Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. -
சனி-சூரியன்-சந்திரன் மீன ராசியில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க இருமடங்கு துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போறாங்களாம் -
73 வயதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஃபிட்டாக இருப்பதன் ரகசியம் இதாங்க.. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க... -
முட்டைக்கோஸை வழக்கமான பொரியல் செய்யாம இந்த மாதிரி பொரியல் செய்யுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
அரசியல்வாதிகள் ஏன் எப்போதும் வெள்ளை சட்டை மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
பன்னீரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி பன்னீர் கீமா மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
பிராமின் ஸ்டைல் வெஜ் குருமா ரெசிபி... ஈஸியா இப்படி செய்யுங்க... சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும்...! -
மீன ராசியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: ஏப்ரலில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க... -
உங்க சீலிங் பேனிலிருந்து காத்து வரலையா? இதான் பிரச்சினையா இருக்கும்... எப்படி ஈஸியா சரி பண்ணலாம் தெரியுமா? -
எப்பவும் ஒரே மாதிரி ரசம் வெக்காம.. ஒரு டைம் புளி சேர்க்காம இப்படி ரசம் வையுங்க.. ஊத்தி குடிப்பாங்க..
இன்னும் பலரது மனதில் விருப்பமான நாயகியாக இருக்கும் ஐஸ்வர்யாவின் லேட்டஸ்ட் லுக்!
சமீபத்தில் நடந்த மும்பை ஃபிலிம் திருவிழாவில் பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் அட்டகாசமான உடைகளை அணிந்து வந்திருந்தனர். அதில் வயதானாலும் இன்னும் பலரது மனதில் விருப்பமான நாயகியாக இருக்கும் ஐஸ்வர்யா ராய் பச்சனும் கலந்து கொண்டார். பெரும்பாலும் ஐஸ்வர்யா நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் போது சப்யசாச்சி என்னும் டிசைனர் வடிவமைத்த ஆடைகளைத் தான் தேர்ந்தெடுத்து அணிந்து வருவார்.
அந்த வகையில் இந்த மும்பை ஃபிலிம் திருவிழாவிற்கும் ஐஸ்வர்யா ராய் சப்யசாச்சி டிசைன் செய்த நீல நிற புடவையை அணிந்து வந்திருந்தார். இந்த புடவை பார்ப்பதற்கு சிம்பிளாகத் தான் இருக்கும். இந்த புடவையைப் பற்றி சொல்ல வேண்டுமானால், அடர் நீல நிற புடவையில் சிவப்பு கலந்த ஆரஞ்சு மற்றும் மஞ்சள் கலந்தவாறான பார்டர் இருக்கும்.

மேலும் ஐஸ்வர்யா ராய் இந்த புடவைக்கு முழுக்கை கொண்ட ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார். அந்த ஜாக்கெட்டில் ஆங்காங்கு தங்க நிற பூப்பிரிண்ட் போடப்பட்டிருப்பதுடன், கோல்டன் பார்டர் இருந்தது. சொல்லப்போனால் ஐஸ்வர்யா மிகவும் சிம்பிளாகத் தான் அணிந்து வந்திருந்தார்.
அதுமட்டுமல்லாமல் ஐஸ்வர்யா ராய் பச்சன் இந்த புடவைக்கு ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார். அத்துடன் ஆடம்பரமாக ஆபரணங்கள் எதுவும் அதிகம் அணியாமல், காதுகளுக்கு சிறிய கம்மல் அணிந்து வந்திருந்தார். மேலும் மேக்கப் கூட அளவாக போட்டு வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications












