பெண்களே! மாதவிடாய் காலங்களில் நாப்கினுக்கு பதிலா நீங்க ஏன் மாதவிடாய் கப் யூஸ் பண்ணனும் தெரியுமா?

பெண்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை மனதில் கொண்டு அவர்களின் மாதவிடாய் கோப்பைகளை தயாரிப்பது சிறந்த யோசனையாக அந்த தம்பதிகளுக்கு தோன்றியது.

சங்கடமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இல்லாத விலையுயர்ந்த சானிட்டரி நாப்கின்களுக்கு நூற்றுக்கணக்கான ரூபாய் செலவழிக்கும் நாட்கள் போய்விட்டன. இது மாதவிடாய் கோப்பைகளின் காலம். காலம் மாற மாற காலத்திற்கு ஏற்ப நாமும் ஆரோக்கியமான மற்றும் வசதியான பயன்பாடுகளுக்கு நம்மை மாற்ற வேண்டும். நவீன பெண்களின் பிரச்சனைகளுக்கு தீர்வாக இருப்பது மாதவிடாய் கோப்பைகள் அல்லது கப்கள். மெடிக்கல் கிரேடு சிலிகானால் செய்யப்பட்ட, மாதவிடாய் கப் பெண்களின் மாதவிடாய் காலத்தில் சானிட்டரி பேட்களை விட பயன்படுத்த பாதுகாப்பான மாற்றாகும். பெண்களின் காலத்தைப் பொறுத்து, சுகாதார நோக்கங்களுக்காக கப்பை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். மகப்பேறு மருத்துவர்கள் துணி, சானிட்டரி பேட்கள் மற்றும் டம்பான்களுக்குப் பதிலாக மாதவிடாய் கப்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கின்றனர்.

AmTrue, A Safe Menstrual Cup For Women, Was Awarded The International Glory Awards 2022 in tamil

அந்த வகையில், பெண்களின் மாதவிடாய் சுழற்சிகளுக்கான ஆரோக்கியமான பாதுகாப்பான மாதவிடாய் கப்பை தயாரித்த மாத்ருச்சாயா வெல்னஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் ஆஷிஷ் தத்துஜி வஞ்சாரிக்கும், அவரது மனைவி இச்சா ஆஷிஷ்க்கும் சர்வதேச பெருமை விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. ஏன் இந்த விருது? அவர்கள் செய்தது என்ன? மாதவிடாய் கோப்பையை யார் யார் பயன்படுத்தலாம், யார் பயன்படுத்தக்கூடாது என்பதை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சர்வதேச விருது

சர்வதேச விருது

பெண்களின் மாதவிடாய் சுழற்சிகளுக்காக 2021 ஆம் ஆண்டின் மிகவும் புதுமையான மற்றும் புரட்சிகர தயாரிப்புக்கான சர்வதேச பெருமை விருதுகள் நடப்பு ஆண்டு (2022) வழங்கப்பட்டது. பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டியிடமிருந்து மாத்ருச்சாயா வெல்னஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் ஆஷிஷ் தத்துஜி வஞ்சாரியும், அவரது மனைவியும் அந்த விருதினை பெற்றுக்கொண்டனர். இந்த நிறுவனம் செப்டம்பர் 2021 இல் ஆஷிஷ் மற்றும் இச்சா ஆஷிஷ் ஆகியோரால் நிறுவப்பட்டது. பெண்களுக்கான "AmTrue"-Q என்ற மாதவிடாய் கப்பை தயாரிப்பாக இந்த விருது அவர்களுக்கு வழக்கப்பட்டுள்ளது.

மாதவிடாய் கப்புக்கான யோசனை

மாதவிடாய் கப்புக்கான யோசனை

ஆஷிஷின் மனைவி மாதவிடாய் பிரச்சனைகள் மற்றும் கசிவு, தடிப்புகள், எரியும் உணர்வுகள், எரிச்சல், தொற்று மற்றும் துர்நாற்றம் போன்ற பல்வேறு பிரச்சனைகளை சமாளிக்கும் போது, ​​ஒவ்வொரு மாதமும் இந்த நேரங்களில் அவரால் வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை. இது இந்த தயாரிப்புக்கான யோசனையை ஆஷிஷுக்கு அளித்ததாக அவர் கூறினார்.

மாதவிடாய் சுகாதார தயாரிப்புகள்

மாதவிடாய் சுகாதார தயாரிப்புகள்

இந்தியாவில் விற்கப்படும் ஏராளமான மாதவிடாய் சுகாதார தயாரிப்புகளை ஆஷிஷ் ஆராய்ந்தார். மேலும் மேற்கூறிய அனைத்து பிரச்சனைகளும் அவரது மனைவிக்கு வந்ததற்கு முதன்மையாக சானிட்டரி நாப்கின்களின் பயன்பாடுதான் காரணம் எனக் கண்டுபிடித்தார். பின்னர், சானிட்டரி பேட்களை விட பாதுகாப்பானது மற்றும் வசதியானது என்று கூறப்படும் மாதவிடாய் கப்களை பற்றி அறிந்து சந்தையில், ஆர்டர் செய்தார். அது சீனாவில் தயாரிக்கப்பட்ட தயாரிப்பு என்று பின்னர் கண்டறியப்பட்டது.

