Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க...
வீட்டில் இந்த 3 சிலைகளை வைத்திருந்தால், பணப்பிரச்சனை நீங்கி, சந்தோஷம் அதிகரிக்கும் தெரியுமா?
வீட்டு பூஜை அறையில் குறிப்பிட்ட 3 தெய்வ சிலைகளை வைத்திருப்பதன் மூலம், வீட்டில் உள்ள பணப்பிரச்சனை நீங்கி, குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.
பெரும்பாலான இந்துக்களின் வீடுகளில் உள்ள பூஜை அறைகளும் பல தெய்வ சிலைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். வீடுகளில் இத்தனை தெய்வ சிலைகளை தான் வைத்திருக்க வேண்டும் என்பதில்லை என்பதால், பலரும் பல வித்தியாசமான மற்றும் அழகிய தெய்வ சிலைகளை வாங்கி வந்து பூஜை அறையில் வைப்பார்கள்.
ஆனால் வீட்டு பூஜை அறையில் குறிப்பிட்ட 3 தெய்வ சிலைகளை வைத்திருப்பதன் மூலம், வீட்டில் உள்ள பணப்பிரச்சனை நீங்கி, குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.
இக்கட்டுரையில் பூஜை அறையில் வைத்திருக்க வேண்டிய அந்த 3 தெய்வ சிலைகள் எவையென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து வீட்டில் வைத்து நன்மைப் பெறுங்கள்.

மஞ்சளால் ஆன விநாயகர் சிலை
மஞ்சள் அல்லது தங்க முலாம் பூசப்பட்ட விநாயகர் சிலையை வைத்திருந்தால், வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்கள் நீங்கும். வேண்டுமெனில் வீட்டில் உள்ள மஞ்சள் பொடியை நீர் சேர்த்து கலந்து, விநாயகர் சிலையை செய்தும் பூஜை அறையில் வைத்துக் கொள்ளலாம்.

மரத்தால் ஆன விநாயகர் சிலை
ஆல மரம், மா மரம் அல்லது வேப்ப மர மரத்தாலான விநாயகர் சிலையை பூஜை அறையில் வைத்திருப்பது மிகவும் நல்லது. இந்த வகையிலான தெய்வ சிலை, வாழ்வில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, சந்தோஷமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

சிவனின் சிலை
பலரும் சிவபெருமானின் சிலையை வைத்திருப்பது வீட்டில் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் என நினைத்து வைத்திருக்கின்றனர். ஆனால் ஒரு பூஜை அறையில் ஒரே ஒரு சிவனின் சிலை தான் இருக்க வேண்டும். ஒன்றிற்கு மேற்பட்ட சிவனின் சிலைகள் பூஜை அறையில் இருந்தால், அது வீட்டில் பிரச்சனைகளுக்கு தான் வழிவகுக்கும். எனவே ஒரே ஒரு சிவனின் சிலையை மட்டும் வைத்து வணங்குங்கள்.

குறிப்பு
சிவனின் சிலையை வைப்பதாக இருந்தால், அது சிவபெருமான் தியானம் செய்வது போன்றதை தான் வைத்திருக்க வேண்டுமே தவிர, நடனம் ஆடுவது போன்று வைத்திருக்கக்கூடாது. இது எதிர்மறை ஆற்றலைத் தான் அதிகரிக்கும்.

நடராஜன் சிலை
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் நடராஜன் சிலையை வைத்திருப்பதை தவிர்த்திடுங்கள். இது ஒருவரது மனதில் உள்ள கோபத்தை அதிகரித்து, வீட்டில் அமைதியை பாதிக்கும்.



Click it and Unblock the Notifications