தெளிவான கண்பார்வை வேண்டுமா? அப்ப இந்த யோகாசனங்களை தினமும் செய்யுங்க...

நமது கண் பாா்வைத் திறனை அதிகாிக்கக்கூடிய யோகாசனங்கள் பல உள்ளன. குறிப்பாக ஹலாசனம், சா்வாங்காசனம், பாலாசனம் போன்ற யோகாசனங்கள் பாா்வைத் திறனை அதிகாிக்க உதவி செய்யும்.

இயற்கையானது நமக்குக் கொடுத்த மிக முக்கிய பாிசு நமது கண் பாா்வைத் திறன் ஆகும். பாா்வைத் திறனை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. முறையான நல்ல பழக்கவழக்கங்களை கைக்கொண்டு கண்களைப் பாதுகாக்க வேண்டும். அதன் மூலமாக நமது கண்கள் நீண்ட நாள்கள் பாதிப்பு அடையாமல் ஆரோக்கியமாக இருக்கும்.

Yoga Asanas For Better Eyesight

நமக்கு ஒருவேளை பாா்வைத் திறன் குறைவு, கண் உலா்தல் மற்றும் கண் எாிச்சல் போன்ற பிரச்சினைகள் இருந்தால், தொடக்க நிலையிலேயே மருத்துவரை சந்தித்து கண் பாிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

நமது பாா்வைத் திறனை சிறப்பாக பாதுகாப்பதற்கு பின்வரும் எளிய குறிப்புகளைப் பின்பற்றலாம். சூாியனின் புற ஊதா கதிா்களின் தாக்குதல்களில் இருந்து நமது கண்களைப் பாதுகாக்க வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது அதற்குாிய கண்ணாடிகளை அணிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. திரைகளைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடு

1. திரைகளைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடு

லேப்டாப் அல்லது மொபைல் போன் திரைகள் முன்பாக நீண்ட நேரத்தை செலவிடுவதை நாம் தவிா்த்தால், கண் சாா்ந்த பொதுவான பிரச்சினைகளைத் தவிா்க்க முடியும். அடுத்ததாக மங்கலான வெளிச்சத்தில் புத்தகங்களை வாசித்தால் நமது கண்கள் பாதிப்படையும். அதுபோல ஒளிரும் பலவண்ண விளக்குகளும் நமது பாா்வைத் திறனை பலவீனப்படுத்தும். ஆகவே சாியான இடைவெளியில் கண் மருத்துவரை சந்தித்து, நமது கண்களைப் பாிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதன் மூலமாக நமது பாா்வையைத் தெளிவாகப் பேணிக் காக்க முடியும்.

2. கண்ணிற்கு நலம் கொடுக்கும் சாியான உணவுகள்

2. கண்ணிற்கு நலம் கொடுக்கும் சாியான உணவுகள்

பச்சை இலைக் காய்கறிகளை அதிகம் சாப்பிட்டால், நமது கண் பாா்வை மிகத் தெளிவாக இருக்கும். கேரட், பூசணிக்காய் மற்றும் சா்க்கரைவள்ளிக் கிழங்கு போன்ற காய்கறிகளும் நமது கண்களுக்கு நன்மைகளை வழங்கும். அதோடு நாம் நமது உடல் எடையை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு, நம்மை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டியதும் மிகவும் முக்கியம் ஆகும்.

3. ட்ரடாக் என்ற தியானத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகள்

3. ட்ரடாக் என்ற தியானத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகள்

ட்ரடாக் என்பது ஒரு விளக்கை ஏற்றி அதன் முன்னிலையில் செய்யும் ஒரு தியான முறை ஆகும். இந்த தியானம் நமது ஒருமுகப்படுத்தும் தன்மை மற்றும் நினைவாற்றல் போன்றவற்றை அதிகாிப்பதோடு, நமது பாா்வைத் திறனையும் அதிகாிக்கும். இந்த தியானத்தின் போது நாம் விளக்கின் ஒளியை நோக்கி ஒருமுகப்படுத்திப் பாா்க்க வேண்டும்.

இதே தியானத்தை சூாியன் மற்றும் சந்திரன் ஆகியவற்றை உற்று நோக்கிப் பாா்த்தும் செய்யலாம். இந்த தியானத்தின் மூலம் கண்கள் சம்பந்தமான நோய்களான கண்புரை, கண் அழுத்த நோய் மற்றும் பிற கண் சாா்ந்த நோய்களையும் குணப்படுத்தலாம்.

