Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
இரவில் நல்ல நிம்மதியான தூக்கம் வேண்டுமா? அப்ப இத ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க...
இங்கு இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும் அற்புத நிவாரண மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.
இன்று பலரும் அவஸ்தைப்படும் ஓர் பிரச்சனை தான் தூக்கமின்மை. இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் இருப்பதால், மறுநாள் முழுவதும் சோர்வுடனேயே இருக்க நேரிடுகிறது.

இதிலிருந்து விடுபட பலரும் தூக்க மாத்திரைகளை எடுக்க முனைவார்கள். ஆனால் இப்படி தூக்க மாத்திரைகளை எடுத்தால், நாளடைவில் அதற்கு அடிமையாகிவிட நேரிடும். அதோடு பக்க விளைவுகளையும் சந்திக்கக்கூடும். ஆனால் இயற்கை வழிகளின் மூலம் தூக்கமின்மைக்கு தீர்வு கண்டால், நல்ல பலன் கிடைப்பதோடு, நிச்சயம் எந்த ஒரு பக்கவிளைவும் இருக்காது.
சரி, இப்போது தூக்கமின்மை பிரச்சனைக்கு தீர்வளிக்கும் அந்த இயற்கை நிவாரணியை எப்படி தயாரிப்பது என்று காண்போம்.

தேவையான பொருட்கள்:
தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்
தேன் - 1/4 ஸ்பூன்
கல் உப்பு - 1 சிட்டிகை

இம்மருந்தின் விளைவு:
இங்கு கொடுக்கப்பட்டுள்ள மருந்து கலவை மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலின் அளவைக் குறைத்து, தூக்கமின்மையைப் போக்கும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களைக் கொண்டு இரு வழிகளில் நிவாரணியைத் தயாரிக்கலாம்.

வழி #1
ஒரு பௌலில் தேங்காய் எண்ணெய், தேன் மற்றும் கல் உப்பு சேர்த்து நன்கு கலந்து, இரவில் படுக்கும் முன் உட்கொண்டு, நீரைக் குடிக்க வேண்டும்.

வழி #2
தேங்காய் எண்ணெய் மற்றும் தேனை தனித்தனியாக உட்கொண்டு, நீரைக் குடிக்க வேண்டும். பின் ஒரு கல் உப்பை வாயில் போட்டு சாப்பிட்டு, நீரைப் பருக வேண்டும்.

தேங்காய் எண்ணெயின் நன்மைகள்:
தேங்காய் எண்ணெயில் உள்ள அன்-சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உடலுக்கு ஆற்றலை வழங்கும். மேலும் இது தூக்க பிரச்சனைக்கு காரணமான இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கும்.

தேனின் நன்மைகள்:
தேன் மூளையின் செயல்பாட்டிற்கு தேவையான கல்லீரல் க்ளைகோஜனை தேக்கி வைக்கும். எப்போது கல்லீரல் க்ளைகோஜன் அளவு போதுமானதாக இல்லையோ, அப்போது மன அழுத்த ஹார்மோனின் அளவு அதிகரித்து, தூக்கத்தில் இடையூறை உண்டாக்கும்.

கல் உப்பின் நன்மைகள்:
கல் உப்பு மன அழுத்த ஹார்மோனின் அளவைக் குறைக்க உதவும். மேலும் இது இரவு முழுவதும் உடலுக்கு போதிய ஆற்றலை வழங்கும். இரத்தத்தில் சோடியத்தின் அளவு சீராக இருந்தால், மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோனின் அளவு குறைய ஆரம்பிக்கும்.



Click it and Unblock the Notifications











