Latest Updates
-
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் -
மூட்டு வலி நீங்க, இரத்தம் ஊற உதவும் முருங்கைக்கீரை கொள்ளு சூப் - எப்படி செய்யணும் தெரியுமா? -
சனிபெயர்ச்சியால் 2027-ல் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
21 நாட்கள் தொடர்ந்து 1 நெல்லிக்காய் சாப்பிடுங்க, உடம்புல நடக்குற அதிசயத்தை பாருங்க.. கூறும் டாக்டர்! -
பாலக் புலாவ் ரெசிபி - இந்த சத்தான புலாவை ட்ரை பண்ணுங்க - குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க -
பழைய விமானங்கள் ஓய்வு பெற்ற அவற்றின் நிலை என்னவாகும் தெரியுமா? இப்படிலாம் கூட பண்ணுவாங்களா?
உங்கள் குழந்தை உண்மையில் அதிஷ்டசாலி தானா என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
வாழ்க்கைக்கான பொன்மொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
நமது வாழ்க்கையில் ஒரு சில விஷயங்களை அனுபவத்தின் மூலமாகவும், ஒரு சில விஷயங்களை பிறரது அனுபவத்தின் மூலமாகவும் கற்றுக்கொள்ள முடியும். அனைத்தையும் தன் அனுபவத்தின் மூலமாக மட்டுமே பட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று இருந்தால், வாழ்க்கையில் பல அடிகளை பெற வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி பாதை மாறி செல்ல கூட வாய்ப்புகள் உள்ளது. இந்த பகுதியில் ஞானிகளின் பொன் மொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனை அடிப்படையாக கொண்டு வாழ்க்கையை நடத்தினால், நீங்கள் ஊரோ போற்றும் அளவிற்கு நல்வாழ்க்கை வாழலாம்.

1. நாம் காட்டும் பணிவிற்கும் மரியாதைக்கும் பிரதிபலனாக ஏதேனும் ஒரு நன்மையைப் பெற வேண்டும் என்று எதிர்பார்ப்போம் எனில் நம்மிடம் உண்மையான அன்பு உருவாகாது.
- விவேகானந்தர்.
2. செல்வங்களின் சுமையை ஏற்றிக் கொண்டு இன்பம் எனும் செங்குத்துப் பாதையில் ஏறிச் செல்வது ஒரு மனிதனுக்குக் கடினம்.
- முகம்மது நபிகள்.
3. தற்பெருமை கொள்ளும் மனிதனுக்கு வேறு விரோதிகளே தேவையில்லை.
- ஃபிராங்கிளின்.
4. சிந்திக்காமல் பேசத் தொடங்குவது, குறி பார்க்காமல் அம்பை விடுவது போன்றது.
- ஆஸ்கர் ஒயில்ட்.
5. தவறுகளை ஒத்துக்கொள்ளும் தைரியமும், அவற்ரை விரைவில் திருத்திக் கொள்வதற்கான வலிமையும்தான் வெற்றி பெறுவதற்கான குணங்களாகும்.
- லெனின்.
6. சிறிய தவறுகளைத் திருத்திக் கொள்ளாவிட்டால் பெரிய தவறுகளைத் தவிர்க்க முடியாது.
- கன்ஃபூசியஸ்.
7. ஒழுக்கம் என்பது வெள்ளைக்காகிதம் போன்றது. ஒரு முறை கறை பட்டால் மறுபடியும் பழைய நிலைக்குக் கொண்டு வர முடியாது.
- ஹாவ்ஸ்.
8. கடினமான வேலைகளைச் செய்வதில் மகிழ்ச்சியடைபவர்களே எப்போதும் புகழ் பெறுகிறார்கள்.
- மகாகவி மில்டன்.
9. ஆரோக்கியம் உள்ளவனுக்கு நம்பிக்கை இருக்கும். நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாம் இருக்கும்.
- ஹால்டேன்.
10. தேவைக்கு மேலுள்ள பொருள், தேவையில்லாதவற்றை வாங்கவே பயன்படும்.
- தோரோ
11. அக்கறை உள்ள பெற்றோரும், அலமாரி நிறையப் புத்தகங்களும் வாய்க்கப்பெறும் குழந்தையே அதிர்ஷ்டசாலி.
- ஜான் மெக்காலே



Click it and Unblock the Notifications