Latest Updates
-
அடுப்பில்லாம செய்யக்கூடிய இடிச்ச தயிர் சட்னி - சூடான சாத்துக்கு செமயா இருக்கும்.. ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசி பெண்களுக்கு ரொம்ப நேர்மையான கணவர் கிடைக்கும் அதிர்ஷ்டமிருக்காம்... உங்க ராசி இதுல இருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் ராகு-கேது பெயர்ச்சி: மார்ச் இறுதி முதல் இந்த 4 ராசிக்காரர்களின் தலைவிதி மாறப்போகுது! -
38 நிமிடங்கள் மட்டுமே நடந்த வரலாற்றின் மிகவும் வினோதமான போர்... இந்த போரில் எந்த நாடு ஜெயித்தது தெரியுமா? -
வெள்ளை பணியாரமும்.. மிளகாய் சட்னியும் - இந்த காம்போவை ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க... அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் மோசமான பிரச்சினைகள் வருமாம்...! -
27 ஆண்டுக்கு பின் சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரம் செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்...! -
4 முட்டை இருந்தா இந்த செட்டிநாடு ஸ்டைல் குருமாவை டக்குனு பண்ணுங்க... தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும்...! -
அழகான இதயமும், தூய்மையான ஆன்மாவும் கொண்ட 4 ராசிகள் இவர்கள்தான்... உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா?
காந்திஜி கூறிய அற்புதமான தத்துவங்கள்!!!
காந்தி, இந்தியாவின் தந்தை என புகழப்படும் விடுதலை போராட்ட வீரர் என்று கூறுவதைவிட, தியாகி என்று கூறலாம். நாடு முழுவதும் போராட்டங்கள், எதிர்ப்பு, சண்டைகள் என ஒரே களேபரமாக இருக்க, அமைதியின் மூலமும், அகிம்சையின் மூலமும் விடுதலை பெற முடியும் என்று நிரூபித்தவர்.
தேசப் பிதா காந்தி இப்படிப்பட்டவரா?? யாரும் அறியாத அரிய தகவல்கள்!!!
இந்தியாவின் விடுதலைக்கு காந்தி என்ற தனி நபர் மட்டுமே காரணம் அல்ல என்பது தான் உண்மை. ஒரு பக்கம் காந்தியின் அகிம்சையோடு சேர்த்து மற்றவர்களின் போராட்டமும் இந்தியாவின் விடுதலைக்கு முக்கிய காரணமாக இருந்தது என்பது அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை.
மகாத்மா காந்தியிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய 8 விஷயங்கள்!!!
ஓர் நாடு வளம்பெற வேண்டும் எனில், அந்த நாட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் வளர வேண்டும். இது குறித்து காந்திஜி கூறிய அற்புதமான பொன்மொழிகள் பற்றி இனி காணலாம்....

பலம்
பலம் உடல் வலிமையை சார்ந்தது அல்ல, வெல்ல முடியாத மன தைரியத்தை சார்ந்தது. மன தைரியத்தில் ஒருவர் நிலைத்து இருந்தாலே, எளிதாக வெற்றிபெற்று விடலாம்.

மகிழ்ச்சி
மகிழ்ச்சி உன் எண்ணத்தில் இருக்கிறது, உன் வார்த்தையில் இருக்கிறது. மற்றும் நீ செய்யும் நல்லிணக்கத்தில் இருக்கிறது.

எதிர்காலம்
உன் எதிர்காலம், உன்னுடைய இன்றைய செயலில் தான் சார்ந்திருக்கிறது.

வெற்றி
முதலில் அவர்கள் உன்னை உதாசீனம் செய்வார்கள், பிறகு கேலி செய்வார்கள், அதன் பிறகு சண்டையிடுவார்கள், கடைசியில் நீ வென்றுவிடுவாய்.

பலன்
நீ செய்ததற்கான பலன் என்னவாக வரப்போகிறது என்று உனக்கு தெரியாது, ஆனால் நீ எதுவும் செய்யாவிடில், எதுவுமே கிடைக்காது என்பதை உணர்.

படிப்பு
நாளையே இறந்துவிடுவாய் என்றால் இன்றே வாழ்ந்துவிடு, வாழ்நாள் நிறைய இருக்கிறது என்றால் கற்றுக் கொண்டே இரு. உன் மனதில் இருக்கும் எண்ணங்கள் தான், உன் வாழ்க்கையை மாற்றும் வண்ணங்கள் என்பதை மறந்துவிடாதே.

தீர்வு
பழிக்குப்பழி என்பது நாளை உலகை சுடுகாடாக்கி விடும்.

மாற்றம்
இவ்வுலகம் மாற வேண்டும் எனில், முதலில் நீ மாற வேண்டும்!

பேராசை
மனிதர்களை திருப்தி படுத்த அனைத்துமே உலகில் உண்டு, ஆனால் மனிதனின் பேராசையை திருப்தி படுத்த எதுவும் இல்லை.

நீ
உன்னை நீயே முழுதாய் தெரிந்துக் கொள்ள வேண்டும் எனில், மற்றவர்களுக்கு சேவை செய்வதில் உன்னை நீயே தோற்கடிக்க வேண்டும்.

சுதந்திரம்
தவறு செய்யும் அளவு சுதந்திரம் இருப்பது எப்படி உணமையான சுதந்திரமாகும்??

காயம்
உனது அனுமதி இன்றி, யாரும் உன்னை காயப்படுத்த முடியாது.

மனிதம்
மனிதனாக இருப்பது அல்ல மனிதம், மனிதாபிமானத்துடன் இருக்க வேண்டும்

தியாகம்
நீ செய்வது வலிக்கிறது எனில் அது எப்படி தியாகம் ஆகும்?, உண்மையில் நீ தியாகம் செய்கிறாய் எனில் அது உனக்கு மகிழ்ச்சியை மட்டுமே தரும்.



Click it and Unblock the Notifications











