For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இயற்கை மரணம் நிகழ்ந்ததாக நீங்கள் கடைசியாக கேள்விப்பட்டது எப்போது?

இயற்கை மரணம் நிகழ்ந்ததாக நீங்கள் கடைசியாக கேள்விப்பட்டது எப்போது?

|

இயற்கை மரணம் என நான் கடைசியாக கேள்விப்பட்டது, சிறுவனாக இருந்த போது என் எனது தாத்தாவின் மரணம். 70 வயதிலும் அதிகாலை எழுந்து யோகா, உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை பின்பற்றி வந்தவர்.

ரேஷன் கடைக்கு சென்று கியூவில் மண்ணெண்ணெய் கேன் வைத்துவிட்டு, காலை உணவு சாப்பிட அமர்ந்தார். தட்டில் இட்லி வைக்கும் போது இருந்த உயிர், சாம்பார் ஊற்றும் போது பிரிந்துவிட்டது.

நீங்கள் உங்கள் வாழ்வில் கடைசியாக எப்போது இயற்கை மரணம் பற்றி கேள்விப்பட்டீர்கள் என நான் கேள்வி எழுப்பிய போது, பெரும்பாலானோர் கூறியது, அவர்களது தாத்தா காலத்தில். அதாவது 20 - 25 ஆண்டுகளுக்கு முன்னர். இயற்கை மரணம் என்பதும் ஓர் வரம் தான். அதை நாம் தொலைத்துவிட்டோமா?

திடீர் என மனதில் எழுந்த கேள்வி... பல வகையில் சிந்திக்க வைத்தது. நமது வாழ்வியல் மாற்றங்களில் நாம் இழந்தவற்றில் ஒன்று இயற்கை மரணம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

When You Heard About Natural Death Last Time?

When You Heard About Natural Death Last Time?
Story first published: Monday, August 7, 2017, 16:39 [IST]
Desktop Bottom Promotion