Latest Updates
-
சப்பாத்திக்கு ஒருடைம் முட்டைக்கோஸ் பச்சை குருமா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்ஸ்டாகிராம் பயனர்களே உஷார்! உங்கள் தனிப்பட்ட சாட்கள் இனி பாதுகாப்பில்லை? இந்த மாற்றத்தை உடனே கவனிங்க! -
கோடை வெயிலால் உங்க முகம் டல்லடிக்குதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
வெளிநாட்டில் விவாகரத்தா? குழந்தைகளை பார்க்க முடியாமல் தவிக்கும் தாய்மார்கள் - செலினா ஜெயிட்லியின் உருக்கமான பதிவு! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
வீட்டில் பணவரவு அதிகரிக்கணுமா? அமேசான் சேலில் இந்த வாஸ்து பொருட்களை மிஸ் பண்ணாதீங்க! -
செஃப் வாணி அவர்களின் முருங்கைக்காய் பொரியல் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... செமயா இருக்கும்.. -
Hanta Virus: கோவிட்-19 விட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் ஹன்டா வைரஸ் - இதன் அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? -
இன்றைய அபிஜித் முகூர்த்தத்தில் இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க… பணவரவு தானாக அதிகரிக்கும்! -
செவ்வாய் உருவாக்கும் விபரீத ராஜயோகம்: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
ஏமாற்றப்பட்ட பாலியல் பெண், மோடியிடம் ரூ.13,000 கேட்டு ட்விட்டரில் கடிதம்!
இந்திய பிரதமர் மோடிக்கு வங்காள தேசத்தில் ஏமாற்றப்பட்டு இந்தியாவில் பாலியில் தொழிலில் தள்ளப்பட்ட ஒரு பெண் வைத்த தார்மீக கோரிக்கை.
"Demonetization" எத்தனை ஆண்டுகள் ஆனாலும், இந்தியர்களால், இந்திய அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு வார்த்தை. இதனால் பலன் அடைந்தவர்களை காட்டிலும், பாதிப்படைந்தவர்கள் தான் அதிகம்.
இந்த "demonetization" கறுப்புப்பணம் பதுக்கி வைத்திருக்கும் பணக்கார முதலைகளை தெருவிற்கு கொண்டு வரும் என பிரதமரே கூறினார். ஆனால், அடுத்த வேலை சாப்பாட்டுக்கு வழியின்றி தெருவிற்கு வந்தது என்னவோ கீழ்மட்ட மக்களும், ஏழைகளும் தான்.
இந்த தாக்கத்தால் வங்காள தேசத்தில் இருந்து ஏமாற்றப்பட்டு இந்தியா வந்து பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட ஒரு பெண் தன்னிடம் இருக்கும் செல்லாத பணத்தை எப்படியாவது மோடி மாற்றி தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்...

ஆயிஷா!
இந்த பாலியல் தொழிலாளி பெயர் ஆயிஷா. ஆயிஷா ஒரு தொழிற்சாலையில் ஒன்பது ஆயிரம் ரூபாய் மாத சம்பளம் வாங்கும் வேலையில் பணிபுரிந்து வந்தார்.
அப்போது தான் திடீரென அவருடன் வேலை செய்து வந்த நபர் ஒருவரி இந்தியாவில் அதிக ஊதியத்திற்கு வேலை வாங்கி தருகிறேன் என ஆசை வார்த்தை காட்டி ஆயிஷாவை ஏமாற்றினார்.

மும்பை!
ஏமாற்றி மும்பைக்கு அழைத்து வரப்பட்ட ஆயிஷா பாலியல் தொழில் செய்து வந்த ஒரு புரோக்கரிடம் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்கபட்டார்.
பிறகு பல நகரங்களுக்கு ஆயிஷா பாலியல் தொழில் செய்ய அழைத்து செள்ளப்பட்டுலாளர். கடைசியாக ஆயிஷா சென்றடைந்த இடம் புனே.

ரைடு!
புனேவில் ஆயிஷா தங்கியிருந்த இடத்தில் காவல் துறை ரைடு நடத்தியது. அங்கிருந்து ஆயிஷா போலீஸாரால் மீட்கபட்டட்டார். பிறகு ஆயிஷா ஒரு தொண்டு நிறுவனத்திடம் சேர்க்கப்பட்டார்.

ஆயிஷாவின் விருப்பம்!
போலீஸ் நடத்திய விசாரணையில், ஆயிஷா தன்னை தனது சொந்த ஊருக்கே அனுப்பி வைக்கும்படி கூறியுள்ளார். மேலும், பாலியல் தொழில் ஈடுபட்டு வந்த போது, தனக்கு கிடைத்த பணத்தை ஆயிஷா கொஞ்சம் சேர்த்து வைத்துள்ளார்.

ரூ.13,000!
தன்னிடம் அரசு தடை செய்த பணம் ரூபாய் பதிமூனாயிரம் இருப்பதாகவும். அதை எப்படியாவது மாற்றித் தர முடியுமா என பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் சுஷ்மாவிற்கு கடிதம் எழுதியுள்ளார் ஆயிஷா.

ட்விட்டர் மூலம் உதவி!
ஆயிஷா மோடி மற்றும் சுஷ்மவிற்கு எழுதிய கடிதம் ட்விட்டர் மூலமாக மோடி மற்றும் சுஷ்மா ட்விட்டர் அக்கவுன்ட் உடன் டேக் செய்து பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை பார்த்து யாராவது ஆயிஷாவிற்கு உதவுவார்கள் என அந்த தொண்டு நிறுவனம் பதிலுக்காக காத்திருக்கிறது.
அந்த கடிதத்தில்...
அந்த கடிதத்தில் தான் ஏமாற்றப்பட்டதில் இருந்து மோடிக்கு தனது மொத்த கதையை எழுதியுள்ளார் ஆயிஷா. இது தான் அந்த ட்விட்டர் பதிவு...



Click it and Unblock the Notifications