Latest Updates
-
சூரியனின் இரட்டை கிரக பெயர்ச்சியால் ராஜயோகத்தை அடையப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும்
அம்மாவும் அப்பாவும் சேர்ந்தே தான் பாலியல் வன்புணர்வு செய்தார்கள்!சிறுமியின் பகீர் தகவல்!
பெற்றோரே தங்களின் பன்னிரெண்டு வயதுடைய மகளை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.
பன்னிரெண்டு வயது மதிக்கத்தக்க சிறுமியொருத்தி ரோட்டோரத்தில் கேட்பாரற்று மயங்கி கிடந்திருக்கிறார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள் அங்கிருந்த பொதுமக்கள், ஆரம்பத்தில் பசியின் மயக்கத்தினால் அந்த சிறுமி மயங்கி விழுந்திருக்கலாம் என்று நினைத்து அதற்கான சிகிச்சைகளையும், உணவையும் வழங்கிய மருத்துவர்களுக்கு சிறுமி சற்று நினைவுக்கு வந்து பேசத் துவங்கியதும் அவரது கதையை கேட்டு உறைந்தே போய்விட்டார்களாம்.

இங்கு குழந்தைகளை அம்மா அப்பாவிடம் இருந்தால் பாதுகாப்பாக இருக்கும். அவர்களை தவிர வேறு யாராலும் நம்முடைய நன்மையை எதிர்பார்க்க மாட்டார்கள் என்றெல்லாம் சொல்லக் கேட்டிருப்போம். ஆனால் உண்மையில் இந்த சிறுமிக்கு பெரும் தீங்கு இழைத்தது அவளுடைய பெற்றோர் தான். ஆம் இருவருமே இந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார்கள்.

#1
முப்பத்து நான்கு வயதுடைய இந்த பெற்றோர் இருவருமே பெடோஃபைல் எனப்படுகிற குழந்தையின் பால் பாலியல் ஈர்ப்பு கொண்டவர்கள். அம்மா அப்பா இருவருமே இந்த குழந்தைக்கு பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார்கள்.

#2
மருத்துவ சிகிச்சையின் போது, பெற்றோரிடம் ஒப்படைக்க வீட்டு முகவரியை சொல்லுமாறு கேட்டிருக்கிறார்கள். உடனே அலறிய அந்த சிறுமி இல்லை நான் அந்த வீட்டிற்கு போகமாட்டேன் அவர்களை இங்கே அழைக்க வேண்டாம் என்று சொல்லி கத்தி அழுதிருக்கிறார். அவரை சமாதானப்படுத்திய மருத்துவர்கள் அவர் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பார், வீட்டில் மாற்றாந்தாய் கொடுமை நடந்திருக்கும் என்று யூகித்தனர்.

#3
அவரை ஆசுவாசப்படுத்தி மெல்ல பேச்சுக் கொடுத்தனர், அப்போது தான் சிறுமி தனக்கு நேரந்த பயங்கரமான கொடுமைகளை பகிர்ந்திருக்கிறார்.
சிறுவயதில் எனக்கு வீட்டில் தனியறை இருந்தது. இரவில் நான் என்னுடைய அறையில் படுத்திருப்பேன் எனக்கு மிகவும் பிடித்தமான வொயிட் பியர் பொம்மையை என்னருகில் கட்டிலில் படுக்க வைத்திருப்பேன்.

#4
யாருக்கும் தெரியாமல் நடு இரவில் அப்பா என் அறைக்குள் நுழைந்து என் கட்டிலில் படுத்துக் கொள்வார். என் உடைகளை எல்லாம் கழற்றி என்னை முழு நிர்வாணமாக படுத்துக் கொண்டு என்னை அணைத்துக் கொள்வார். ஆரம்ப நாட்களில் அப்பாதானே என்று நினைத்திருந்தேன். ஆனால் அவர் எப்போதும் என்னை நிர்வாணமாக இருக்கச் சொல்வதும், என் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதும் எனக்கு பிடிக்கவில்லை.

