Latest Updates
-
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க..
கொரோனா வைரஸின் புதிய அறிகுறிகள்...இந்த பிரச்சனைகள் இருந்தா அலட்சியமா இருக்காதீங்க...!
கோவிட்-19 இன் ஆரம்ப அறிகுறிகளாக வாசனை மற்றும் சுவை இழப்பு குறித்து விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியத்தை இந்த ஆய்வு ஆதரிக்கிறது
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்தை கடந்தது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் இதுவரை உலகளவில் 1 லட்சத்து 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில், உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் 19,072 ஆக உயர்ந்து 605 பேர் உயிரிழந்துள்ளனர். உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தொடர்ந்து கொரோனா வைரஸைப் பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு நாளும் வைரஸைப் பற்றி ஒரு புதிய ஆய்வு வெளிவருகிறது. மிக சமீபத்தில், ஒரு ஆய்வு வாசனை அல்லது சுவை இழப்பது கொரோனா வைரஸ் நோயின் (கோவிட்-19) ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம் என்று தெரிவிக்கிறது.

இருமல், காய்ச்சல் மற்றும் தொண்டை புண் ஆகியவை கொரோனா வைரஸைக் கண்டறிந்த பிறகு கவனிக்க வேண்டிய பொதுவான அறிகுறிகள் என்று சுகாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர். ஆனால், அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஓட்டோலரிங்காலஜி-ஹெட் அண்ட் நெக் சர்ஜரி மற்றும் பிரிட்டிஷ் அசோசியேஷன் ஆஃப் ஓட்டோரினோலரிங்காலஜி ஆகியவை இப்போது கோவிட்-19 இன் முதன்மை ஸ்கிரீனிங் அறிகுறிகளின் பட்டியலில் வாசனை இழப்பு (அனோஸ்மியா) மற்றும் சுவை இழப்பு (டிஸ்ஜூசியா) ஆகியவற்றை சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றன. இதைப்பற்றி இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

வாசனை இழப்பு (அனோஸ்மியா) என்றால் என்ன?
அனோஸ்மியா என்பது வாசனையின் முழுமையான இழப்பு ஆகும். அனோஸ்மியா உள்ளவர்கள் இனிப்பு, உப்பு, கசப்பான மற்றும் புளிப்புப் பொருள்களை ருசிக்க முடியும். ஆனால் குறிப்பிட்ட சுவைகளுக்கு இடையிலான வித்தியாசத்தை குறிப்பாக சொல்ல முடியாது. சுவைகளுக்கிடையேயான வேறுபாட்டைக் கூறும் திறன் வாசனையைப் பொறுத்தது, நாக்கில் அல்ல. அனோஸ்மியாவின் பொதுவான காரணங்கள் தலையில் காயம், வைரஸ் தொற்று மற்றும் அல்சைமர் நோய் ஆகும்.

சுவை இழப்பு (டிஸ்ஜீசியா) என்றால் என்ன?
டிஸ்ஜுசியா என்பது சுவை இழப்பு மற்றும் டிஸ்ஜுசியா உள்ளவர்கள் பொதுவாக ஒரு உலோக சுவை மற்றும் விரும்பத்தகாத இனிப்பு, கசப்பான அல்லது உப்பு சுவை குறித்து புகார் கூறுகிறார்கள். குளிர், கர்ப்பம், வறண்ட வாய், புகைபிடித்தல், ஒவ்வாமை, ஊட்டச்சத்து குறைபாடுகள், ஒற்றைத் தலைவலி, மலச்சிக்கல் மற்றும் இரைப்பை குடல் தொற்று ஆகியவை டிஸ்ஜுசியாவின் பொதுவான காரணங்கள்.

எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது?
ஒரு ஆய்வின்படி, வாசனை மற்றும் சுவை இழப்பு கோவிட்-19 நோய்த்தொற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. இன்டர்நேஷனல் ஃபோரம் ஆஃப் அலர்ஜி அண்ட் ரைனாலஜி இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், யு.சி. சான் டியாகோ ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள், கொரோனா வைரஸுடன் உணர்ச்சி இழப்பு தொடர்புடையதாக தெரிவித்துள்ளனர்.

ஆய்வு
ஆய்வின் போது, ஆராய்ச்சியாளர்கள் காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட 1,480 நோயாளிகளை ஆய்வு செய்தனர் மற்றும் கோவிட்-19 நோய்த்தொற்றுக்கான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மொத்தத்தில், 102 நோயாளிகள் கொரோனா வைரஸுக்கு நேர்மறையாகவும் 1,378 பேர் எதிர்மறையாகவும் இருந்துள்ளனர். கோவிட்-19 நோயாளிகளுக்கு இந்த நோயின் லேசான அறிகுறி இருந்தது, ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை.

2 முதல் 4 வாரங்கள்
நேர்மறை கோவிட்-19 நோயாளிகளில் சில உணர்ச்சி குறைபாடுகள் அதிகமாக இருப்பதாகவும், வாசனை மற்றும் சுவை இழப்பு தீவிரமானது என்றும் லேசானது அல்ல என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. வாசனை மற்றும் சுவை மீட்கும் விகிதம் அதிகமாக இருப்பதாகவும், பொதுவாக கோவிட்-19 நோய்த்தொற்றின் இரண்டு முதல் நான்கு வாரங்களுக்குள் இது ஏற்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டினர்.

பிற பொதுவான அறிகுறி
"எங்கள் ஆய்வின் அடிப்படையில், உங்களுக்கு வாசனை மற்றும் சுவை இழப்பு இருந்தால், உங்களுக்கு தொற்றுநோய்க்கான பிற காரணங்களை விட 10 மடங்கு அதிகமாக கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. கோவிட்-19 நோய்த்தொற்றின் பொதுவான முதல் அறிகுறி காய்ச்சலாகவே உள்ளது. ஆனால் சோர்வு, வாசனை மற்றும் சுவை இழப்பு ஆகியவை பிற பொதுவான ஆரம்ப அறிகுறிகளாகப் பின்தொடர்கின்றன "என்று யூரோ சான்டியாகோ ஹெல்த் நிறுவனத்தின் ஓட்டோலரிஞ்ஜாலஜிஸ்ட் மற்றும் தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை நிபுணர் கரோல் யான் கூறினார்.

விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்
"கோவிட்-19 மிகவும் தொற்றுநோயான வைரஸ் என்று எங்களுக்குத் தெரியும். கோவிட்-19 இன் ஆரம்ப அறிகுறிகளாக வாசனை மற்றும் சுவை இழப்பு குறித்து விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியத்தை இந்த ஆய்வு ஆதரிக்கிறது" என்று அவர் மேலும் கூறினார்.

ஆய்வு செய்ய வேண்டும்
கோவிட்-19 க்கு நோயாளிகளை பரிசோதிக்கும் போது வாசனை மற்றும் சுவை இழப்பை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று யுசி சான் டியாகோ ஹெல்த் பரிந்துரைத்துள்ளது. இருப்பினும், கோவிட்-19 நோயாளியின் வாசனை மற்றும் சுவை இழப்பதற்கான சரியான வழிமுறை மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.



Click it and Unblock the Notifications