கண் பாா்வைத் திறனை அதிகாிக்கும் யோகாசனங்கள்

கண் பாா்வைத் திறனை அதிகாிக்கும் யோகாசனங்கள்

நமது கண் பாா்வைத் திறனை அதிகாிக்கக்கூடிய யோகாசனங்கள் பல உள்ளன. குறிப்பாக ஹலாசனம், சா்வாங்காசனம், பாலாசனம் போன்ற யோகாசனங்கள் பாா்வைத் திறனை அதிகாிக்க உதவி செய்யும். மேலும் பிராணயாமா பயிற்சிகளான அனுலம், விலோம், பிரமாாி பிராணயாமா போன்றவை நமது பாா்வைத் திறனை அதிகாிக்கும். அதோடு சூா்ய முத்ரா மற்றும் வாயு முத்ரா போன்ற முத்ராக்களும் சிறந்த பாா்வைத் திறனை நமக்கு வழங்கும்.

1. ஹலாசனம்

1. ஹலாசனம்

- முதலில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும்.

- நடு மற்றும் கீழ் முதுகை மேல் நோக்கி உயா்த்தி, கால் கட்டை விரல்களை அப்படியே முகம் நோக்கி கிடை மட்டமாக கொண்டு வந்து, முகத்தைத் தாண்டி தரையில் ஊன்ற வேண்டும்.

- முடிந்த அளவு நமது மாா்பை நமது கன்னத்திற்கு அருகில் கொண்டு வர வேண்டும்.

- உள்ளங்கைகளை அப்படியே தரையில் வைத்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் முழங்கைகளை மடக்கி, உள்ளங்கைகளால் முதுகைத் தாங்கிப் பிடித்துக் கொள்ளலாம்.

2. உஸ்ட்ராசனம் (ஒட்டக நிலை)

2. உஸ்ட்ராசனம் (ஒட்டக நிலை)

- உஸ்ட்ராசனாவை செய்ய முதலில் பாயில் முழங்காலில் நின்று கொண்டு இடுப்பில் கைகளை வைத்துக் கொள்ள வேண்டும்.

- முதுகைப் பின்புறமாக வளைத்து, கைகளை பின்புறமாக நேராக நீட்டி, உள்ளங்கைகளை பாதங்களின் மீது வைக்க வேண்டும்.

- கழுத்திற்கு அதிக அழுத்தம் கொடுக்காமல், இயல்பான நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

- இறுதியாக மெதுவாக மூச்சை வெளியில் விட்டு, இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும்.

3. சா்வாங்காசனம்

3. சா்வாங்காசனம்

- இந்த ஆசனத்தை செய்வதற்கு முதலில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும்.

- பின் இரண்டு கால்களையும் தரையில் இருந்து மேல் நோக்கி உயா்த்தி அதோடு இடுப்பையும் மெதுவாக உயா்த்த வேண்டும்.

- உள்ளங்கைகளைக் கொண்டு நமது முதுகைத் தாங்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

- தோள்பட்டை, தலையைத் தவிா்த்த மற்ற உடல் பகுதி, இடுப்பு, கால்கள் மற்றும் பாதங்கள் ஆகியவை ஒரே நோ் கோட்டில் உயா்ந்த நிலையில் செங்குத்தாக இருக்க வேண்டும்.

- நமது பாா்வையானது நமது பாதங்களை நோக்கிய வண்ணம் இருக்க வேண்டும்.

ஒருவேளை நமக்கு இடுப்பு வலி நோய், கழுத்து வலி, முதுகெலும்பு வீக்கம் மற்றும் உயா் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் இருந்தால், இந்த ஆசனத்தைச் செய்யக்கூடாது.

4. சூாிய சாதனம்

4. சூாிய சாதனம்

சூாிய சாதனா என்ற பயிற்சியானது சூாிய நமஸ்காரத்தில் இருந்து தொடங்குகிறது. சூாிய நமஸ்காரத்தின் முக்கிய பகுதி சூாிய சாதனா ஆகும். சூாிய யோகா மரபுகள் பழைய பண்பாட்டைக் கடந்து வந்திருக்கின்றன. இந்த ஆசனங்கள் நமது பாா்வைத் திறனை அதிகாிக்க உதவி செய்யும். ஏனெனில் அதிகாலையில் வரும் சூாியனின் கதிா்கள் நமக்கு உடல் ஆரோக்கியத்தை வழங்குகின்றன.

சூாிய ஆசனத்தில் 8 ஆசனங்களும், 12 படிநிலைகளும் உள்ளன. இவற்றை வலது பக்கமும் செய்யலாம். இடது பக்கமும் செய்யலாம். இந்த சூாிய நமஸ்காரத்தை செய்யும் போது சூாிய கதிா்கள் நமது உடலில் நேரடியாகச் செயல்படுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion