Latest Updates
-
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்!
நடிகர் கமல் ஹாசனுக்கு முன்னரே செவாலியே விருது வென்ற 7 தமிழர்கள்!
எந்த ஒரு செயலும், நடிகர்கள் செய்தாலோ, விளையாட்டு நட்ச்சத்திரங்கள் செய்தாலோ தான் அது பெரிதாக கவரப்படுகிறது. ஏன், விருதுகள் கூட ஊடகத்தின் வெளிச்சத்தில் இருக்கும் இவர்கள் வென்றால் தான் அது பெரிய செய்தி ஆகிறது, மக்கள் அனைவருக்கும் தெரிகிறது.
இதுவே, வேறு துறையை சேர்ந்தவர்கள் பெரும் புகழ் பெற்றாலும், சாதனை புரிந்தாலும், கவுரவிக்கப்பட்டலும் கூட அது துணுக்கு செய்தியாகவோ, துண்டு செய்தியாகவோ மறைந்துவிடும். இது செவாலியே விருதுக்கு மட்டும் விதிவிலக்கு அல்ல.
நடிகர் கமல் ஹாசனுக்கு முன்னரே 7 தமிழர்கள் செவாலியே விருது பெற்றுள்ளனர்...

அஞ்சலி கோபாலன்
திருநங்கைகள் நல்வாழ்வுக்காகவும், எய்ட்ஸ் நோயாளிகளின் மறுவாழ்வுக்காகவும் அவர் ஆற்றி வரும் தொண்டுக்காக. அக்டோபர் 25, 2013 இல் செவாலியர் விருது பெற்ற முதல் இந்திய தமிழ் பெண் அஞ்சலி கோபாலன்.
Image Courtesy

மதன கல்யாணி
புதுச்சேரி பிரெஞ்சு கல்லூரியில் 41 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் மதன கல்யாணி. இவர் தமிழ் மற்றும் பிரெஞ்சு இரு மொழிகளிலும் புலமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 20-க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். இவரது பணிகளை பாராட்டி இவருக்கு செலாவியே விருது வழங்கப்பட்டது.

சிவா இராமநாதன்
சிவா இராமநாதன், இவரது இயற்பெயர் சிவயோகநாயகி. பிரான்சு நாட்டின் செவாலியர் விருது பெற்ற முதல் யாழ்ப்பாணத் தமிழ்ப்பெண். இவர் ஒரு ஆசிரியர்.
Image Courtesy

சிவாஜி கணேஷன்
நடிகர் திலகம் சிவாஜி கணேஷன்-க்கு கடந்த 1995-ம் ஆண்டு செவாலியே விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்ற முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை பெற்றார்.

ஷெரீன் சேவியர்
மனித உரிமைசார் பணிகளுக்காக இவருக்கு செவாலியே விருது வழங்கப்பட்டுள்ளது.

நாகநாதன் வேலுப்பிள்ளை
நாகநாதன் வேலுப்பிள்ளை, ஈழத்து, மற்றும் பிரெஞ்சு எழுத்தாளர். தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, சிங்களம், இந்தி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். 23 ஆண்டுகளுக்கு மேலாக பிரெஞ்சு அரசாங்க சேவையில், மும்பையில் அமைந்த தூதரக அலுவலகத்தில் வர்த்தக சேவையில் சட்ட ஆலோசகராக பணிபுரிந்தவர்.
Image Courtesy

நடிகர் அலக்ஸ்!
குணசித்திர நடிகர் அலக்ஸ்-க்கு கடந்த 2010-ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்லுள்ள அபுதாபியில் செவாலியே விருது வழங்கியதாக பிரபல தமிழ் செய்தி இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இது பிரான்ஸ் நாடு வழங்கும் செவாலியே விருதா என்பது அறியப்படவில்லை.
Source



Click it and Unblock the Notifications