Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
தினமும் காலையில் ஒரு டம்ளர் பூண்டு டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
பூண்டு பற்களை பச்சையாக சாப்பிடலாம் அல்லது அதைக் கொண்டு டீ தயாரித்தும் குடிக்கலாம். குறிப்பாக பூண்டு டீயை தினமும் ஒரு டம்ளர் காலையில் குடித்து வந்தால், உடலினுள் பல மாயங்கள் நிகழும்.
பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க இயற்கை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய பொருள் தான் பூண்டு. இத்தகைய பூண்டில் கலோரிகள் குறைவு மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம். குறிப்பாக இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, நார்ச்சத்து, மாங்கனீசு மற்றும் செலினியம் போன்றவை ஏராளமாக உள்ளது.

பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் உட்பொருள், இரத்தம் உறைவதைத் தடுக்கும், கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மற்றும் இதில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகளும் உள்ளது. முக்கியமாக பூண்டு உடலைத் தாக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்கும்.
அதற்கு பூண்டு பற்களை பச்சையாக சாப்பிடலாம் அல்லது அதைக் கொண்டு டீ தயாரித்தும் குடிக்கலாம். குறிப்பாக பூண்டு டீயை தினமும் ஒரு டம்ளர் காலையில் குடித்து வந்தால், உடலினுள் பல மாயங்கள் நிகழும். இக்கட்டுரையில் பூண்டு டீயைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதய ஆரோக்கியம்
உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், அது இதய தமனிகளின் சுவர்களின் படிந்து, பெருந்தமனி தடிப்பை உண்டாக்கும். ஒருவர் தினமும் பூண்டு டீ குடித்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைந்து, இதய ஆரோக்கியம் மேம்படும் மற்றும் நோயின்றி வாழலாம்.

நோயெதிர்ப்பு சக்தி வலுபெறும்
பூண்டில் உள்ள அல்லிசினுடன், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளும் உள்ளதால், இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும். ஆகவே உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க நினைத்தால், தினமும் காலையில் ஒரு டம்ளர் பூண்டு டீ குடியுங்கள்.

எடை குறைவு
பூண்டு டீ உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, கொழுப்புக்களைக் கரைக்கும் செயல்பாடு அதிகரித்து, உடல் எடை வேகமாக குறையும். அதே சமயம் இது ஓரளவு பசியையும் அடக்கும்.

சுவாச மண்டலம் மேம்படும்
சளி, இருமல், நெஞ்சு சளி மற்றும் இரவு நேரத்தில் தூங்க முடியாதவாறு சுவாசிப்பதில் பிரச்சனையை சந்தித்தால், பூண்டு டீயை ஒரு கப் குடியுங்கள். இது அனைத்து வகையான சுவாச பிரச்சனைகளையும் அண்ட விடாமல் தடுக்கும்.

முதுமையை தாமதப்படுத்தும்
ஒருவரது சருமம் இளமையிலேயே சுருக்கத்துடன் காணப்பட்டால், அது அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும். வயதான காலத்தில் இம்மாதிரியான நிலை ஏற்பட்டால் பிரச்சனையில்லை. பூண்டு டீயை ஒருவர் அடிக்கடி குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் ஏ, சி, பி1 மற்றும் பி2 போன்றவை ப்ரீ-ராடிக்கல்களால் சருமம் பாதிப்படைவதைத் தடுத்து பாதுகாப்பளிக்கும். இதன் விளைவாக விரைவில் சரும சுருக்கம் ஏற்படுவதும் தடுக்கப்படும்.

புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள்
ஆய்வுகளில் பூண்டில் ஆன்டி-கார்சினோஜெனிக் பண்புகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே பூண்டு டீயை ஒருவர் தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், பல்வேறு வகையான புற்றுநோயின் தாக்கத்தைத் தடுக்கலாம்.

கல்லீரல் ஆரோக்கியம்
பூண்டு டீயை தினமும் குடித்து வந்தால், கல்லீரல் நீண்ட நாட்கள் சிறப்பாகவும், ஆரோக்கியமாகவும் செயல்படும். பூண்டில் உள்ள அல்லிசின் மற்றும் செலினிகயம், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கிறது.

இரத்த அழுத்தம் சீராகும்
இன்று பலர் உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறார்கள். அத்தகையவர்கள் பூண்டு டீயை தினமும் குடித்தால், உயர் இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.

நினைவில் கொள்ள வேண்டியவை
* பூண்டு டீயின் முழு நன்மைகளையும் பெற நினைப்பவர்கள், பூண்டு பற்களை நறுக்கிய பின் 10 நிமிடங்கள் கழித்து தான் சூடேற்ற வேண்டும்.
* அளவுக்கு அதிகமாக பூண்டு உட்கொண்டால், அது குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு, நெஞ்செரிச்சல், தலைச் சுற்றல் போன்ற சிக்கல்களை சந்திக்கக்கூடும். ஆகவே மிதமான அளவில் உட்கொள்ளுங்கள்.

பூண்டு டீ தயாரிக்க தேவையான பொருட்கள்:
* பூண்டு பற்கள் - 4 (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - 3 கப்
* தேன் - 2 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1/2 கப்

செய்முறை:
* ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் பூண்டு பற்களைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் ஓரளவு சூடு குறைந்ததும், அதில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்போது சுவையான பூண்டு டீ தயார்!

குறிப்பு
நீங்கள் ஏதேனும் மருந்து மாத்திரைகளை அன்றாடம் எடுப்பவராயின், பூண்டு டீயைக் குடிக்கும் முன், அந்த டீயைக் குடிக்கலாமா என உங்கள் மருத்துவரிடம் கேட்டு, அவரது அனுமதி பெற்ற பின் உட்கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications











