Latest Updates
-
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
இந்தியாவின் கோர சம்பவங்களின் சாட்சியாக திகழும் 5 சக்தி வாய்ந்த புகைப்படங்கள்!
ஊடகவியலில் ஒரு சொற்றொடர் அவ்வப்போது பயன்படுத்தப்படும். "ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்". ஆம் எழுத்துகள் கூட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உணர்வை அளிக்கும். ஆனால், புகைப்படம் அனைவருக்கும் பாரபட்சம் பாராது ஒரே உணர்வை, அழுத்தமாக அளிக்கும்.
புகைப்படம் என்பது ஒரு நினைவின் தேக்கம். பார்க்கும் போதெல்லாம் உணர்சிகளை ஊற்றெடுக்க வைக்கும் தன்மை கொண்டவை புகைப்படங்கள். அந்த வகையில் இந்தியாவில் நடந்த கோர சம்பவங்களை இன்றளவும் அழுத்தமாக பதியவைக்கும் ஐந்து சக்தி வாய்ந்த புகைப்படங்கள் பற்றி பார்க்கலாம்...

ஒடிசா மனிதர்!
கடந்த ஆகஸ்ட் மாதன், பணம் இல்லாத ஒரே காரணத்தால் 10 கிலோமீட்டர் இறந்த மனைவியின் சடலத்தை தனது தோளில் சுமந்து சென்ற ஒடிசா மனிதர்!

குஜராத் கலவரம்!
2002-ல் நடந்த குஜராத் கலவரத்தில் தாக்கப்பட்டவர். இரத்த கரையுடன், அழுத விழிகளுடன் காட்சியளிக்கும் இவர் பெயர் அன்சாரி.
இவரது புகைப்படம் ஊடகத்தை, உலகத்தை ஒட்டுமொத்தமாக திருப்பி பார்க்க வைத்தது. இவரது படம் தான் குஜாராத் கலவரத்தின் அட்டைப்படமாக இருந்தது.

போபால் விஷவாயு தாக்கம்!
ஏறத்தாழ முப்பது வருடங்கள் ஓடிவிட்டன. 1984 -ல் நடந்த இந்த போபாப் விஷவாயு தாக்கம் உலகையே உலுக்கியது.
30 மெட்ரிக் டன் விஷவாயு கசிந்து 2,500 உயிர்களை பலிவாங்கியது, 5 லட்சத்திற்கும் மேலான மக்களை பாதிப்படைய வைத்தது. இன்றளவும் இதன் தாக்கம் மரபணு வாயிலாக தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

ரயில் விபத்து!
இந்தியாவில் ரயில் விபத்தில் யானைகள் இறப்பது வருடாவருடம் நடக்கும் சம்பவமாக ஆகிவிட்டது. ஆனால், இந்த யானை கிட்டத்தட்ட 200 மீட்டர் வர இழுத்து செல்லப்பட்டது தான் கொடூரத்தின் உச்சம்.

இந்தியா - பாக் பிரிவு!
சுதந்திரம் பெற்று இந்தியா - பாகிஸ்தான் பிரிந்த போது, தங்கள் உடமைகள், உறவுகள், போன்றவற்றை இழந்த கொடுமையான சூழலில் இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் மக்கள் கொத்து கொத்தாக கனத்த மனமுடன் பிரியாவிடை பெற்று சென்ற தருணம்.



Click it and Unblock the Notifications
