Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப கறிவேப்பிலையை இந்த எண்ணெய்களுடன் சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
குடிமக்கள் அனைவரும் சொந்த வீடு வைத்துள்ள உலகின் அதிசய நாடு - இதற்கு காரணம் என்ன தெரியுமா? -
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
சூரிய கிரகணத்திற்குப் பிறகு மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
மங்களகரமான மஞ்சள் நிற புடவையில் நடிகை ஸ்ரீதேவி!
வட இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுவது தான் கர்வா சவுத். இது எதற்கு கொண்டாடப்படுகிறது என்றால் திருமணமான பெண்கள் தங்கள் கணவனின் நீண்ட ஆயுள் வேண்டி நிலவு வரும் வரை விரதமிருப்பார்கள். மேலும் மாலை வேளையில் திருமணமான பெண்கள் அனைவரும் ஒன்று கூடி பூஜை செய்வார்கள்.
அத்தகைய கர்வா சவுத் கொண்டாட்டத்திற்கு நடிகை ஸ்ரீதேவியும் பங்கு கொண்டார். அப்படி பங்கு கொள்ளும் போது அவர் டிசைனர் சப்யசாச்சி டிசைன் செய்த மஞ்சள் மற்றும் பச்சை நிறங்கள் கலந்த லேஸ் புடவையை அணிந்து வந்திருந்தார்.

அதிலும் இந்த மஞ்சள் நிற புடவைக்கு அவர் அணிந்து வந்த எம்பிராய்டரி ஜாக்கெட், அந்த புடவையை இன்னும் அழகாக வெளிக்காட்டியது. மேலும் ஸ்ரீதேவி இந்த புடவைக்கு அற்புதமாக மேக்கப் போட்டு வந்திருந்தார். அதில் உதடுகளுக்கு அடர் மெரூன் நிற லிப்ஸ்டிக் அணிந்து, வட்ட வடிவில் பொட்டு வைத்து, கண்களுக்கு கண்மை போட்டு வந்திருந்தார்.
குறிப்பாக ஸ்ரீதேவி புடவைக்கு ஏற்றவாறு பெரிய காதணி, பச்சையான கற்கள் பதிக்கப்பட்ட பட்டையான நெக்லேஸ் போட்டு வந்தது அவரது தோற்றத்தை சிறப்பாக வெளிக்காட்டியது.
அதுமட்டுமின்றி, ஸ்ரீதேவி இந்திய பெண்களின் பாரம்பரிய ஹேர் ஸ்டைலான கொண்டை போட்டு, அதனைச் சுற்றி மல்லிகைப் பூ வைத்து வந்தது, அவரை இன்னும் அழகாக வெளிக்காட்டியது.



Click it and Unblock the Notifications

