Latest Updates
-
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...!
இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தையை பற்றி உங்களுக்கு தெரியுமா? இன்று அவரின் 100வது பிறந்த நாள்...!
இன்று நாம் வானவியல் துறையில் இவ்வளவு வலிமையாக இருக்க காரணம் இந்திய வானவியலின் தந்தையான விக்ரம் சாராபாய் அவர்கள்தான். ஆகஸ்ட் 12 ஆன இன்று அவரின் 100 வது பிறந்த நாளாகும்.
இந்தியா விண்வெளி ஆராய்ச்சியில் எவரும் தொட முடியாத பல உயரங்களை எட்டிவிட்டது. சமீபத்தில் கூட நமது விஞ்ஞானிகள் வெற்றிகரமாக செலுத்திய சந்திராயன்-2 விண்கலம் உலக நாடுகள் அனைத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று நாம் வானவியல் துறையில் இவ்வளவு வலிமையாக இருக்க காரணம் இந்திய வானவியலின் தந்தையான விக்ரம் சாராபாய் அவர்கள்தான். ஆகஸ்ட் 12 ஆன இன்று அவரின் 100 வது பிறந்த நாளாகும்.

இந்திய வானவியலுக்கு மட்டுமின்றி விக்ரம் சாராபாயின் ஆராய்ச்சிகளும், வழிகாட்டுதலும் உலக விண்வெளி ஆராய்ச்சிக்கே மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. விண்வெளி ஆராய்ச்சிக்கு அவர் ஆற்றிய அளப்பரிய அர்ப்பணிப்புக்காக கூகுள் இன்று அவரின் முகத்தை தனது முகப்பு பக்கத்தில் வைத்து கௌரவப்படுத்தியுள்ளது.

பிறப்பும், படிப்பும்
அகமதாபாத்தில் உள்ள பிரபல தொழிலதிபர் குடும்பத்தில் ஆகஸ்ட் 12, 1919 இல் விக்ரம் அம்பலால் சரபாய் பிறந்தார், அந்த காலக்கட்டம் சுதந்திர போராட்டம் உச்சம் பெற்றிருந்தது. இந்திய சுதந்திர பேரியக்கத்திற்கு நடுவில் விக்ரம் சாராபாய் அவர்கள் வளர்ந்து வந்தார். தனது கல்லூரிப் படிப்பை குஜராத்தில் முடித்த சாராபாய் அவர்கள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இந்தியா திரும்பியதும், 1947 இல் அகமதாபாத்தில் பிஸிக்கல் ஆராய்ச்சி ஆய்வகத்தை (பிஆர்எல்) நிறுவினார். அப்போது அவருக்கு வயது 28 மட்டுமே. இந்த ஆய்வகம் காஸ்மிக் கதிர்களை முதலில் ஆராய்ச்சி செய்யத் தொடங்கியது.

ஆய்வகங்கள் மற்றும் நிறுவனங்கள்
விக்ரம் சாராபாய் அவர்கள் வானவியலின் தந்தையாக இருந்ததுடன் இந்தியா முழுவதும் பல ஆய்வகங்களை தொடங்கினார். அவர் தொடங்கிய பல ஆய்வகங்கள் இன்றும் அவரின் புகழின் அடையாளமாக இருக்கின்றன. பிஸிக்கல் ஆராய்ச்சி ஆய்வகம், அகமதாபாத், இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் மேனேஜ்மென்ட்(IIM), அகமதாபாத், கம்யூனிட்டி சயின்ஸ் சென்டர், அகமதாபாத், விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், திருவனந்தபுரம், அகமதாபாத்தில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மையம், பாஸ்டர் பிரீடர் சோதனை உலை, கல்பாக்கம், எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ஈசிஐஎல்), ஹைதராபாத்,யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (யுசிஐஎல்), ஜடுகுடா, பீகார். இந்த நிறுவனங்கள் அனைத்தும் இந்தியாவின் விஞ்ஞான வளர்ச்சியை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றது.

இஸ்ரோ(ISRO)
இந்திய வானவியலின் தந்தை என விக்ரம் சாராபாய் அவர்களை அழைக்கக் காரணம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பை(ISRO) அவர் உருவாக்கியதுதான். ரஷ்யாவின் ஸ்பூட்னிக் ஏவுதலுக்குப் பிறகு இந்தியா போன்ற வளரும் நாட்டிற்கான விண்வெளித் திட்டத்தின் முக்கியத்துவத்தை அவர் வெற்றிகரமாக அரசாங்கத்திற்கு உணர்த்தினார். அவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இந்திய அரசாங்கம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பை உருவாக்க ஒப்புக்கொண்டது. இது அவரின் அளப்பரிய சாதனையாகும்.

முதல் விண்கலம்
1962 இல் நிறுவப்பட்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசிய குழு, பின்னர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பாக (இஸ்ரோ) மாற்றப்பட்டது. டாக்டர் சாரபாய் 1975 ஆம் ஆண்டில் முதல் இந்திய செயற்கைக்கோளான ஆர்யபட்டாவை ஏவுவதற்கு ஒரு இந்திய செயற்கைக்கோளை உருவாக்கி ஏவுவதற்கான ஒரு திட்டத்தைத் தொடங்கினார்.

ஹோமி ஜஹாங்கீர் பாபா
இந்தியாவின் அணு அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் ஹோமி ஜஹாங்கிர் பாபா, இந்தியாவில் முதல் ராக்கெட் ஏவுதளத்தை அமைப்பதில் டாக்டர் சாராபாய்க்கு உதவினார். இந்த மையம் அரேபிய கடலின் கடற்கரையில் திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள தும்பாவில் நிறுவப்பட்டது, உள்கட்டமைப்பு, பணியாளர்கள், தகவல்தொடர்பு இணைப்புகள் மற்றும் ஏவுதளங்களை அமைப்பதில் குறிப்பிடத்தக்க முயற்சிக்குப் பிறகு முதல் விமானம் நவம்பர் 21, 1963 அன்று சோடியம் நீராவி பேலோடு தொடங்கப்பட்டது.

விருதுகள்
இந்தியாவின் பல உயரிய விருதுகள் விக்ரம் சாராபாய் அவர்களுக்கு வழங்கப்பட்டது. குறிப்பாக இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கு இவரின் பங்களிப்பை கௌரவிக்கும் வண்ணம் இந்திய அரசு இவருக்கு பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை அளித்தது. இவரின் 100 வது பிறந்த நாளை நினைவுகூறும் வகையில் கூகுள் டூடலில் இவரின் முகம் வைக்கப்பட்டுள்ளது. ஹோமி பாபாவின் மரணத்திற்குப் பிறகு இந்திய அணு ஆணையத்தின் தலைவராக டாக்டர் சரபாய் நியமிக்கப்பட்டார். இந்த புகழ்பெற்ற விஞ்ஞானி 1971 டிசம்பர் 30 அன்று திருவனந்தபுரத்தில் காலமானார்.



Click it and Unblock the Notifications











