Just In
- 9 min ago இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்க உண்மையான பயத்தை சொல்றோம்..
- 1 hr ago குறைபிரசவத்துல பிறந்த குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் இந்த ஆரோக்கிய பிரச்சினைகள் வர வாய்ப்பிருக்காம் தெரியுமா?
- 2 hrs ago ரமலான் நோன்பு முடிக்கும் போது சிக்கனை வெச்சு இப்படி ஒரு டைம் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்டியா இருக்கும்...
- 2 hrs ago இரண்டு உலகப்போர்களிலும் தாக்கப்பட்ட ஒரே இந்திய நகரம் மெட்ராஸ்தானாம்...ஏன் போட்டிப்போட்டு தாக்குனாங்க தெரியுமா?
Don't Miss
- News துளசி வாசம் மாறும்.. ஆனால் தவசி! அதிமுக கூட்டத்தில் பாமகவை சீண்டிய பிரேமலதா.. எடப்பாடிக்கு புகழாரம்
- Movies Thalaiva 171: அடுத்த மாதம் வெளியாகும் தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர்.. சூட்டிங் எப்ப தெரியுமா?
- Technology ஏர்டெல் VS ஜியோ: ரூ.49 ரீசார்ஜ் திட்டம்.. அதிக சலுகைகளை வழங்கும் நிறுவனம் எது?
- Sports உருட்டி எடுத்த கேஎல் ராகுல்.. சந்தீப் சர்மாவால் மாறிய ஆட்டம்.. சொந்த மண்ணில் சாதித்த ராஜஸ்தான்!
- Education ஃபயர்மேன் பணியிடத்தில் வேலை செய்ய அழைக்கிறது கடற்படை...!!
- Travel தென் தமிழகத்தின் சொர்க்கத்துக்கு ‘விசிட்’ பண்ண மறக்காதீங்க...!
- Finance உலகின் மிகப்பெரிய ஆன்மிக தலமாக உருவெடுக்கும் அயோத்தி.. சொல்வது யார் தெரியுமா..?
- Automobiles குறைந்த விலையில் மைலேஜை வாரி வழங்கும் 6 சிஎன்ஜி கார்கள்!! மாருதி கார் தான் நிறைய இருக்கு!
மூன்று மாதம் கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும் என்பது தெரியுமா?
தாளிக்கும் போது சேர்க்கப்படும் ஓர் பொருள் தான் கறிவேப்பிலை. இந்த கறிவேப்பிலையை பலரும் சாப்பிடும் போது தூக்கி எறிந்துவிடுவார்கள். ஆனால் கறிவேப்பிலையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.
தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள்!!!
கறிவேப்பிலையைக் கொண்டு நம் உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். அதிலும் உடல் பருமனைக் குறைக்க, நீரிழிவைத் தடுக்க, மலச்சிக்கலை போக்க, செரிமான பிரச்சனைகளைத் தடுக்க என பலவற்றை கறிவேப்பிலையைக் கொண்டு சரிசெய்லாம்.
முடி வளர்ச்சிக்கு கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்த வேண்டும்?
ஆனால் அதற்கு அந்த கறிவேப்பிலையை பிரச்சனைகளுக்கு ஏற்றவாறு பயன்படுத்த வேண்டும். இங்கு உடலில் ஏற்படும் பிரச்சனைகளைக் குணப்படுத்த கறிவேப்பிலையை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
இரத்த சோகை
நாள்பட்ட இரத்த சோகை கொண்டவர்கள், உலர்ந்த கறிவேப்பிலையை பொடி செய்து சுடுநீர் அல்லது பாலுடன் சேர்த்து கலந்து பருகி வர, விரைவில் சரியாகும்.
கண்புரை
வயதான காலத்தில் கறிவேப்பிலையை சாறு எடுத்து, அந்த சாற்றினைப் பருகி வந்தால், அது பார்வை கோளாறுகளைத் தடுப்பதோடு, முதுமையில் ஏற்படும் கண் புரை நோயின் தாக்கத்தையும் தடுக்கும்.
மலச்சிக்கல்
மலச்சிக்கலால் பல நாட்களாக அவஸ்தைப்பட்டு வருகிறீர்களா? அப்படியெனில் 4-5 நாட்கள் சிறிது கறிவேப்பிலையை வெயில் நிழலில் உலர்த்தி, பொடி செய்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியுடன், தேன் கலந்து சாப்பிட வேண்டும். இப்படி தினமும் 2-3 முறை உட்கொண்டு வந்தால், மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
வயிற்றுப்போக்கு
15-20 கறிவேப்பிலை இலைகளை அரைத்து சாறு எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால், வயிற்றுப்போக்கு உடனடியாக நின்றுவிடும்.
உடல் பருமன்
உடல் பருமனால் கஷ்டப்படுபவர்கள் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை இலைகளை உட்கொண்டு வர வேண்டும். இதனால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உடல் பருமன் குறைவதோடு, நீரிழிவும் தடுக்கப்படும். முக்கியமாக இம்முறையை 3 மாதம் தொடர்ந்து செய்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
வயிற்றுக்கடுப்பு
வயிற்றுப்போக்குடன் இரத்தம் மற்றும் சளி வெளியேறும் நிலையைத் தான் வயிற்றுக்கடுப்பு என்று சொல்வார்கள். இந்த பிரச்சனைக்கு வீட்டிலேயே தீர்வு காண, தினமும் 8-10 கறிவேப்பிலை இலைகளை பச்சையாக உட்கொள்ள வேண்டும்.
காலைச் சோர்வு
கர்ப்பிணிகளுக்குத் தான் காலைச் சோர்வு ஏற்படும். இதனைத் தவிர்க்க 10 கறிவேப்பிலை இலைகளை அரைத்து சாறு எடுத்து, அத்துடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் கலந்து பருக வேண்டும்.
குமட்டல் மற்றும் வாந்தி
மோருடன் கறிவேப்பிலையை அரைத்து கலந்து குடித்து வர, குமட்டல் மற்றும் வாந்தியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
செரிமான கோளாறு
செரிமான கோளாறுகளால் அவஸ்தைப்படுபவர்கள், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் புதினா போன்றவற்றை அரைத்து சாறு எடுத்து பருக உடனே செரிமான பிரச்சனைகள் குணமாகும்.
பசியின்மை மற்றும் சுவையின்மை
உங்களுக்கு சரியாக பசி எடுப்பதில்லையா? சுவை எதுவும் தெரியவில்லையா? அப்படியெனில் அதனை சரிசெய்ய, மோரில் கறிவேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து சேர்த்து, அத்துடன் சீரகப் பொடி, ப்ளாக் சால்ட் சேர்த்து கலந்து பருக வேண்டும்.
சிறுநீரக பிரச்சனைகள்
கறிவேப்பிலை ஜூஸ் உடன் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து பருகி வந்தால், சிறுநீரக சம்பந்தமான பிரச்சனைகள் குணமாகும்.
பூச்சிக்கடி
பூச்சிக்கடியைக் குணப்படுத்த கறிவேப்பிலை மரத்தில் உள்ள பழங்களை அரைத்து அத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ விரைவில் சரியாகும்.