து ஏற்ற சம்பவங்களும் நடந்துள்ளன.
உண்மையில் கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற பழமொழியின் அர்த்தமே வேறு, கல் போன்ற கடினமானவனாக இருந்தாலும், புள் போன்று மென்மையானவராக இருந்தாலும் கணவன், கணவன் தான் என்பதே இதன் உண்மை பொருள் என அறியப்படுகிறது.
சரி! இனி, துரோகம் செய்த கணவனை மன்னித்து ஏற்றுக் கொண்ட நட்சத்திரங்களின் மனைவியர் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்...
ஆதித்யா பஞ்சோலியின் மனைவி!
கங்கனா முதன் முறையாக ஆதித்யா பஞ்சோலியை கண்ட போது அவர் நடிகையாக முயற்சித்துக் கொண்டிருந்தார்.
அன்று ஜூன் 27, 2004. சாலை ஓரத்தில் நின்று தன்னைக் காண காத்திருந்தார். மழையில் நனைந்தபடி தனது தோழரின் பைக் அருகே நின்றுக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு கட்டுமான வேலை விஷயமாக நான் அந்த இடத்திற்கு சென்றிருந்தேன். அங்கு தான் அவர் என்னிடம் வந்து பேச முயன்றார், நான் அவரிடம் பேசும் வரை தொடர்ந்து என்னை காண முயற்சித்துக் கொண்டே இருந்தார். கடைசியில் அவரை நான் சந்தித்து பேச ஒப்புக் கொண்டேன். கங்கனா மிகவும் ஸ்வீட்டான பெண். நான் அவர் மீது காதல் கொண்டேன். என ஆதித்யா பஞ்சோலி கூறியிருக்கிறார்.
MOST READ: பிரபல அரசியல்வாதிகளின் மறைக்கப்பட்ட காதல் பக்கங்கள்!
ஸரீனா!
மனைவி ஸரீனா வஹாபை ஆதித்யா பஞ்சோலி பல பெண்களுடன் உறவில் இருந்து ஏமாற்றியதாக அவரே கூறியுள்ளார். லட்சக்கணக்கான முறை நான் அதற்கு மன்னிப்பும் கேட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார். கங்கனாவுக்கு இவர் நிறைய பணவுதவி செய்ததாகவும், ஒருமுறை கங்கனா இவர் மீது டார்ச்சர் செய்ததாக கூறி வழக்கு தொடர்ந்தார் என்றும் பல செய்திகள் வெளியாகின.
ஆனால், அனைத்தையும் தாண்டி, ஸரீனா வஹாப், ஆதித்யா பஞ்சோலியை மன்னித்து ஏற்றுக் கொண்டார்.
அமிதாப் பச்சன்!
அமிதாப்பச்சன் மற்றும் ஜெயா இருவரும் பாலிவுட்டின் ரொமாண்டிக் தம்பதி. பொது இடங்களில் கூட எந்தவிதமான தயக்கமும் இன்றி லிப்லாக் கொடுக்கும் அளவிற்கு இவர்கள் வெளிப்படையான காதல் ஜோடி. ஆனால், அமிதாப் பச்சனே தனது மனைவி ஜெயாவை ஏமாற்றி ரேகாவுடன் உறவில் இருந்தார் என பல ஊடகங்களில் அந்நாட்களில் தலைப்பு செய்திகளாக வெளியாகின.
ஜெயாபச்சன்!
இதை, இருவருமே ஒப்புக்கொள்ளவில்லை எனிலும், அமிதாப் பச்சன் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளுக்கு எல்லாம் பதிலளித்துக் கொண்டிருக்க முடியாது என கோபித்துக் கொண்டார்.
ஆனால் ஜெயாபச்சன், "நான் என் கணவரை நம்புகிறேன். நான் அவர் மீது முழுமையான தைரியமும், அன்பும் கொண்டிருக்கிறேன். எனக்கு அவர் பணிபுரியும் துறை எத்தகையது என தெரியும். நான் அவரது செயலில் ஒருபோதும் அச்சத்தையோ, நம்பிக்கையின்மையோ உணர்ந்தது இல்லை." எனக் கூறி அமிதாப்பச்சனை அப்படியே ஏற்றுக் கொண்டார்.