சீன தயாரிப்பு

சீன தயாரிப்பு

சீனப் பொருட்களின் தரம் மற்றும் நீண்ட ஆயுளை இந்தியர்கள் பொதுவாக நம்புவதில்லை என்பதாலும், இணை நிறுவனர் தானே அதைப் பயன்படுத்தியதாலும், அவர்கள் இருவரும் பொருளின் மீது சில உடல்நலம் தொடர்பான ஆய்வுகளைச் செய்ய முடிவு செய்தனர். ஒரு முழுமையான விசாரணையில், அந்த நேரத்தில் சந்தையில் இருந்த மொத்த மாதவிடாய் கப்களில் 90% சீனாவில் ஆரோக்கியமற்ற முறையில் தாயாரிக்கப்பட்டவை என்பது தெரியவந்தது. கூடுதலாக, அந்த மாதவிடாய் கோப்பைகள் அனைத்தும் மருத்துவ தரத்திலான திடமான சிலிகானால் ஆனது என்பதையும், உற்பத்தி செயல்முறை முழுவதும், சிலிகான் மற்ற இரசாயனங்கள், நச்சுகள் அல்லது பாக்டீரியாக்களால் மாசுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதையும் அவர்கள் அறிந்தனர். இதை பயன்படுத்தும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் தெரியவந்தது.

AmTrue மாதவிடாய் கப்

AmTrue மாதவிடாய் கப்

பெண்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை மனதில் கொண்டு அவர்களின் மாதவிடாய் கோப்பைகளை தயாரிப்பது சிறந்த யோசனையாக அந்த தம்பதிகளுக்கு தோன்றியது. லேசான மற்றும் கனமான மாதவிடாய் காலகட்டங்களில், பிரீமியம் மாதவிடாய் Q கோப்பையில் கசிவு ஏற்படாது மற்றும் ஆடைகளில் கறைகளை விடாது. Q கப் உட்பட எந்த பிராண்டிலிருந்தும் மாதவிடாய் கோப்பைகளைப் பயன்படுத்தும் பெண்கள் AmTrue ஐ முயற்சிக்க வேண்டும். மாதவிடாய் கப் வாஷ், ஆர்கானிக், இயற்கையானது மற்றும் தொற்றுநோய்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் மிக உயர்ந்த திறன் கொண்டதாக கருதப்படுகிறது.

மாதவிடாய் கோப்பையை எப்படி பயன்படுத்துவது

மாதவிடாய் கோப்பையை எப்படி பயன்படுத்துவது

முதலில் மாதவிடாய் கோப்பையை C வடிவில் மடித்து பிறப்புறுப்பில் செருகவும். இதற்குப் பிறகு அது தன்னிச்சையாக விரிவடைந்து யோனியின் சுவர்களில் ஒட்டிக்கொள்ளும். மாதவிடாய் கோப்பை பயன்படுத்த மிகவும் எளிதானது. அவற்றை மீண்டும் பயன்படுத்தலாம். சானிட்டரி நாப்கின்களுடன் ஒப்பிடும்போது, இவை மிகவும் ஆரோக்கியமானது உங்களை வசதியாக உணர வைக்கும். சுற்றுச்சூழலைக் கெடுக்காமல் இருக்க சானிட்டரி பேட்களுக்குப் பதிலாக மாதவிடாய் கோப்பைகளைப் பயன்படுத்தலாம்.

யார் தவிர்க்க வேண்டும்?

யார் தவிர்க்க வேண்டும்?

சிலிகான் ஒவ்வாமை உள்ளவர்கள் மாதவிடாய் கோப்பையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மாதவிடாய் கோப்பை என்பது புனல் வடிவிலான மற்றும் ரப்பர் அல்லது சிலிகானால் செய்யப்பட்ட மறுபயன்பாட்டுப் பொருளாகும். இது மற்ற முறைகளை விட அதிக இரத்தத்தை உறிஞ்சும். உங்களுக்கு சிலிகான் ஒவ்வாமை இருந்தால், மாதவிடாய் கோப்பையைப் பயன்படுத்துவது நல்ல யோசனையல்ல. இப்போது சந்தையில் பல சிலிகான் இல்லாத மாதவிடாய் கோப்பைகள் கிடைக்கின்றன. ஆனால் உங்களுக்கு சிலிகான் ஒவ்வாமை இருந்தால் சிலிகான் அடிப்படையிலான கோப்பையைப் பயன்படுத்த வேண்டாம். இது உங்கள் யோனியின் உள்ளேயும் வெளியேயும் சிவப்பு தடிப்புகள் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion