Latest Updates
-
செவ்வாய்-புதன் சேர்க்கையால் உருவாகியுள்ள தன யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலக்ஷ்மி யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உள்ளங்கையில் இந்த 'ராஜலட்சுமி யோகம்' இருப்பவர்கள் கோடீஸ்வரராக பிறந்தவர்களாம் - உங்க கையில் இருக்கா? -
விளக்கெண்ணெயுடன் இந்த 5 எண்ணெயை கலந்து யூஸ் பண்ணுங்க.. தலைமுடி 2 மடங்கு வேகத்துல வளரும்.. -
ஆந்திரா கறிவேப்பிலை சட்னி ரெசிபி - அரைச்சு பாருங்க, இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
பதவியேற்பு விழாவில் விஜய்யின் குடும்பம் ஏன் வரவில்லை? அந்த ஒரு விஷயம் தான் இப்போ ஹாட் டாபிக்! -
சப்பாத்திக்கு இந்த பக்குவத்துல கருப்பு கொண்டைக்கடலை கிரேவி செய்யுங்க.. 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ஒழுக்கமானவர்களாக இருப்பார்களாம் - வெற்றி இவர்களை தேடிவருமாம் -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு போஸ்ட்: இணையத்தில் வெடிக்கும் புதிய சர்ச்சை! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகமா வழியுதா? அப்ப மைசூர் பருப்பு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
உலகில் சடங்கு என்ற பெயரில் நடக்கும் பயங்கரமான பெண்ணுறுப்பு சிதைவு நிகழ்வுகள்!
பெண்ணுறுப்பை சடங்கு, சம்பிரதாயம் என்ற பெயரில் சிதைக்கும் சில உலக நிகழ்வுகள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
யுனிசெப் ரிபோர்ட் படி, உலகில் 30 -க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த இரண்டு கோடிக்கும் அதிகமான பெண்கள் இது போன்ற பெண்ணுறுப்பு சிதைவு நிகழ்வுகளால் பாதிக்கப்படுகின்றனர் என அறியப்படுகிறது. இது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல்.

எப்.ஜி.எம்? (FGM - Female Genital Mutilation) என்பது பெண்ணுறுப்பின் ஒரு பகுதி அல்லது அதன் வெளிப்புற பகுதியை அகற்றும் முறையாகும். இது எந்த ஒரு மருத்துவ காரணமும் இல்லாமல் சில நாடுகளில் சடங்கு, சம்பிரதாயம் என்ற முறையில் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்தோனேசியா, எகிப்து, எதியோப்பியா!
யுனிசெப் அறிக்கையில் இந்தோனேசியா, எகிப்து, எதியோப்பியா நாடுகளை சேர்ந்த பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இந்த பெண்ணுறுப்பு சிதைவு சம்பவத்தால் பாதிப்படைந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது.
மேலும், சோமாலியா, குனியா, ஜைபூடீ. போன்ற பகுதிகளை சேர்ந்த 15 - 49 வயதுக்குட்பட்ட பெண்கள் தான் அதிகளவில் இந்த பெண்ணுறுப்பு சிதைவால் பாதிப்படைந்துள்ளனர்.

குழந்தைகள்!
இந்த நாடுகளில் ஐந்து வயதுக்கும் குறைவான பெண் குழந்தைகளும் கூட இந்த பெண்ணுறுப்பு சிதைவு சடங்கில் உட்படுத்தப்படுகின்றனர். உலகில் இந்த செயற்முறைக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும் கூட, பல நாடுகளில் சடங்கு என்ற பெயரில் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

அபாயம் என்ன?
சுகாதாரம், ஆரோக்கியம் காரணமாக இதை செய்கிறோம் என இவர்கள் கூறுகின்றனர். ஆனால், இதனால் அந்த பெண்களுக்கு நோய் தொற்று, வலி, காயங்கள், சில குறைபாடுகள் தான் உண்டாகின்றன. ஒருசிலர் இதனால் இறந்தும் உள்ளனர்.

மனித உரிமை மீறல்!
சர்வதேச அளவில், இந்த பெண்ணுறுப்பு சிதைப்பு சடங்கை குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான ஒரு மனித உரிமை மீறலாக தான் பார்க்கப்படுகிறது. இது ஒரு நபரின் சுகாதாரம், ஆரோக்கியம், உடல் போன்ற தனிப்பட்ட விஷயங்களை பாதிக்கிறது.

வகைகள்!
- Clitoris எனும் பெண்குறி பகுதியை நீக்குதல்.
- Clitoris மற்றும் Labia minora எனும் பகுதியை நீக்குதல்.
- பெண்ணுறுப்பு பகுதியை குறுகிய நிலை ஆக்குதல்.
- பெண்ணுறுப்பு பகுதியை தைப்பது.

பக்கவிளைவுகள்!
பெண்ணுறுப்பு சிதைப்பு சடங்கு செய்யும் பெண்களுக்கு அதிக இரத்தப்போக்கு, சரும தொற்று, காய்ச்சல், தடித்தல், மரணம் போன்றவை உண்டாகும் அபாயங்கள் இருக்கின்றன.
இதை தடுக்க வேண்டியது அவசியம். யுனிசெப் போன்ற நிறுவனங்கள் என்ன கூறினாலும், ஒவ்வொரு 11 நொடிக்கும் ஒரு பெண் இந்த பெண்ணுறுப்பு சிதைவு சடங்குக்கு உட்படுத்தப்பட்டு பாதிப்படைகிறார் என்பது தான் உண்மை. இது இன்றளவும் 29 நாடுகளில் செயல்முறையில் இருந்து வருகிறது.



Click it and Unblock the Notifications