வீட்டில் டீ போடும் போது இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க... இல்லனா உங்க டீ மொத்தமா வீணாப்போயிடும்!

காலம் காலமாக மக்களால் விரும்பி அருந்தப்படும் ஒரு பானம் என்றால் அது தேநீர்தான். இந்த சூடான மற்றும் சுவையான பணம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் இதயத்தில் தனியிடத்தை பிடித்துள்ளது.

அதன் இனிமையான நறுமணம் மற்றும் சுவை மக்களுக்குள் உடனடியாக உற்சாகத்தை உண்டாக்குகிறது. தேநீர் தயாரிப்பது பார்ப்பதற்கு மிகவும் எளிதானதாக இருந்தாலும், உண்மையில் பக்காவான தேநீர் தயாரிப்பது என்பது ஒரு கலையாகும்.

Mistakes Should Avoid While Preparing Tea at Home in Tamil

தேனீர் தயாரிக்கும் போது நீங்கள் செய்யும் சில தவறுகள் அதன் சுவை மற்றும் தரத்தை பாதிக்கும், இதனால் உங்கள் தேநீர் அனுபவம் மோசமானதாக மாறும்.

இந்த பதிவில், தேநீர் தயாரிக்கும் போது மக்கள் செய்யும் சில பொதுவான தவறுகள் என்னென்ன மற்றும் அதனை தவிர்த்து எப்படி சுவையான தேநீரை தயாரிக்கலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தண்ணீரை அதிகமாக கொதிக்க வைப்பது

தேநீர் தயாரிப்பதில் மக்கள் செய்யும் மிகவும் பொதுவான தவறுகளில் ஒன்று தண்ணீரை அதிக வெப்பமாக்குவது. வெவ்வேறு வகையான தேநீருக்கு அவற்றின் உகந்த சுவைகளைப் பிரித்தெடுக்க குறிப்பிட்ட நீர் வெப்பநிலை தேவைப்படுகிறது.

உதாரணமாக தேயிலை தீய்ந்து போவதையும், கசப்பாக மாறுவதையும் தடுக்க மென்மையான பச்சை தேயிலைகள் குறைந்த வெப்பநிலையில் காய்ச்சுவது நல்லது. மறுபுறம், பிளாக் டீ மற்றும் மூலிகை தேநீர் பொதுவாக வெப்பமான நீர் தேவை, எனவே இந்த டீ தயாரிக்கும் போது நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

தரமற்ற தண்ணீரில் தேநீர் தயாரிப்பது

தேநீர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் தண்ணீரின் தரம் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை ஆனால் டீயில் பயன்படுத்தப்படும் தண்ணீரின் தரம் டீயின் சுவையை கணிசமாக பாதிக்கும்.

வலுவான குளோரின் சுவை அல்லது அதிக கனிம உள்ளடக்கம் கொண்ட குழாய் நீர் தேயிலை இலைகளின் சுவையைக் கெடுக்கும். இதேபோல், கெட்டிலில் நீண்ட நேரம் வைத்திருக்கும் தண்ணீரைப் பயன்படுத்துவதால் தேநீர் சுவை மிகவும் மோசமாக மாறும். பாத்திரம் கழுவும் நீரில் ஒருபோதும் தேநீர் தயாரிக்கக்கூடாது.

டீத்தூள் சேர்த்த பிறகு அதிக நேரம் கொதிக்க வைப்பது

உங்கள் தேநீரின் சுவைக்கு தேயிலை தூள் கொதிக்கும் நேரம் முக்கியமானது. தேயிலையை அதிக நேரம் கொதிக்க வைப்பது கசப்பான மற்றும் துவர்ப்பு சுவைக்கு வழிவகுக்கும், ஏனெனில் அதிக நேரம் கொதிக்க வைப்பது தேயிலை இலைகளில் இருந்து தேவையற்ற டானின்களை வெளியிடும்.

தவறான பாத்திரத்தில் தேநீர் தயாரிப்பது

தவறான பாத்திரத்தில் தேநீர் தயாரிப்பதும் அதன் சுவையில் பாதிப்பை ஏற்படுத்தும். சிலர் பிளாஸ்டிக் அல்லது உலோகத்தால் ஆன பாத்திரத்தில் தேநீரை தயாரிக்கலாம், இது தேநீருக்கு தேவையற்ற சுவைகளை அளிக்கும்.

இதேபோல் மிகவும் பழைய அல்லது கறை படிந்த பாத்திரத்தைப் பயன்படுத்துவது சுவையை எதிர்மறையாக பாதிக்கும். தேநீருக்கென்று ஒரு பாத்திரத்தைத் தனியாக ஒதுக்கி அதனை நன்றாக கழுவிவிட்டு தேநீர் தயாரிப்பது நல்லது.

சர்க்கரை அளவு

தேநீரின் சுவையை நிர்ணயிப்பதில் அதில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவு மிகவும் முக்கியமானதாகும். சர்க்கரையை அளவிற்க்கு அதிகமாக சேர்ப்பது அல்லது குறைவாக சேர்ப்பது என்பது அதன் சுவையில் தாக்கத்தை ஏற்படுத்தும். சிலர் ஆரோக்கியத்திற்காக தேநீரில் தேன் சேர்க்கிறார்கள்.

தேநீரில் தேனைப் பயன்படுத்துவது தேநீரின் இயற்கையான சுவைகளை சிதைத்து, டீயை அதிக இனிப்பானதாக மாற்றும்.

தரமில்லாத டீத்தூள்

தண்ணீர் மட்டுமல்ல, தரமற்ற தேயிலை இலைகளைப் பயன்படுத்துவதும் அதன் சுவையை பாதிக்கும். இயற்கையான சுவை இல்லாத அல்லது நன்கு பதப்படுத்தப்படாத பல்வேறு தளர்வான தேயிலை இலைகள் கடைகளில் கிடைக்கின்றன. அதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

மூடாமல் டீ தயாரிப்பது நல்லது

நிபுணர்களின் கூற்றுப்படி, தேநீரை ஊறவைக்கும்போது உங்கள் பாத்திரத்தை அல்லது கோப்பையிலிருந்து மூடியை எடுத்துவிடுவது நல்லது. தேயிலை அதன் சிறந்த சுவையை அடைய அத்தியாவசியமான ஆக்ஸிஜனை அனுமதிப்பதே இதற்குக் காரணம். இது தேநீர் அதிகமாக கொதிக்க வைக்கப்படுவதையும் தடுக்கிறது.

அதிகமாக பால் சேர்க்கக்கூடாது

தேயிலைத்தூள் நன்றாக கொதிக்க வைக்கப்பட்டு ஆறிய பிறகு அதில் சூடான பாலை சேர்க்க வேண்டும். தேநீரின் சுவை நன்றாக இருக்க வேண்டுமெனில், பாலின் அளவு குறைவாக இருக்க வேண்டும். பாலின் அளவு அதிகமாக இருந்தால், அது தேநீரின் சுவையை பாதிக்கும்.

Story first published: Friday, August 18, 2023, 16:19 [IST]
Desktop Bottom Promotion