Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
இந்த சண்டே ஸ்பெஷல் சண்டேவா மாற செய்ய வேண்டியவை
சண்டே என்பது அனைவருக்குமே ஸ்பெஷலான நாள்தான். ஏனெனில் அன்றுதான் நாம் நமக்கான உலகத்தில் வாழ்வோம். உங்கள் சண்டேவை கூடுதல் சிறப்பாக மாற்ற சில குறிப்புகளை இங்கே பார்க்காலம்
சண்டே வராதே ஓய்வெடுக்கத்தான் என்பது உலகம் முழுவதும் உள்ள கருத்து. சொல்லப்போனால் அதுதான் உண்மையும்கூட. ஆனால் மற்றொரு கோணத்தில் பார்த்தால் அடுத்த வாரத்தை வெற்றிகரமாக தொடங்குவதற்கு தயாராக வேண்டிய நாளும் சண்டேதான். சண்டே என்பது கடந்த வார சோம்பல்களில் இருந்து விடுபடவும், அடுத்த வார வேலைக்கு தயராகவும் கார்ப்பரேட் கொடுத்த ஒரு நாள் அவ்வளவுதான்.

வேலையே இல்லாமல் இருந்தாலும் சண்டே அன்று ஓய்வெடுப்பது என்பது கூடுதல் சிறப்புதான். ஆனால் வெறும் ஓய்வோடு நிறுத்திவிடாமல் வரப்போகும் நாட்களுக்கு தேவைப்படும் சின்ன சின்ன வேலைகளை முடித்து விட்டால் அந்த வாரம் முழுவதும் நிம்மதியாக இருக்கலாம். இங்கே சண்டேவை ஸ்பெஷல் சண்டேவாகவும், உபயோகமான நாளாக மாற்றவும் செய்ய வேண்டியவற்றை பார்க்கலாம்.

தூக்கம்
சண்டே ஒருநாள்தான் ஓய்வு என்பதற்காக பாதி நாளை தூக்கத்திலியே கழித்து விடாதீர்கள். அதற்காக தூங்க வேண்டாம் என்று சொல்ல வரவில்லை. சனிக்கிழமை முழுவதும் விழித்திருந்து விட்டு சண்டே 12 மணிக்கு எழுவதற்கு பதிலாக சனிக்கிழமை இரவு சீக்கிரம் உறங்கி சண்டே கொஞ்சம் தாமதமாக எழுந்தால் பகல் பொழுதில் உங்கள் நாளை மகிழ்ச்சியாகவும், உபயோகமாகவும் செலவழிக்கலாம் அல்லவா?.

பிரிட்ஜை சுத்தப்படுத்தலாம்
இது ஒரு மிகவும் முக்கியமான பணியாகும். சென்ற வாரம் வாங்கிய பாலிலிருந்து பழங்கள் வரை உங்கள் பிரிட்ஜை அடைத்து கொண்டிருக்கும். இந்த வாரம் ஷாப்பிங் சென்று வந்தால் அந்த நேரத்தில் உட்கார்ந்து அதை செய்வதற்கு பதிலாக சண்டே காலையில் ஒரு சூப்பர் காபியை குடித்து விட்டு இந்த வேலையை செய்தால் அடுத்த வாரம் முழுவதும் பிரிட்ஜை பற்றி கவலைப்பட தேவையில்லை அல்லவா?இது உங்கள் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். அதுமட்டுமின்றி வாரம் முழுவதும் வேலை செய்யும் உங்கள் மனைவிக்கு சண்டே ஒருநாளாவது இதுபோன்ற உதவி செய்து ஓய்வு கொடுங்கள். இது உங்களின் மரியாதையையும் அவர்களிடம் உயர்த்தும்.

பர்ஸ் மற்றும் பேக்கை சுத்தப்படுத்துங்கள்
வாரம் முழுவதும் சேமித்து வைத்த பஸ் டிக்கட், ஹோட்டல் பில் என பல தேவியில்லாத பொருட்களை உங்கள் பர்ஸில் பொக்கிஷம் போல சேர்த்து வைத்திருப்பீர்கள். அவற்றையெல்லாம் முதலில் தூக்கி எறியுங்கள். பர்ஸை பர்ஸ் போல உபயோகிக்க பழகுங்கள்.

ஷாப்பிங்
வாரத்திற்கு தேவையான மளிகை பொருட்களை சண்டேவே வாங்கி வைத்து விடுவது ஆகச்சிறந்த புத்திசாலித்தனம். பால் மற்றும் காய்கறிகள் தவிர ஏனைய அனைத்து பொருட்களையும் வாங்கி வைத்துவிடுங்கள். முடிந்தால் மாத ஷாப்பிங்கையே ஒரே சண்டேயில் முடித்து விடுங்கள். இல்லையெனில் அடிக்கடி கடைக்கு ஓட வேண்டியிருக்கும்.

திங்கள் கிழமை உணவு
சண்டே தொடங்கும்போது இருக்கும் உற்சாகம் அது முடியும்போது இருக்காது. காரணம் அடுத்தநாள் முதல் மீண்டும் இயந்திரமாய் செயல்பட வேண்டும். இதில் முக்கிய கவலை காலையில் எழுந்து சமைப்பது. இதனை சமாளிக்க சண்டே இரவே ஏதாவது எளிதான உணவை சமைத்து வைத்துவிடுங்கள். திங்கள் கிழமையை டென்ஷன் இல்லாமல் வரவேற்க தயாராகுங்கள்.

மாலைக்குள் வீடு திரும்புங்கள்
எந்த வேலையாக இருந்தாலும் அவற்றை முடித்துக்கொண்டு மாலைக்குள் வீடு திரும்பி விடுங்கள். சண்டே மாலை என்பதை குடும்பத்திற்காக ஒதுக்க பழகி கொள்ளுங்கள். மனைவி, குழந்தைக்ளுட்டன் விளையாடுவது, செல்ல சண்டை போடுவது என அவர்களுக்காகவும் உங்கள் நேரத்தை ஒதுங்குகுங்கள். இல்லையெனில் நீங்கள் செல்லும் இடத்திற்கு அவர்களை அழைத்து செல்லுங்கள்.

உணவு
சண்டே வருவதே சாப்பிடத்தான் என்னும் எண்ணமும் பரவலாக உள்ளது. அதுவும் உண்மைதான். உங்களுக்கு பிடித்த உணவை பிடித்த அளவு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் சரிதான். ஆனால் அதற்காக இருக்கும் இடத்திற்கு உணவு வரவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். அன்று ஒருநாளாவது மனைவிக்கு சமயலறையிலிருந்து விடுதலை கொடுங்கள். அவர்களுடன் சேர்ந்து சமைக்க முயலுங்கள் உங்களுக்கு சமைக்க தெரியுமெனில் நீங்களே சமைத்து குடும்ப உறுப்பினர்களுக்கு பரிமாறுங்கள். இவை உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.

நண்பர்களை சந்தியுங்கள்
இதை சொல்லித்தான் செய்ய வேண்டுமென்றில்லை. சண்டே வந்தாலே நாள் முழுவதும் நண்பர்களுடன் செலவழித்து விட்டு சாப்பிட மட்டும் வீட்டுக்கு வரும் பழக்கமே இங்கு பலருக்கும் உள்ளது. சிலர் அன்றுகூட அலுவலக பணி என்று வீட்டிற்குள்ளேயே முடங்கி விடுவார்கள். இது இரண்டுமே தவறான பழக்கங்கள்தான். எனவே குடும்பத்தினருடன் இருப்பது போல நண்பர்களுடனும் நேரம் செலவிடுங்கள் " அளவாக ". அவர்களும் அவர்களின் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க வேண்டுமல்லவா?



Click it and Unblock the Notifications











