Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா? அப்படி இருந்தா உங்க உடம்புல நோய் எதிர்ப்பு சக்தி கம்மினு அர்த்தம
நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான காரணம் மற்றும் அதற்கான அறிகுறிகள் பற்றி இங்கே விளக்கப்பட்டுள்ளது.
நமது நோயெதிர்ப்பு மண்டலம் தான் மிக முக்கியமான ஒன்று. ஏனெனில் இது நம்மை நோக்கி வரும் வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை களை எதிர்த்து போராடக் கூடியது.

இதன் மூலம் தான் நமக்கு வரும் நோய்களை நாம் தடுக்க முடியும். சரியற்ற உணவுப் பழக்கம், மன அழுத்தம் போன்றவை நம் நோயெதிர்ப்பு சக்தியை குறைக்க கூடிய ஆற்றல் கொண்டுள்ளது.

எப்படி கண்டறிவது
நமது நோயெதிர்ப்பு மண்டலம் போர் வீரர்களைப் போல் செயல்படக் கூடியது. அந்நியக் கிருமிகள் உள்ளே நுழையும் போது அதை அழித்து நமது உடலை காப்பது தான் இதன் வேலை. இந்த மண்டலம் செல்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகள் இவற்றால் உருவான ஒரு பாதுகாப்பு கட்டமைப்பாகும்.
இந்த செல்கள் தான் வெள்ளை அணுக்கள் என்று அழைக்கப்படுகிறது. எந்த உறுப்பு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதோ அதை பாதுகாப்பது இதன் கடமை. இந்த வெள்ளை அணுக்கள் தைமஸ், மண்ணீரல் மற்றும் எலும்பு மஜ்ஜையில் அமைந்துள்ளது. இது லிம்போடிக் உறுப்பு என்று அழைக்கப்படுகிறது.
இந்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறையும் போது நோய் களின் தாக்கமும் அதிகமாக இருக்கும். இந்த நோயெதிர்ப்பு மண்டலம் வலுவிழந்து இருப்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம்.

சோர்வு
நீங்கள் காலையில் எழுந்திருக்கும் போதே மிகச் சோர்வாகவும் பலவீனமாகவும் தென்படுவதை சாதரணமாக விட்டு விடாதீர்கள். மேலும் வாந்தி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

தொடர்ச்சியாக தொற்று ஏற்படுதல்
சிறுநீரக தொற்று, வயிற்று பிரச்சினைகள், அழற்சி, சிவந்த பல் ஈறுகள், வயிற்று போக்கு போன்றவை உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் வலுவிழந்த தை குறிக்கிறது. அதனால் நோய்க்கு காரணமான வைரஸ், பாக்டீரியாக்களை அழிக்க முடியாமல் திண்டாடுகிறது என்று அர்த்தம்.

ப்ளூ, சளி மற்றும் தொண்டை புண்
ப்ளூ, சளித் தொல்லை மற்றும் தொண்டை புண் அடிக்கடி ஏற்பட்டால் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் வலுவிழந்து உள்ளது. எனவே உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது.

அழற்சிகள்
சில பேர்களுக்கு அடிக்கடி அழற்சி ஏற்படும். சுற்றுப்புற தூசிகள், மாசுக்கள் போன்றவை சரும அழற்சி, சுவாசப் பாதை அழற்சியை ஏற்படுத்தும். இதுவும் உங்கள் நோயெதிர்ப்பு சக்தி குறைந்திருப்பதை காட்டுகிறது.

காயங்கள் ஆற நாளாகுதல்
வெட்டு காயங்கள், சருமக் காயங்கள் ஆற நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்வது. இந்த நீண்ட நாட்கள் ஆகியும் காயங்களில் வலி, அழற்சி மற்றும் தொற்று ஏற்படுதல். இவ்வாறு இருந்தால் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் பாதிப்படைந்து உள்ளது என்று அர்த்தம்.

நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குவது எப்படி?
ஆரோக்கியமான உணவுப் பழக்கம்
ஆரோக்கியமான உணவுப் பழக்கம் ஆரோக்கியமான உடல் நலத்தை தரக் கூடியது. எனவே காய்கறிகள், புரோட்டீன், பழங்கள், சர்க்கரை குறைந்த உணவுகள் போன்றவற்றை எடுத்து கொள்வது, கொழுப்புகள் மற்றும் ஆல்கஹால் போன்றவற்றை தவிர்ப்பது போன்றவற்றை செய்யுங்கள்.
சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, பப்பாளி, திராட்சை, தக்காளி போன்ற பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

போதுமான தூக்கம்
போதுமான தூக்கத்தை தூங்குங்கள். இது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு ஓய்வு கொடுத்து நல்ல ஆற்றலுடன் செயல்பட உதவும். இன்ஸோமினியா போன்ற தூக்கமின்மை பிரச்சினை உங்க் நோயெதிர்ப்பு சக்தியை குறைத்து விடும்.

சுத்தமாக இருத்தல்
சாப்பிடுவதற்கு முன் கைகளை நன்றாக கழுவுதல், பிராணிகளை தொட்ட பிறகு கைகளை கழுவுவது, வேலைகள் செய்த பிறகு கைகளை எழுவது போன்ற சுத்தமான காரியங்களை செய்யுங்கள்.
காய்கறிகளை நன்றாக கழுவி விட்டு சமையுங்கள்.

மன அழுத்தத்தை சரியாக கையாளுங்கள்
மன அழுத்தம் மட்டுமே போதும் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை குறைக்க. நாள்பட்ட மன அழுத்தம் தீவிர பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும். நச்சுக்களை உடம்பில் சேர்த்து விடும். இது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை குறைத்து பல நோய்கள் வர காரணமாக்கி விடும்.
மேற்கண்ட முறைகளை பின்பற்றி உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications











