Latest Updates
-
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..
15 வயதில் கற்பழிக்கப்பட்டு, பாலியல் தொழிலில் தந்திரமாக தள்ளப்பட்ட நீலூ - நான் கடந்து வந்த பாதை #8
இன்று நான் கடந்து வந்த பாதையில்... 15 வயதில் கற்பழிக்கப்பட்டு, பாலியல் தொழில் தந்திரமாக தள்ளப்பட்ட நீலூவின் நம்பிக்கை, தைரியம் ஊட்டும் கதை
நமது வாழ்வில் நாம் காணும் சின்ன, சின்ன சறுக்கல், தோல்விகளை கண்டு, அதிலிருந்து மீண்டு வர முடியாமல் தடுமாறும் நம்மில் பலருக்கு நீலூ தன் வாழ்வில் கடந்து வந்த பாதை நிச்சயமாக நம்பிக்கையும், தைரியம் அளிக்கும்.

Humans of Bombay என்ற ஃபேஸ் புக் பக்கத்தில் நீலூ பகிர்ந்து கொண்ட கதை...

தாய்மை!
எல்லா பெண்களும் புனிதமாக கருதும் தாய்மை நிலையை நீலூ மிக கொடூரமான வகையில் அடைந்தார். யூனிபார்ம் அணிந்த ஒரு நபரின் வலுக்கட்டாயத்தினால் நீலூவின் உலகம் 15 வயதிலேயே முற்றிலுமாக மாறி போனது.

தப்பி ஓட்டம்!
அவன் தப்பிவிட்டான். ஆனால், நீலூ 15 வயதில் இளம் தாயாகி நிர்கதியாய் நின்றாள் நீலூ அவளை மட்டுமின்றி, தனது மகளையும் காக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டாள்.

பிச்சை!
"தான் அவனால் கருவுற்று இருப்பதை அறிந்த போதே அவன் தப்பி ஓடிவிட்டான். நான் என்ன செய்வது என்று தெரியாமல். ஆரம்பத்தில் கோவிலில் தங்க ஆரம்பித்தேன். அப்போது கோவிலுக்கு அடிக்கடி வரும் நபர் வீட்டு வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்றார்."

ஏமாற்றம்!
அந்த நபரை நம்பி நீலூ புனே சென்றார்...
"ஆனால், அந்த நபர் என்னை விபச்சாரத்திற்கு ஒரு லட்ச ரூபாய்க்கு விற்றுவிட்டார். முதல் ஐந்து மாதங்கள் நான் எதற்கும் ஒத்துழைக்காமல் இருந்தேன். நான் எத்தனை அழுதும், கெஞ்சியும் கூட அங்கு இருந்தவர்கள் என்னை விடுவிக்கவில்லை."

மகளுக்காக...
"ஆனால், எனது மகளை வளர்க்க வேண்டும், அவளுக்கு உணவளிக்க வேண்டும் என்றால் நான் இந்த வேலையை தவிர வேறு எதையும் செய்ய முடியாத சூழ்நிலையில் இருந்தேன். பிறகு, அவளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதால் ஒத்துழைக்க ஆரம்பித்தேன்."

துன்பங்கள்!
"நான் ஒத்துழைக்காத காலக்கட்டத்தில் தடிகள் கொண்டு என்னை வலுவாக தாக்கி துன்புறுத்தினர். என்னை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று அடைத்தனர். மகளுக்கு உணவளிக்க மாதாமாதம் நான்காயிரம் ரூபாய் தேவைப்பட்டது."

எச்.ஐ.வி!
"இந்த காலக்கட்டத்திலேயே நான் டி.பி மற்றும் எச்.ஐ.வி நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தேன். புரோக்கர்கள் மற்றும் குடிமகன்களால் பெரிதும் பாதிக்கப்பட்டேன். அவர்களிடம் இருந்து அனுதினம் போராட வேண்டியிருந்தது."
விடிவுகாலம்!
Purnata எனும் அரசு சாரா உதவி நிறுவனம் மூலமாக நீலூவின் வாழ்வில் விடிவுகாலம் பிறந்தது. இப்போது நீலுவின் மகள் ஹாஸ்டலில் வசித்து வருகிறார்.
யாரோ செய்யும் தவறுக்கு, யாரோ ஒருவர் பாதிக்கப்படுகிறார். யாரோ ஒருவரது பேராசைக்கு யாரோ ஒருவர் பலியாகிறார். பல இன்னல்களை கடந்து வந்திருக்கும் நீலூவின் வாழ்க்கை இனிமேலாவது இனிமையாக அமையட்டும்.



Click it and Unblock the Notifications
