Just In
- 1 hr ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 7 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 8 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 9 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
Don't Miss
- Sports கேமரா மேனை சிக்சரால் பதம் பார்த்த ரிஷப் பண்ட்.. விசயம் தெரிந்த உடன் பண்ட் செய்த நெகிழ்ச்சி சம்பவம்
- News தோசைக்கு ஏன் ‛தோசை’னு பெயர் வந்தது தெரியுமா? அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே! சுவாரசியம்
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஏன் மனிதர்கள் அக்குள் மற்றும் தொடை நடுவில் வளரும் முடிகளை அகற்ற கூடாது?
கண் இமைகள், புருவம், அக்குள், பிறப்புறுப்பு பகுதிகள் என மனிதர்களுக்கு சில இடங்களில் வளரும் முடிகள் மறைமுகமாக பாதுகாப்பாக இருக்கிறது என்பது தான் உண்மை.
மனிதர்கள் தோன்றிய காலத்தில், மற்ற விலங்குகள் போல மனிதர்களுக்கும் உடல் முழுக்க முடிகள் இருந்தன. காலப்போக்கில் வாழ்வியல் மற்றும் சுற்றுப்புற சூழல் மாற்றத்தால் முடி வளர்ச்சி குறைந்து. உடலின் சில பாகங்களில் மட்டுமே மனிதர்களுக்கு முடி வளர்கிறது.
கண் இமைகள், புருவம், அக்குள், பிறப்புறுப்பு பகுதிகள் என மனிதர்களுக்கு சில இடங்களில் வளரும் முடிகள் மறைமுகமாக பாதுகாப்பாக இருக்கிறது என்பது தான் உண்மை. ஆனால், சமீப காலமாக ஃபேஷன், அழகு என்ற பெயரில் நாம் மொத்தமாக முடிகளை அகற்றி விடுகிறோம்.
இனி, ஏன் மனிதர்கள் அக்குள் மற்றும் தொடை நடுவில் வளரும் முடிகள் அகற்ற கூடாது என்பது குறித்து பார்க்கலாம்...
என்ன காரணம்?
நமது உடலில் ஆங்காங்கே முடி வளர்வது சில காரனங்களுக்காக தான். உதாரணமாக, இமைகள் கண்களை தூசு படாமல் பாதுகாக்கிறது, புருவம், வியர்வை கண்களை பாதிக்காமல் இருக்க உதவுகிறது, மூக்கு மற்றும் காதுகளில் வளரும் முடி நுண்ணிய பொருட்கள் உடலுக்குள் புகாமல் இருக்க உதவுகிறது.
தலைமுடி!
தலைமுடி அதிக வெப்பம் மற்றும் குளிர் தலை மற்றும் மூளையை பாதிக்கலாம் இருக்க உதவுகிறது. ஒருவேளை வெப்பம், மற்றும் குளிர் நேரடியாக தலையில் தாக்கத்தை உண்டாக்கினால், மூளையிலும் தாக்கம் உண்டாகும். உடலில் வளரும் முடிகளும் இதே காரணத்திற்காக தான் வளர்கின்றன. பாதுகாப்பை அளிக்கின்றன.
MOST READ: இதெல்லாம் நியாயமா மக்களே, பெத்தவங்க பார்த்தா என்ன நினைப்பாங்க...? - # Funny Photos
பூரித்து போகும் போது முடி எழுதல்!
சில சமயம் நீங்கள் பூரிப்படையும் போது முடிகள், எழும்பி நிற்கும். இதற்கு காரணம். ஒவ்வொரு தனி முடியும், தசையுடன் சேர்ந்து, தொடர்புக் கொண்டு இருக்கிறது.
அக்குள், பிறப்புறுப்பு பகுதியில் முடி அவசியம் | காரணம் #1
முதல் காரணம், அக்குள் மற்றும் பிறப்புறுப்பு பகுதியில் அதிக வெப்பம் ஆதல் சரியானதல்ல. இப்பகுதிகளில் வளரும் முடி, அதிக வெப்பம் ஆகாமல் பாதுகாக்கின்றன.
அக்குள், பிறப்புறுப்பு பகுதியில் முடி அவசியம் | காரணம் #2
இரண்டாம் காரணம், நடக்கும் போது, ஓடும் போது, உடற்பயிற்சி செய்யும் போது ஏற்படும் உராய்வை இப்பகுதிகளில் வளரும் முடிகள் குறைக்க உதவுகின்றன.
அக்குள், பிறப்புறுப்பு பகுதியில் முடி அவசியம் | காரணம் #3
மூன்றாம் காரணம், அக்குள் மற்றும் பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடிகள், உடலுறவு உணர்சிகளை தூண்ட உதவுகின்றன.
மேலும், தாடி, அக்குள், பிறப்புறுப்பு பகுதில் வளரும் முடிகளில் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கின்றன. நீங்கள் குளித்து சுத்தமாக இருந்தால் போதுமானது. இவ்விடங்களில் முடிகளை அகற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
உண்மைகள்!
* சராசரியாக ஒரு மனிதரின் தலையில் மட்டும் 1,30,000 முடிகள் இருக்கின்றன.
* இதில் 93% தற்போது வளர்ந்து கொண்டிருக்கும்.
* மாதத்திற்கு 1 சென்டிமீட்டர் அளவு முடி சராசரியாக வளர்கிறது.
* ஒருநாளுக்கு சராசரியாக உங்களுக்கு நூறு முடிகள் வரை உதிரும்.
* ஆராய்ச்சியாளர்களுக்கு உங்களை பற்றி அறிய வெறும் மூன்று சென்டிமீட்டர் முடி போதுமானது.
* முடிகளின் வாழ்நாள் சராசரியாக ஆண்களுக்கு இரண்டு ஆண்டுகளும், பெண்களுக்கு நான்கு ஆண்டுகளும் ஆகும்.