Latest Updates
-
இன்ஸ்டாகிராம் பயனர்களே உஷார்! உங்கள் தனிப்பட்ட சாட்கள் இனி பாதுகாப்பில்லை? இந்த மாற்றத்தை உடனே கவனிங்க! -
கோடை வெயிலால் உங்க முகம் டல்லடிக்குதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
வெளிநாட்டில் விவாகரத்தா? குழந்தைகளை பார்க்க முடியாமல் தவிக்கும் தாய்மார்கள் - செலினா ஜெயிட்லியின் உருக்கமான பதிவு! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
வீட்டில் பணவரவு அதிகரிக்கணுமா? அமேசான் சேலில் இந்த வாஸ்து பொருட்களை மிஸ் பண்ணாதீங்க! -
செஃப் வாணி அவர்களின் முருங்கைக்காய் பொரியல் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... செமயா இருக்கும்.. -
Hanta Virus: கோவிட்-19 விட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் ஹன்டா வைரஸ் - இதன் அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? -
இன்றைய அபிஜித் முகூர்த்தத்தில் இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க… பணவரவு தானாக அதிகரிக்கும்! -
செவ்வாய் உருவாக்கும் விபரீத ராஜயோகம்: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
வெள்ளை குழி பணியாரமும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..
சொர்க்கம் செல்ல, பெற்ற மகளை உயிருடன் சமைத்த கொடூர தாய்!
கதறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து நபர்கள் அழைத்ததன் காரணமாக போலீஸ் விரைந்து, அந்த பெண்ணை கைது செய்தனர்.
அந்த தாய்க்கு வயது 27 இருக்கும். பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் பகுதியை சேர்ந்தவர். போலீஸ் இவரை கைது செய்யும் போது, அவர் தனது சொந்த மகளை கிரில் முறையில் சமைத்துக் கொண்டிருந்தார்.
சென்ற வாரம் ஞாயிறு (செப் - 24, 2017) மாலை திடீரென அந்த பகுதியில் அலறல் சத்தம் கேட்டது. சத்தம் கேட்ட இடத்தை நெருங்கும் போது, அப்பகுதியில் இருந்த ஒரு வீட்டில் இருந்து மிகுதியான புகையுடன் அந்த அலறல் சத்தம் கேட்டு, பதட்டத்தில் அக்கம்பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் போலீஸிற்கு கால் செய்தனர்.

கிரில் முறையில்...
போலீஸ் அந்த வீட்டை விரைந்த போது, அந்த பெண் தனது சொந்த மகளை கிரில் முறையில், வீட்டின் கீழே இருந்த கேரேஜ் பகுதியில் சமைத்துக் கொண்டிருந்தார். சிறுமி முற்றிலும் கருகிய நிலையில் காணப்பட்டார்.
நிபுணர்கள் அந்த சிறுமி எதனால் கொல்லப்பட்டார். எரித்து கொல்லப்பட்டாரா? அல்லது இறந்து பிறகு எரிக்கபட்டாரா? என பரிசோதனை செய்து வருகிறார்கள்.

இருவரும்...
போலீஸ் வீட்டை விரைந்தவுடன் அந்த பெண்மணி, "நாங்கள் இருவருமே எரிந்து சாக வேண்டியவர்கள். இப்படி இறந்தால் தான் நாங்கள் ஒன்றாக சொர்க்கம் செல்ல முடியும்" என கூறியுள்ளார்.

விவாகரத்து!
ஆனால், அக்கம்பக்கத்து வீட்டார்கள், சமீப காலமாகவே அந்த பெண்மணி மன அழுத்தத்துடன் வாழ்ந்து வருகிறார். விவாகரத்து பெற்றது முதலே இவர் இப்படி தான் இருக்கிறார் என போலீஸாரிடம் கூறியுள்ளனர்.

மருத்துவமனையில்...
அந்த பெண்மணியின் உடல் மற்றும் மனநிலை சரியாக இல்லாத காரணத்தால், உடனே விசாரணையை துவங்காமல், மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தார்கள் போலீசார்.
அவர் தான் கொலைக்கு முற்றிலும் காரணம் என அறிந்தவுடன் கைது செய்துள்ளனர்.

மனநலம்!
மனோதத்துவ நிபுணர்கள், இந்த வகையில் அந்த பெண்மணி சிறுமியை கொன்றதற்கு மனநிலை தான் காரணம். அவர் மனதளவில் மிகையாக பாதிக்கப்பட்டுள்ளார் என கூறியுள்ளனர். ஆயினும், அந்த சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications