Latest Updates
-
மல்லி தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 12 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்கணும் -
செவ்வாய்-புதன் சேர்க்கையால் உருவாகியுள்ள தன யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலக்ஷ்மி யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உள்ளங்கையில் இந்த 'ராஜலட்சுமி யோகம்' இருப்பவர்கள் கோடீஸ்வரராக பிறந்தவர்களாம் - உங்க கையில் இருக்கா? -
விளக்கெண்ணெயுடன் இந்த 5 எண்ணெயை கலந்து யூஸ் பண்ணுங்க.. தலைமுடி 2 மடங்கு வேகத்துல வளரும்.. -
ஆந்திரா கறிவேப்பிலை சட்னி ரெசிபி - அரைச்சு பாருங்க, இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
பதவியேற்பு விழாவில் விஜய்யின் குடும்பம் ஏன் வரவில்லை? அந்த ஒரு விஷயம் தான் இப்போ ஹாட் டாபிக்! -
சப்பாத்திக்கு இந்த பக்குவத்துல கருப்பு கொண்டைக்கடலை கிரேவி செய்யுங்க.. 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ஒழுக்கமானவர்களாக இருப்பார்களாம் - வெற்றி இவர்களை தேடிவருமாம்
இந்தியாவின் கோர சம்பவங்களின் சாட்சியாக திகழும் 5 சக்தி வாய்ந்த புகைப்படங்கள்!
ஊடகவியலில் ஒரு சொற்றொடர் அவ்வப்போது பயன்படுத்தப்படும். "ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்". ஆம் எழுத்துகள் கூட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உணர்வை அளிக்கும். ஆனால், புகைப்படம் அனைவருக்கும் பாரபட்சம் பாராது ஒரே உணர்வை, அழுத்தமாக அளிக்கும்.
புகைப்படம் என்பது ஒரு நினைவின் தேக்கம். பார்க்கும் போதெல்லாம் உணர்சிகளை ஊற்றெடுக்க வைக்கும் தன்மை கொண்டவை புகைப்படங்கள். அந்த வகையில் இந்தியாவில் நடந்த கோர சம்பவங்களை இன்றளவும் அழுத்தமாக பதியவைக்கும் ஐந்து சக்தி வாய்ந்த புகைப்படங்கள் பற்றி பார்க்கலாம்...

ஒடிசா மனிதர்!
கடந்த ஆகஸ்ட் மாதன், பணம் இல்லாத ஒரே காரணத்தால் 10 கிலோமீட்டர் இறந்த மனைவியின் சடலத்தை தனது தோளில் சுமந்து சென்ற ஒடிசா மனிதர்!

குஜராத் கலவரம்!
2002-ல் நடந்த குஜராத் கலவரத்தில் தாக்கப்பட்டவர். இரத்த கரையுடன், அழுத விழிகளுடன் காட்சியளிக்கும் இவர் பெயர் அன்சாரி.
இவரது புகைப்படம் ஊடகத்தை, உலகத்தை ஒட்டுமொத்தமாக திருப்பி பார்க்க வைத்தது. இவரது படம் தான் குஜாராத் கலவரத்தின் அட்டைப்படமாக இருந்தது.

போபால் விஷவாயு தாக்கம்!
ஏறத்தாழ முப்பது வருடங்கள் ஓடிவிட்டன. 1984 -ல் நடந்த இந்த போபாப் விஷவாயு தாக்கம் உலகையே உலுக்கியது.
30 மெட்ரிக் டன் விஷவாயு கசிந்து 2,500 உயிர்களை பலிவாங்கியது, 5 லட்சத்திற்கும் மேலான மக்களை பாதிப்படைய வைத்தது. இன்றளவும் இதன் தாக்கம் மரபணு வாயிலாக தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

ரயில் விபத்து!
இந்தியாவில் ரயில் விபத்தில் யானைகள் இறப்பது வருடாவருடம் நடக்கும் சம்பவமாக ஆகிவிட்டது. ஆனால், இந்த யானை கிட்டத்தட்ட 200 மீட்டர் வர இழுத்து செல்லப்பட்டது தான் கொடூரத்தின் உச்சம்.

இந்தியா - பாக் பிரிவு!
சுதந்திரம் பெற்று இந்தியா - பாகிஸ்தான் பிரிந்த போது, தங்கள் உடமைகள், உறவுகள், போன்றவற்றை இழந்த கொடுமையான சூழலில் இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் மக்கள் கொத்து கொத்தாக கனத்த மனமுடன் பிரியாவிடை பெற்று சென்ற தருணம்.



Click it and Unblock the Notifications