Latest Updates
-
1 கப் மைதா இருந்தா இந்த சூப்பரான மங்களூர் பன்-யை ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
சஞ்சய் கபூர் சொத்து விவகாரம்: கரிஷ்மா கபூர் குழந்தைகளின் உரிமையை மீட்டெடுத்த நீதிமன்றம்! -
இந்த 4 எழுத்துக்களில் பெயர் தொடங்குபவர்கள் ராஜவாழ்க்கை வாழ பிறந்தவர்களாம் - உங்க பெயரின் முதல் எழுத்து என்ன? -
கர்நாடகா ஸ்டைல் கசப்பே இல்லாத பாவக்காய் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… காற்று சுத்தமாகும், பணமும் அதிர்ஷ்டமும் தானாக வரும்! -
பணத்தின் வரலாறு: பணம் கண்டுபிடிப்பதற்கு முன் எதை வைத்து மக்கள் பொருட்களை வாங்கினார்கள் தெரியுமா? -
சம்பளம் வந்ததும் மணி பிளாண்ட் வாங்குறீங்களா? பணத்தை அள்ளிக் கொடுக்கும் அந்த ரகசிய திசை இதுதான்! -
May 2026 Monthly Horoscope: மே மாதத்தில் வெற்றிப்படிக்கட்டில் வேகமாக ஏறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
மசாலா பன் தோசையும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 30 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு கேட்டது கிடைக்கும் நாளாக இருக்குமாம்
வீட்டில் இந்த 3 சிலைகளை வைத்திருந்தால், பணப்பிரச்சனை நீங்கி, சந்தோஷம் அதிகரிக்கும் தெரியுமா?
வீட்டு பூஜை அறையில் குறிப்பிட்ட 3 தெய்வ சிலைகளை வைத்திருப்பதன் மூலம், வீட்டில் உள்ள பணப்பிரச்சனை நீங்கி, குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.
பெரும்பாலான இந்துக்களின் வீடுகளில் உள்ள பூஜை அறைகளும் பல தெய்வ சிலைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். வீடுகளில் இத்தனை தெய்வ சிலைகளை தான் வைத்திருக்க வேண்டும் என்பதில்லை என்பதால், பலரும் பல வித்தியாசமான மற்றும் அழகிய தெய்வ சிலைகளை வாங்கி வந்து பூஜை அறையில் வைப்பார்கள்.
ஆனால் வீட்டு பூஜை அறையில் குறிப்பிட்ட 3 தெய்வ சிலைகளை வைத்திருப்பதன் மூலம், வீட்டில் உள்ள பணப்பிரச்சனை நீங்கி, குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.
இக்கட்டுரையில் பூஜை அறையில் வைத்திருக்க வேண்டிய அந்த 3 தெய்வ சிலைகள் எவையென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து வீட்டில் வைத்து நன்மைப் பெறுங்கள்.

மஞ்சளால் ஆன விநாயகர் சிலை
மஞ்சள் அல்லது தங்க முலாம் பூசப்பட்ட விநாயகர் சிலையை வைத்திருந்தால், வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்கள் நீங்கும். வேண்டுமெனில் வீட்டில் உள்ள மஞ்சள் பொடியை நீர் சேர்த்து கலந்து, விநாயகர் சிலையை செய்தும் பூஜை அறையில் வைத்துக் கொள்ளலாம்.

மரத்தால் ஆன விநாயகர் சிலை
ஆல மரம், மா மரம் அல்லது வேப்ப மர மரத்தாலான விநாயகர் சிலையை பூஜை அறையில் வைத்திருப்பது மிகவும் நல்லது. இந்த வகையிலான தெய்வ சிலை, வாழ்வில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, சந்தோஷமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

சிவனின் சிலை
பலரும் சிவபெருமானின் சிலையை வைத்திருப்பது வீட்டில் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் என நினைத்து வைத்திருக்கின்றனர். ஆனால் ஒரு பூஜை அறையில் ஒரே ஒரு சிவனின் சிலை தான் இருக்க வேண்டும். ஒன்றிற்கு மேற்பட்ட சிவனின் சிலைகள் பூஜை அறையில் இருந்தால், அது வீட்டில் பிரச்சனைகளுக்கு தான் வழிவகுக்கும். எனவே ஒரே ஒரு சிவனின் சிலையை மட்டும் வைத்து வணங்குங்கள்.

குறிப்பு
சிவனின் சிலையை வைப்பதாக இருந்தால், அது சிவபெருமான் தியானம் செய்வது போன்றதை தான் வைத்திருக்க வேண்டுமே தவிர, நடனம் ஆடுவது போன்று வைத்திருக்கக்கூடாது. இது எதிர்மறை ஆற்றலைத் தான் அதிகரிக்கும்.

நடராஜன் சிலை
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் நடராஜன் சிலையை வைத்திருப்பதை தவிர்த்திடுங்கள். இது ஒருவரது மனதில் உள்ள கோபத்தை அதிகரித்து, வீட்டில் அமைதியை பாதிக்கும்.



Click it and Unblock the Notifications