Latest Updates
-
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம்
மாதவிடாய் காலத்தில் கருப்பு நிறத்தில் இரத்தம் வருகிறதா? அது ஏன் தெரியுமா?
இங்கு மாதவிடாய் காலத்தில் வெளிவரும் கருப்பு நிற இரத்தக்கசிவிற்கான சில வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
பெண்கள் மாதந்தோறும் சந்திக்கும் மாதவிடாய் சுழற்சியின் போது பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். சில பெண்களுக்கு இரத்தத்தின் நிறத்தில் மாற்றம் ஏற்படும். இன்னும் சிலருக்கு இரத்தம் கெட்டி கெட்டியாக வெளிவரும். இது சாதாரணம் தான். பொதுவாக மாதவிடாய் சுழற்சியின் போது கருப்பையின் சுவர் கெட்டியாகி, கருத்தரிக்க தயாராக இருக்கும்.

இக்காலத்தில் உடலானது கருப்பை சுவருடன் இரத்தத்தையும் வெளியேற்றும். பெரும்பாலும் ஒவ்வொரு சுழற்சியின் போதும் 4-12 டீஸ்பூன் அளவு இரத்தம் வெளியேறும். ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் சுழற்சி சராசரியாக 28 நாட்களாக இருக்கும். இன்னும் சில பெண்களுக்கு 21 நாட்களாகவும், வேறு சில பெண்களுக்கு 35 நாட்களாகவும் இருக்கும். சாதாரணமாக மாதவிடாய் காலமானது 2-7 நாட்கள் வரை இருக்கும். சராசரியாக 5 நாட்கள் வரை இருக்கும்.

மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஏன் இரத்தம் கருப்பு நிறத்தில் வருகிறது?
கருப்பை பலவீனமாகவோ அல்லது கருப்பை சுவர் மெல்லியதாகவோ இருந்தால், இரத்தத்தை முறையாக வெளியேற்ற முடியாமல், தாமதமாக வெளிவரும் போது, அந்த இரத்தம் அடர் அல்லது கருப்பு நிறத்தில் கெட்டியாக வெளிவரும். இதற்காக மருத்துவரிடம் எல்லாம் செல்ல வேண்டும் என்பதில்லை.
கருப்பையின் வலிமையை அதிகரிக்கும் சில கை வைத்தியங்களைக் கொண்டே, இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.

வைத்தியம் #1
கருஞ்சீரகத்தை கருப்பட்டி சேர்த்து அரைத்து, மாதவிடாய் காலத்தில் சாப்பிட்டு வந்தால், கருப்பு நிறத்தில் இரத்தம் வெளியேறுவதைத் தடுக்கலாம். அதுவும் 3 மாதம் இப்படி உட்கொண்டு வந்தால், கருப்பையின் வலிமை அதிகரித்து, மாதவிடாய் பிரச்சனைகள் நீங்கும்.

வைத்தியம் #2
வெதுவெதுப்பான நீரில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து, தினமும் மூன்று வேளை குடிக்க வேண்டும். இப்படி செய்வதால் மாதவிடாய் காலத்தில் கெட்டியாக இரத்தம் வெளிவருவது தடுக்கப்படும்.

வைத்தியம் #3
மாதவிடாய் காலத்தில் கருப்பு நிறத்தில் இரத்தக்கசிவை சந்திக்கும் பெண்கள், தினமும் திராட்சை ஜூஸ் குடித்து வர, 3-4 மாதங்களில் இந்த பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.

வைத்தியம் #4
ஒரு கப் பாலில் 2-3 சிட்டிகை குங்குமப்பூ சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, தினமும் காலை மற்றும் இரவில் குடித்து வந்தால், கருப்பைச் சுவர் வலிமையாகி, கருப்பையில் உள்ள எஞ்சிய இரத்தம் வெளியேறிவிடும்.

வைத்தியம் #5
ஒரு கப் மாட்டுப் பாலில் 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி சாறு, 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, குடித்து வர கருப்பு நிறத்தில் இரத்தம் வெளிவருவது தடுக்கப்படும்.

வைத்தியம் #6
சோம்பு நீரை தினமும் 3 வேளை குடித்து வர வேண்டும். இதனால் கருப்பையின் சுவர் வலிமையடைந்து, மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

வைத்தியம் #7
இஞ்சி டீயை மாதவிடாய் காலத்தில் குடித்து வந்தால், வயிற்று வலி மற்றும் இதர மாதவிடாய் கால பிரச்சனைகள் நீங்கும். அதிலும் இஞ்சி சாற்றில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்தால், உடலில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு, மாதவிடாய் கால பிரச்சனைகள் அகலும்.



Click it and Unblock the Notifications