Just In
- 1 hr ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 7 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 8 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 9 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
Don't Miss
- Sports கேமரா மேனை சிக்சரால் பதம் பார்த்த ரிஷப் பண்ட்.. விசயம் தெரிந்த உடன் பண்ட் செய்த நெகிழ்ச்சி சம்பவம்
- News தோசைக்கு ஏன் ‛தோசை’னு பெயர் வந்தது தெரியுமா? அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே! சுவாரசியம்
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எமனின் உயிரைப் பறித்து, மீண்டும் உயிர் கொடுத்த சிவபெருமான்!
இங்கு எமனை வென்று, 'என்றும் 16' என்னும் வரத்தைப் பெற்ற புகழ் பெற்ற மார்கண்டேயரின் வரலாறு குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
புராணங்களின் படி, எல்லா சமயங்களிலும் மிகவும் சக்தி வாய்ந்த முனிவராக இருப்பவர் தான் மார்கண்டேயர். இவர் தீவிர சிவ பக்தரான மிருகண்டுவின் மகனாவார். இவர் தன்னைப் பிடிக்க வந்த எமனை வென்று, சிவனிடமிருந்து ஓர் அற்புத வரத்தைப் பெற்றவர்.
இந்த மார்கண்டேயரின் வரலாறு மிகவும் பிரபலமானது. உங்களுக்கு மார்கண்டேயரின் கதை தெரியாதென்றால் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மிருகண்டு முனிவர்
மிருகண்டு முனிவருக்கு குழந்தைகளே இல்லை. இவர் தன் மனைவியுடன் சேர்ந்து குழந்தை வரம் வேண்டி, சிவனை நோக்கி தவம் புரிந்தனர். மிருகண்டு மற்றும் அவரின் மனைவி செய்த தவத்தால் மனம் குளிர்ந்த சிவன், அவர்கள் முன்பு தோன்றினார்.
எந்த மாதிரி குழந்தை வேண்டும்?
மிருகண்டுவின் முன் தோன்றிய சிவன், அவர்களிடம் உங்களுக்கு 100 வயது வரை வாழும் முட்டாள் குழந்தை வேண்டுமா அல்லது 16 வயது வரை வாழும் புத்திசாலியான குழந்தை வேண்டுமா என்று கேட்டார். அந்த தம்பதியினர் 16 வயது வாழும் புத்திசாலியான குழந்தை வேண்டும் என்று வேண்டினர். சிவனும் அதற்கு அருள் புரிந்தார்.
மார்கண்டேயர்
அப்படி மிருகண்டு முனிவர் தவமிருந்து பெற்ற குழந்தை தான் மார்கண்டேயர். இந்த மார்கண்டேயரை மிருகண்டு முனிவர் தன்னைப் போலவே தீவிர சிவ பக்தராக வளர்த்தார். தந்தையின் ஆலோசனையின் படி திருகடையூரில் உள்ள ஸ்ரீ அமிர்தகடேஸ்வரரை தினமும் கங்கை நீரைக் கொண்டு வழிபட்டு வந்தார்.
எமனின் வருகை
ஒருநாள் எமதர்ம ராஜா 16 வயதை எட்டிய மார்கண்டேயரை அழைத்துச் செல்ல பூலோகம் வந்தார். அதைக் கண்ட மார்கண்டேயர் எமனைக் கண்டு அஞ்சி ஓடி, சிவலிங்கத்தை கட்டி அணைத்து தஞ்சம் அடைந்தார். சிவபெருமான் தனது பாதுகாப்பில் உள்ள மார்கண்டேயனைத் தொடாதே என்று எமனை எச்சரித்தார்.
சிவனின் கோபம்
இருப்பினும் எமன் சற்று கேட்காமல், தன் கையில் உள்ள பாசக் கயிற்றை மார்கண்டேயன் மீது வீசினார். அப்படி வீசிய பாசக்கயிறு மார்கண்டேயனுடன் லிங்கத்துடனும் சேர்த்து விழ, உடனே சிவபெருமான் கோபம் கொண்டு தன் இடது காலால் எமனை உதைத்து, தனது இடது காலுக்கு கீழ் படுக்க வைத்து, எமனை செயலற்று போக செய்தார்.
சிவனின் கோபம் தணியும் வரை, பூமியில் எந்த உயிரும் இறக்காமல் இருந்தது. பின் பூமி எப்போதும் போன்று செயல்பட வேண்டும் என்று சிவன் கூறி, காலசம்ஹாரமூர்த்தியாய் எழுந்தருளிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர், எமனுக்கு உயிர் கொடுத்தார்.
மார்கண்டேயன் பெற்ற வரம்
பின்பு மார்கண்டேயனுக்கு 'என்றும் 16' என்னும் வரத்தை சிவன் வழங்கினார். இதனால் 16 வயதில் இறப்பை சந்திக்கவிருந்த மார்கண்டேயர், வாழ்நாள் முழுவதும் 16 வயதுடனேயே இருந்தார் என்று வரலாறு கூறுகிறது.