Latest Updates
-
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன?
நான் கொடுத்த காஸ்ட்லி கிப்ட்ஸ் திருப்பி வாங்கிக்கொடுங்க - கோர்டில் கேஸ் போட்ட ஆண்!
திருமணம் கேன்சல், கொடுத்த 10 லட்ச ரூபாய் கிப்டுகளை பெண்ணிடம் இருந்து திரும்ப பெற கோர்டில் கேஸ் போட்ட மணமகன்!
இன்றெல்லாம் நிச்சயிக்கப்பட்ட திருமணமாகவே இருந்தாலும், திருமண தேதிக்கு இடைப்பட்ட நாட்களில் காதல் உறவை வளர்த்துக் கொள்கிறார்கள். இதில் நிறைய ப்ளஸ், மைனஸ் இருக்கிறது.
ஏனெனில், திருமண மேடை ஏறி நின்ற நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் இன்று வரை மாதம் ஒன்று செய்திகளில் அடிப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன.
இப்படி ஒரு நபரின் வாழ்வில் நடந்த சம்பவம் தான் இது. இடைப்பட்ட நாட்களில் தான் திருமணம் செய்துக் கொள்ள போகும் பெண்ணுக்கு கொடுத்த பல காஸ்ட்லி பரிசுகளை திரும்ப பெற்று தாருங்கள் என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார் அந்நபர்.

சிட்னி ஜோடி!
சிட்னியில் ஒரு ஜோடி தங்கள் திருமண நாளை எதிர்நோக்கி காதல் உறவில் பயணித்துக் கொண்டிருந்தது. திடீரென நடந்த பிரச்சனையால் அந்த ஆண் திருமணத்தை கேன்சல் செய்துவிட்டார்.
அதுமட்டுமின்றி, அந்த இடைப்பட்ட நாட்களில் காதலித்த போது அந்த பெண்ணுக்கு அளித்த 10 இலட்ச ரூபாய் மதிப்பிலான காஸ்ட்லி பரிசுகளை திரும்ப அவரிடம் இருந்து பெற்றுத்தருமாறு நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளார்.

எட்வின்!
எட்வின் வின்னி சூவிற்கு நிச்சயத்தின் போது 10 லட்ச ரூபாய் மதிப்பிலான வைர மோதிரத்தை அளித்துள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக திருமணத்திற்கு பத்து நாட்களே இருக்கும் சூழலில் திருமணன் எட்வினால் கேன்சல் செய்யப்பட்டது. மேலும், தான் அளித்த அந்த வைர மோதிரம் மற்றும் பல காஸ்ட்லி பரிசுகளை திரும்ப கொடுக்குமாறு அவர் பெண்ணிடம் கூறியுள்ளார்.

பரிசுகள்!
வைர மோதிரம் மட்டுமில்லாது, வைர நெக்லஸ், விலை உயர்ந்த கைப்பை, வாட்ச், ஐ- போன் மற்றும் டாலர் பணம் உட்பட தான் அளித்த அனைத்து பரிசுகளையும் திரும்பத்தருமாறு சிட்னி நீதிமன்றத்தில் எட்வின் வழக்கு தொடர்ந்தார்.

சம்மதம்!
இதை விசாரித்த நீதிமன்றம் காதலி வெளிப்பாட்டில் பரிமாறி கொண்ட பொருட்களை திரும்ப தர கூறுவது எப்படிப்பட்ட கருத்து, இதற்கு எப்படி தீர்ப்பு கூறுவது என கலந்தாலோசித்து கொண்டிருக்க, இரு குடும்பத்தாரும், அவரவர் கொடுத்த பொருட்களை திரும்பி தர சம்மதம் கூறினார்.

இன்டர்நெட் வைரல்!
நீதி மன்றத்திலேயே வைத்து அந்த பெண், எட்வின் அணிந்திருக்கும் ஷூ நான் பரிசளித்தது, அதை திரும்பி கொடு என கேட்க, அங்கேயே அவர் அதை கழற்றி கொடுத்துள்ளார்.
2015 முதல் ஒருவரை ஒருவர் அறிந்த இந்த ஜோடி, திடீர் பிரச்சனையால் நீதிமன்றம் ஏறி தங்கள் பிரச்சனையை உலகறிய செய்த சம்பவம் உள்ளூர் ஊடகங்களில் இருந்து சர்வதேச ஊடகங்கள் வரை வைரல் செய்தியாக உருவெடுத்துள்ளது.



Click it and Unblock the Notifications











