Just In
- 19 min ago உடம்புல இந்த அறிகுறிகள் அதிகமா தெரியுதா? அப்ப இந்த புற்றுநோய் இருக்கு-ன்னு அர்த்தம்... ஜாக்கிரதை!
- 2 hrs ago லோக்சபா தேர்தல் 2024: இதுவரை இந்திய பிரதமர்களாக இருந்தவர்கள் யார் யார்? அவர்களின் பதவிக்காலம் என்ன?
- 2 hrs ago ஒரு மணி நேரத்திற்கு 7400 ரூபாய் சம்பாதிக்கும் பெண்... அப்படி என்ன செய்றாங்க இவங்க... இதுக்கே இவ்வளவு வருமானமா?
- 4 hrs ago இந்த 4 ராசிக்காரங்க வாயால பேசுறத விட கையாலதான் அதிகம் பேசுவாங்களாம்... ரொம்ப ஆபத்தானவங்களாம் இவங்க...!
Don't Miss
- News "யாராவது கிளம்பினா ரத்தம் கக்கி சாவீங்க.. மந்திரம் போட்டு வச்சிருக்கேன்" பீதியாக்கிய செல்லூர் ராஜூ!
- Movies ரகசிய திருமணம் செய்து கொண்ட சித்தார்த்.. அதிதி ராவின் முதல் கணவர் யார் தெரியுமா?
- Technology கூகுள் பே கொஞ்சம் ஓரம்போ.. புதிய சேவையைக் கொண்டுவரும் WhatsApp.. பயனர்கள் உற்சாகம்.!
- Automobiles இந்த விமான நிலையம் மும்பை நகரத்தை விட பெருசு... எங்கு அமைந்துள்ளது? அதன் அளவு என்ன?
- Travel வெளிநாட்டவர்களை விட இந்திய சுற்றுலாப் பயணிகள் தான் மிகவும் பொறுப்பானவர்களாம் – எதனால் தெரியுமா?
- Finance 2 ஆண்டுகளில் 71 கிலோ உடல் எடை குறைத்த சிஇஓ.. உயிர் பயத்தை காட்டிட்டாங்க..!!
- Sports ரஷீத் கானை அடிக்க தைரியம் இருக்கனும்.. அந்த பையனுக்கு கொஞ்சம் கூட பயமே இல்லை.. மைக் ஹசி பாராட்டு!
- Education டிஆர்டிஓ நிறுவனத்தில் பணிபுரிய அருமையான வாய்ப்பு...!!
ஏலக்காய் நீரை தினமும் குடிப்பதால் உடலினுள் நிகழும் அற்புதங்கள் என்னென்ன தெரியுமா?
ஏலக்காய் பொதுவாக உணவின் சுவைக்காகவும், மணத்திற்காகவும் பயன்படுத்தும் ஓர் மசாலாப் பொருள். அதோடு இதில் ஏராளமான மருத்துவ குணங்களும் உள்ளன. எனவே இந்த ஏலக்காயை நீரில் ஊற வைத்துக் குடிப்பது என்பது மிகவும் நல்லது.
பொதுவாக உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிப்பதால் உடல் நீரேற்றத்துடன் இருப்பது மட்டுமின்றி, பல ஆரோக்கிய பிரச்சனைகளையும் சமாளிக்க உதவுகிறது. குறிப்பாக இது உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை துரிதப்படுத்துகிறது. இதனால் வேகமாக உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இப்படிப்பட்ட தண்ணீருடன் ஒருசில பொருட்களை சேர்த்துக் குடித்தால், அதனால் கிடைக்கும் பலன்களோ ஏராளம்.
அதுவும் அந்நீரில் ஏலக்காயை பயன்படுத்தினால், அது குடிக்கும் நீரின் பலனை இரட்டிப்பாக்கும். ஏலக்காய் பொதுவாக உணவின் சுவைக்காகவும், மணத்திற்காகவும் பயன்படுத்தும் ஓர் மசாலாப் பொருள். அதோடு இதில் ஏராளமான மருத்துவ குணங்களும் உள்ளன. எனவே இந்த ஏலக்காயை நீரில் ஊற வைத்துக் குடிப்பது என்பது மிகவும் நல்லது. இப்போது ஏலக்காய் நீரை எப்படி தயாரிப்பது மற்றும் அந்நீர் எவ்வளவு நன்மைகளை வழங்குகிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
- ஏலக்காய் நீர் சருமத்திற்கு நல்லதா?
ஏலக்காயில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளதால், இது சருமத்தில் ஏற்படும் வெடிப்புக்களை குணப்படுத்தும் மற்றும் இது சருமத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தை சுத்தப்படுத்தி தெளிவான மற்றும் சீரான நிறத்தை கொடுக்க உதவும். மேலும் இது மென்மையான சருமத்தைப் பெறவும் உதவுகிறது.
- ஏலக்காய் விந்து எண்ணிக்கையை குறைக்குமா?
நிறைய ஆய்வுகளின் படி, அதிகப்படியான ஏலக்காயை உட்கொள்வது ஆண்மைக் குறைவு பிரச்சனையை ஏற்படுத்துவதைக் காட்டுகிறது. மேலும் ஏலக்காயை சாப்பிடுவதால் பாலுணர்வு குறைவதாக பலர் புகாரளிக்கின்றனர்.
- ஒரு நாளைக்கு எவ்வளவு ஏலக்காய் சாப்பிடலாம்?
புத்துணர்ச்சியான சுவாசம் மற்றும் நல்ல செரிமானத்திற்கு ஒருவர் ஒரு நாளைக்கு 2-3 பச்சை ஏலக்காயை சாப்பிடலாம். ஏலக்காய் பொடி என்றால் 250 மிகி எடுக்கலாம்.
- யாரெல்லாம் ஏலக்காய் சாப்பிடக்கூடாது?
பித்தப்பை கல் உள்ள நோயாளிகள் ஏலக்காயை கட்டாயம் சாப்பிடக்கூடாது. ஏனெனில் ஏலக்காயை சற்று அதிகம் சாப்பிட்டாலும், அது பித்தப்பை வலியை பெரிதும் அதிகரிக்கும். மேலும் பித்தப்பை நோயாளிகள் ஏலக்காய் சாப்பிடுவது தொற்றுகள் மற்றும் இரத்தப்போக்கிற்கு வழிவகுக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.
- ஏலக்காயின் பக்கவிளைவுகள் என்ன?
ஏலக்காயை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், அது கல்லீரல் பிரச்சனைகள், பசியின்மை, அறுவை சிகிச்சைக்குப் பின் குமட்டல் மற்றும் வாந்தி, வாய்ப்புண் மற்றும் தொண்டை புண் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.