#5
அப்பா இப்படியெல்லாம் செய்யாதீர்கள் எனக்கு பிடிக்கவில்லை என்று சொன்னேன். நீ இப்போது வளரும் பிள்ளை, நீ டீன் ஏஜ் வந்ததும் இதெல்லாம் உனக்கு சாதரணமாகிடும், அதற்காகத்தான் உன்னை இப்போது பழக்கிக் கொண்டிருக்கிறேன் என்பார்.
இல்லை வேண்டாம் இது எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது. நான் உடையை கழற்ற மாட்டேன் என்று அடம் பிடித்து அழுதேன். அப்போது என்னை அடித்து உணவு தர மாட்டேன்,பள்ளிக்கு அனுப்ப மாட்டேன் என்று மிரட்டினார்.

#6
அம்மாவிடம் சொன்னாயா? என்று கேட்டார்கள் அங்கிருந்த மருத்துவர்.
கேட்டதுமே.... தேம்பித் தேம்பி அழத் துவங்கிவிட்டாள் அந்த சிறுமி, அம்மா.... அம்மாவும் தான் என்னை பாலியல் வன்புணர்வு செய்தார்.
மருத்துவர்களுக்கு ஒரு கணம் அதிர்ச்சி. பெரும் குழப்பத்துடன் அம்மாவா? உன் சொந்த அம்மாவா என்று கேட்க
ஆமாம் என்று தலையசைத்தாள் அந்தச் சிறுமி.

#7
சிறிது நேரத்தில் ஆசுவாசமடைந்து தொடர்ந்து பேசத் துவங்கினாள். பகல் நேரத்தில் அம்மா என் அறைக்கு வருவார், அப்பாவைப் போலவே உடைகளை கழற்றச் சொல்வார், செயற்கையான பென்னீஸைக் கொண்டு என்னை டார்ச்சர் செய்வார்.

#8
ஒரு சில நாட்களில் ஒரே சமயத்தில் இருவருமே என்னை பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார்கள். என்று சொல்லி அதிர வைக்கிறார் சிறுமி.
தொடர்ந்து சிறுமி பருமெய்திய ஆண்டிலிருந்து மாதவிடாய் சீராக வருகிறதா என்று கேட்கப்பட்டது. அதற்கு சிறுமி இல்லை என்று பதிலளித்திருக்கிறார். தொடர்ந்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சிறுமி தன்னுடைய கன்னித்தன்மை இழந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

#9
உடனடியாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு பெற்றோர் கைது செய்யப்பட்டார்கள். அப்போது அந்த சிறுமியின் தாயோ, அவளாகவே சுய இன்பத்தில் ஈடுபட்டிருகிறாள் இதில் எங்கள் தவறு எதுவுமில்லை என்றிருக்கிறார்.
போலீசாரின் தீவிர விசாரணையின் போது, தங்களின் குழந்தையையே இப்படி பாலியல் வன்புணர்வு செய்ததை இருவரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

#10
ஆனாலும் இது தவறு கிடையாது, குழந்தையை அடல்ட் வாழ்க்கைக்கு நாங்கள் தயார் செய்கிறோம். யாரோ ஒருவன் மூலமாக எங்கள் மகளின் கன்னித்தன்மை போவதை விட அப்பாவினால் போகட்டுமே... அதோடு செக்ஸ் குறித்தும் அவள் நிறைய தெரிந்து கொள்வாள் என்றிருக்கிறார்கள்.

#11
தற்போது கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பெற்றோருக்கு 20 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. சிறுமியை மருத்துவக் கண்காணிப்பில் வைத்திருக்கிறார்கள்.
தொடர்ந்து சிறுமிக்கு மருத்துவ சிகிச்சையுடன் கவுன்சிலிங் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

#12
என்ன தான் மேலை நாடு, மேலை நாடுகளின் கலாச்சாரம் என்று சொன்னாலும் தாய்மை,பெற்றோர் என்று வரும் போது எல்லாருக்கும் ஒரே மாதிரியான பொறுப்புணர்வு தான் இருக்கிறது.
குழந்தையை வளர்த்தெடுப்பதில் அவர்களின் பங்கு அளப்பறியது, வெளியாட்கள் யாரேனும் உன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டாள் அம்மா அப்பாவிடம் சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அம்மா அப்பாவே அத்து மீறினால் யாரிடம் போய் சொல்வது.... பாலியல் கல்வி குழந்தைகளுக்கு அவசியம் என்று கத்திக்கொண்டிருக்கும் சூழலில் பாலியல் கல்வி குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் அவசியம் என்பதை உணர்த்தியிருக்கிறது இந்த சம்பவம்.



Click it and Unblock the Notifications