கோவிந்தா!
ஹாத் கர் தி ஆப்னே என்ற படத்தில் நடிகர் கோவிந்தா மற்றும் ராணி முகர்ஜி இணைந்து நடித்து வந்தனர். அப்போது அவர்கள் இருவருக்கும் மத்தியில் காதல் இருப்பதாக கிசுகிசு பரவியது. ஒரு முறை ஒரு செய்தி நிபுணர் வெளிப்படையாக தானே, கோவிந்தாவை ராணி இல்லத்தில் இரவு உடையில் நேரே கண்டுள்ளேன் என கூறினார். ஆனால், அதை ராணியின் பெற்றோர் முற்றிலுமாக மறுத்துவிட்டனர்.
ஷாருக்கான்!
இந்த புரளி பாலிவுட்டில் மிக பிரபலம், ஆனால், தமிழில் பெரும்பாலானோருக்கு தெரியாது. டான் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது ஷாருக் கான் மற்றும் பிரியங்கா சோப்ரா இருவரும் திருமணம் செய்துக் கொண்டார்கள் என கூறப்பட்டது. ஒருமுறை ஷாருக்கான் அலுவலகத்தில் இருந்து நள்ளிரவு மூன்று மணியளவில் பிரியங்கா சோப்ரா வெளியேறினார் என்றும் செய்திகள் வெளியாகின.
ஜாக்கெட்!
மேலும், ஒருமுறை பிரியங்கா சோப்ரா தானளித்த பேட்டியில், எனது எக்ஸ்-ன் லெதர் ஜாக்கெட் ஒன்று என்னிடம் பத்திரமாக இருக்கிறது என குறிப்பிட்டிருந்தார். அந்த லெதர் ஜாக்கெட்டுடன் ஷாருக்கான் ஓரிருமுறை தென்பட்டுள்ளார் என்றும் செய்திகளில் தகவல் வெளியாகின.
ஆனால், ஷாருக்கான் மீது கெளரி கான் எள்ளளவும் சந்தேகப் படவில்லை. அவரை முழுமையாக காதலுடன் ஏற்றுக் கொண்டுள்ளார்.
அஜய் தேவ்கான்!
பாலிவுட்டில் சீக்கிரம் பிரிந்துவிடுவார்கள் என கருதப்பட்ட காதல் ஜோடி அஜய் மற்றும் கஜோல். ஆனால், அனைவரும் வியப்படையும் வண்ணம் ஒரு ஸ்டார் தம்பதி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறார்கள் இவர்கள்.
ஆனால், இவர்கள் வாழ்விலும் புயல் வீசியது. ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது கங்கனாவுக்கும், அஜய்க்கும் நடுவே சில கிசுகிசுக்கள் பரவின.
அந்த நேரத்தில் இவர்கள் இருவரும் பிரிந்துவிடுவார்கள் என சினிமா வட்டாரம் மீண்டும் எதிர்பார்த்தது. ஆனால், தனது கணவன் மீது தான் வைத்திருந்த நம்பிக்கை மூலம், அஜயை அப்படியே, அதே காதலுடன் ஏற்றுக் கொண்டார் கஜோல்.
அக்ஷய் குமார்!
அக்ஷை குமார் ட்விங்கிள் கண்ணாவுடன் காதலில் இருந்தே அதே சமயத்தில், ஷில்பா ஷெட்டியையும் காதலித்து வந்தார் என தகவல்கள் பரவின. அக்ஷய் தன்னை ஏமாற்றுகிறார் என அறிந்தே ஷில்பா அவரை பிரிந்தார் என கூறப்பட்டது.
இதை அனைத்தையும் அறிந்தும், ட்விங்கிள் அக்ஷய் குமாரை காதலுடன், முழு மனதுடன் அப்படியே ஏற்றுக் கொண்டார். இன்று வரை இந்த காதல் ஜோடி துளியளவும் ரொமான்ஸ் குறையாமல் வாழ்ந்து வருகிறார்கள்.
ராஜ் கபூர்!
ராஜ் கபூர் கிருஷ்ணா மல்ஹோத்ரா என்பவரை திருமணம் செய்துக் கொண்ட போதிலும், அந்த காலத்தில் நடிகை நர்கிஸ் உடன் காதலில் இருந்தார் என கூறப்படுகிறது.
நர்கிஸ் மட்டுமின்றி, பலருடன் இவருக்கு நெருக்குமான உறவு இருந்தது என்றும் புரளிகள் வெளியாகின. ஆனால், அத்தனையையும் ஒதுக்கிவிட்டு தனது கணவன் மீதிருந்த நம்பிக்கை காரணத்தால் கிருஷ்ணா மல்ஹோத்ரா ராஜ் கபூரை மன்னித்து ஏற்றுக் கொண்டார்.
இப்படி தாங்கள் நேசித்து திருமணம் செய்துக் கொண்ட துணையை ஏமாற்றியவர்கள் ஒருபுறம் இருக்க. காதலித்து கரம்பிடித்து, ஆண்கள் பல கடந்தாலும் காதல் குறையாமல் இனிக்க, இனிக்க நேசித்து ஒன்றாக வாழ்ந்து வரும் திரை பிரபலங்களும் இருக்கிறார்கள். அந்த டாப் 10 ஜோடிகள் குறித்து தொடர்ந்து காணலாம்...
MOST READ: நீங்கள் பயன்படுத்தும் இந்த பல்புகள்தான் உங்களுக்கு புற்றுநோயை உண்டாக்குகிறது தெரியுமா?
ஜோடி #1
அஜித் - ஷாலினி, அமர்களம் படத்தில் அமர்களமாக துவங்கிய இந்த காதல், திருமணத்தில் இணைந்து, பல கடினமான சூழலை ஒன்றாக கடந்து வெற்றிகரமான ஜோடியாக திகழ்ந்து வருகிறார்கள்.
ஜோடி #2
சூர்யா - ஜோ, திரை பிரபலங்கள் என்று மட்டுமில்லாமல் ரசிகர்களும் கூட ரசித்து பார்க்கும் ஜோடி. இப்படி தான்யா லவ் பண்ணி வாழனும் என்று ஒரு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறார்கள்.
ஜோடி #3
இவங்களுக்குள்ள காதலா என்று ஆரம்பத்தில் ஆச்சரியப்பட்டவர்கள் இருந்தனர். இப்போதும் இந்த ஜோடி காதல் குறையாமல் ஒற்றுமையாக வாழ்ந்து, எப்படி வாழ வேண்டும் என ஒரு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறார்கள்.
ஜோடி #4
பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்துக் கொண்ட போது, கணேஷ் - ஆர்த்தி ஜோடி எப்படி விட்டுக் கொடுத்து வாழ்வது என்பதை ரசிகர்கள் முன்பு பேசி இருந்தனர். காமெடி நடிகர்களாக இருந்தாலும், இவர்கள் ஒரு சீரியசான காதல் ஜோடி.
ஜோடி #6
பாலிவுட் வட்டாரத்தின் கியூட் ஜோடிஜெனிலியா - ரித்தேஷ். இந்த தம்பதிக்கு இரண்டு அழகிய ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
MOST READ: உங்க முகமும் இப்படி சுருங்கி கருத்துப்போயிருக்கா? எலுமிச்சை பழத்தை இப்படி தேய்ங்க...
ஜோடி #7
தன்னை விட வயதில் மூத்த பெண்ணை காதலித்து திருமணம் செய்திருந்தாலும். திரைக்கு வந்ததில் இருந்தே சாக்லேட் பாய், மாஸ் ஹீரோ பெயர் பெற்றிருந்தாலும். பெரிதாக கிசுகிசுக்களில் கூட அடிப்படாத ஹீரோ மகேஷ் பாபு.
ஜோடி #8
ராஜசேகர் - ஜீவிதா!
ஜோடி #9
நவரச நாயகன் கார்த்திக் மற்றும் அவரது காதல் மனைவி ராகினி.
ஜோடி #10
சிவரஞ்சனி - ஸ்ரீகாந்த்!